Friday, February 28, 2020

வெற்றிலை பாக்கு பயன்படுத்தும் முறை

வெற்றிலை பாக்கு பயன்படுத்தும் முறை




தாம்பூலத்தை உபயோகிக்கும் முன் வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது.ஏன் என்றால் பாக்கு துவர்ப்புத் தன்மை உடையது. இத்தன்மையால் உமிழ்நீர் சுரக்காது. எனவே ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும்.

அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும்,ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும்.

காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும்.

பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடை நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.

Wednesday, February 26, 2020

வெற்றிலைப் பெட்டி மாத்திரைபெட்டியாக மாறிபோனது

வெற்றிலைப் பெட்டி  மாத்திரைபெட்டியாக மாறிபோனது


பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை கோல்கேட் பற்பசை கம்பெனி கடுமையாக விளம்பரம் செய்தது

 பற்கள் வெள்ளையாக இருந்தால் தான் சமுதாயம் மதிக்கும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள் 
அதன் பாதிப்பு வெற்றிலைக்கு விடை கொடுத்தது

 நமது மூதாதையர்களின் பற்கள் யாருக்கும் வெண்மையான பற்கள் இல்லை அனைவரும் வெற்றிலை போட கூடியவர்களாக இருந்தார்கள் இன்று நம்மை போன்று பெட்டி பெட்டியாக மாத்திரையை பயன்படுத்தியவர்கள் அல்ல அவர்கள் 

ஏனென்றால் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தில் தீர்வு இருந்தது நல்ல ஜீரண தன்மையை வெற்றிலை ஏற்படுத்தியது முதுமையில் ஏற்படக்கூடிய சுண்ணாம்புச்சத்து இழப்பை வெற்றிலை பாக்கில் உள்ள சுண்ணாம்பு ஈடு செய்தது எந்த சிக்கலான உணவை சாப்பிட்டாலும் அதை ஜீரணமாகும் தன்மை வெற்றிலை என்னும் காரத்தன்மையுள்ள பொருளிலும் பாக்கு என்னும் துவர்ப்பு தன்மை உள்ள பொருளிலும் சுண்ணாம்பு என்னும் எரிப்பு தன்மை உள்ள பொருளிலும் கலந்து இருந்தது 

என்று தமிழர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை ஆங்கில மருத்துவர்களின்  பேச்சைக்கேட்டு கை விட்டார்களோ அன்றே இவர்களுக்கு பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தது சர்க்கரை நோய் மிக அதிகமாக பரவியதற்க்கு வெற்றிலை போடும் பழக்கத்தை கை விட்டதும் ஒரு காரணமாகும்

  இந்த வெற்றிலை போடும் நல்ல பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் ஆங்கில மருத்துவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் காரணம் இந்த பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வருமானமே கிடைக்காது என்பதுதான் உண்மை

 தற்போதைய நிலைமை என்ன தெரியுமா நாம் வெற்றிலை போடலாம் என நினைத்தாலும் கூட நகர்ப்புறங்களில் கிடைப்பதில்லை அந்த அளவிற்கு வெற்றிலையை ஒழித்துக் கட்டி விட்டனர்.

 இப்போது மருந்து கடைகளில் அமோக வியாபாரம்.

Tuesday, February 25, 2020

தொப்புள் கொடி| கண்பார்வை

தொப்புள் கொடி| கண்பார்வை





தொப்புளில் எண்ணை போடுங்கள்!

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும். 

காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

அவசியம் பகிருங்கள்.

Wednesday, February 19, 2020

சூடான தேங்காய் சாறு

சூடான தேங்காய் சாறு 


பீஜிங் பொது மருத்துவமனை பேராசிரியர் சென் ஹியூ சென் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 இந்த கடிதச் செய்தியை பெறுகிற ஒவ்வொருவரும் பத்து பேருக்கு அனுப்பினால் நிச்சயம் ஒருவரது உயிராவது காப்பாற்றப்படும் என்று உறுதி கூறுகிறார்.


    🥥🥥 சூடான தேங்காய் சாறு உங்கள் வாழ்நாளைக் காக்க முடியும்.

🥥🥥 சூடான தேங்காய் சாறு புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

🥥🥥2அல்லது3 தேங்காய்ச் சில்லுகளை ஒரு கோப்பையில் போட்டு ஒரு சூடான தண்ணீர் ஊற்றவும்.அது ஆல்கலின் நீராக மாறும்.தினமும் இந்நீரை அருந்தினால் அனைவருக்கும் நல்லது.

🥥🥥சூடான தேங்காய் சாறு புற்றுநோய் எதிர்ப்பு பொருளை வெளியிடுகிறது. இது தான் மருத்துவ துறையில் புற்றுநோய்க்கு எதிரான சமீபத்திய முன்னேற்றம்.

🥥🥥சூடான தேங்காய் சாறு நீர்க்கட்டிகளிலும் ,கட்டிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இது அனைத்து வகை புற்றுநோய்களுக்கும்‌ தீர்வு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

🥥🥥இந்த தேங்காய் சாறு சிகிச்சை முறை வீரியமிக்க செல்களை மட்டும் அழிக்கிறது. ஆரோக்கியமான செல்களை பாதிக்காது.

மேலும் தேங்காய்ச் சாற்றிலுள்ள அமினோ அமிலமும் தேங்காய் பாலிபினாலும் சேர்ந்து இரத்த அழுத்தத்தை சீர்படுத்த முடியும்.இரத்தம் உறைவதைத்  தடுக்க முடியும். இரத்த ஓட்டத்தை சரிபடுத்துகிறது. மேலும் இரத்தக் கட்டிகளை குறைக்கிறது.

🧚🏼‍♂இதை வாசித்த பின்பு  குடும்ப நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

நன்றி

"சோற்றுக்கற்றாழை"|"சித்த மருத்துவம்"

"சோற்றுக்கற்றாழை"|"சித்த மருத்துவம்"




1. சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

9.. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

Tuesday, February 18, 2020

பறவைகள் ஏன் முக்கியம்?

பறவைகள் ஏன் முக்கியம்?


1, பறவைகள் மகரந்த சேர்க்கை செய்து தாவரங்கள் பெருகச் செய்கின்றன.

2,பயிர்களை அரித்து நாசம் செய்யும் பூச்சிகளை தின்று பயிர்களைக் காக்கின்றன.

3, விதைகளை உண்டு எச்சத்தின் வழியே வறண்ட நிலங்களிலும் மரங்களை மலர்த்து கின்றன.

4,வேட்டையாடும் பறவைகளால் சிற்றுயிர்களின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கின்றன.

5, இறந்ததை உண்ணும் பறவைகளால் இயற்கை தூய்மை செய்யப்பட்டு தொற்றுக்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

இதன் பொருட்டு நாம் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்!

நாகணவாய் (மைனா) இல்லாது போனால் வெட்டுக்கிளிகள் பெருகும்.

ஆந்தைகள் அழிந்தால் எலிகளுக்கு கொண்டாட்டம்.

கருச்சாண் குருவி காணாமல் போனால் பூச்சிகளின் ஆட்சி தொடங்கிவிடும் .

பறவைகளை,
ரத்தத்தின் ரத்தமாய், உடன் பிறப்பாய், தோழமையாய் பாவித்து தான் பாரதி "காக்கை குருவி எங்கள் சாதி " என்று பாடியிருப்பார் போலும்...

மனிதர்கள்,
கிளிப்பேச்சு கேட்கவும்
குயிலிசையில் கிறங்கவும்

மயிலசைவில் மயக்கவும் இயற்கை பறவைகளைப் படைக்கவில்லை!

பறவைகளுக்கும், தாவரங்களுக்குமிடையே ஓர் நுட்பமான உணவுச்சங்கிலி ஊடாடுவதை உணர்வதும், உணர்த்துவதுமே "சூழலியல் "

பறவைகள் உண்டு எச்சத்தின் வழியே வெளியேறும் விதைகள்தாம் முளைக்கும். பறவைகள் அழிந்தால் தாவரங்களும் அழியும்!

மனிதர்களால் மரங்களை நட்டு வளர்க்க முடியும் மகரந்த சேர்க்கை செய்ய முடியாது

பூஞ்சை, புல், பூண்டு, செடி, மரம் என்று தாவரத்தொகுதியின் வளர்ச்சிக்கு பங்களிப்பவை பறவைகள்.

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகள் வாழ்ந்து விடும். பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது " அதனால் 

பசுமையைப் போல பறவைகளையும் பரவச் செய்வோம்

*குளிரூட்டப்பட்ட அறைகளை விடவும் ... தென்றல் உலாவும் தெருக்களை நமது குழந்தைகளுக்கு விட்டு வைப்போம்

Monday, February 17, 2020

உங்கள நெறிப்படுத்த ஒரு கதை சொல்லட்டுமா Sir

உங்கள நெறிப்படுத்த ஒரு கதை சொல்லட்டுமா Sir



ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்.... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது.

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

ஆனால், நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.

ஆறு அறிவு மனிதர்களுக்கு ஓர் அறிவு எலுமிச்சையின் பணிவான வணக்கம்

ஆறு அறிவு மனிதர்களுக்கு ஓர் அறிவு எலுமிச்சையின் பணிவான வணக்கம் !


நான் தான் எலுமிச்சம் பழம் பேசுகிறேன் !!

மனிதர்களாகிய உங்கள் உடல் நலனைப் பல வழிகளிலும் என்னால் காப்பாற்ற முடியும் நீங்கள் என்னைச் சாப்பிடுவதன் மூலம்...

ஜீரண சக்தியைக் கூட்டுவேன்!
உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுவேன்!
உங்கள் ரத்தத்தை சுத்தம் செய்து தருவேன்!
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி இருமல் தொண்டை வலி உள்ளிட்ட குறைபாடுகளை எளிதில் நீக்குவேன்.

உடலில் பித்த நீரை சுரக்க வைத்து மனிதர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையை விரைவில்  குணப்படுத்துவேன்..!
உங்கள் தோலுக்கு நல்ல பொலிவையும் அழகையும் மீட்டுத் தருவேன் !
மூலநோய் காரணமாக வரும் ரத்தக் கசிவை தடுத்து நிறுத்துவேன்..!
நுரையீரல் சீராக இயங்கி நீங்கள் எளிதாக சுவாசிக்க நான் பெரிதும் பயன்படுவேன்..!

அதேபோல் உங்கள் ரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்
உடலில் பலச்சிக்கலுக்கு காரணமான மலச்சிக்கலை என்னால் எளிதில் நீக்க முடியும் ..!
சாதரணமாக நீங்கள் உண்ணும்  காய்கறிகள் (சாலட்) செய்யும் போது சில துளிகள் என்னைப் பிழிந்து சாப்பிட்டால் அந்தக் காய்கறிகளின் இயல்பான சத்துக்களையும் சுவைுயையும் கூட நான் கூட்டிவிடுவேன் !

சுருக்கமாக சொல்வதானால் நான் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்க வேண்டியவன்,  பூஜையறையில் இல்லை ..!!  

நான் மனிதர்களின் விலையில்லா மருத்துவம் !!  
காசில்லா மருத்துவர் !!  உங்களது அன்பைப் பெருக்கும் ஆரோக்கியம் தான் நான் !!

மனிதர்களாகிய நீங்கள் தயவுசெய்து என் பிறப்பை அசிங்கப்படுத்த வேண்டாம் !! 

எனக்கு எந்தவிதமான தெய்வீக சக்தியோ மாய மந்திரம் பில்லி சூனியம் செய்யும் முட்டாள்த்தனமான ஆற்றல் எதுவும் என்னிடம் இல்லை !! 

உங்கள் எல்லா வகையான வாகனங்களையும் எரிபொருள் மூலம் தான் இயக்க முடியும்,  என்னை வாகனத்தின் முன் கட்டி விடுவதால் உங்களுக்கு மிஞ்சுவது முட்டாள்த்தனம் மட்டுமே!!

நம்புங்கள் மனிதர்களே !! இந்தியாவின் பாதுகாப்பிற்காக மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் ரஃபேல் விமானத்திற்கும் வெறும்  5 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் சாதாரண எலுமிச்சம் பழத்திற்கும் எனக்கும் சிறிதும் தொடர்பில்லை...!!

நன்றி....  நன்றி.... 

அன்புடன்
ஓர் அறிவு எலுமிச்சம்பழம்!


பகிர்வு

🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

நடப்பு நிகழ்வுகள் : இந்தியாவின் மிகப்பெரிய காற்று தர கண்காணிப்பு வலையமைப்பு எங்கு நிறுவப்பட உள்ளது? GROUP-1&2 - 2020

நடப்பு நிகழ்வுகள் : இந்தியாவின் மிகப்பெரிய காற்று தர கண்காணிப்பு வலையமைப்பு எங்கு நிறுவப்பட உள்ளது?
GROUP-1&2 - 2020!!


2020 பிப்ரவரி - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்!!

1. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

அஜய் படேல் 

2. 20-வது 'ஹுனார் ஹாட்" (HUNNER  HAAT) எனும் கலைப் பொருட்கள் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?

புது தில்லி

3. CLIMFISHCON-2020 என்ற பெயரில் சர்வதேச காலநிலை மாற்றம் மற்றும் கடல் சுகாதார மாநாடு எங்கு நடைபெற்றது?

கேரளா (கொச்சின்)

4. இந்தியாவின் மிகப்பெரிய காற்று தர கண்காணிப்பு வலையமைப்பு (Air quality monitoring network) எங்கு நிறுவப்பட உள்ளது?

மும்பை

5. எந்த இரு நாடுகளுக்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது?

இந்தியா மற்றும் இலங்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உட்பட பல்வேறு தலைப்புகளின்கீழ், 2019 நடப்பு நிகழ்வுகள் உங்களுக்காக நமது வலைப்பூவில்...

6. எந்த இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த மீன்வள மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது?


7. உலக வானொலி தினம் ஆண்டுதோறும் எப்போது கொண்டாடப்படுகிறது?

பிப்ரவரி 13

8.  The Thin Mind ஆயி எனும் நூலின் ஆசிரியர் யார்?

தர்மேந்திர ராய்

9. ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் (National Institute of Financial Management)  பெயரை --------------- எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அருண்ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (Arun Jaitley National Institute of Financial Management)

10. 23-வது தேசிய மின்னாளுமை மாநாடு எங்கு நடைபெற்றது?

மும்பை



 அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

Saturday, February 15, 2020

சுவாசக் கணக்கு போடுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்

சுவாசக் கணக்கு போடுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். 

இது ஒரு வங்கியில் பணம் சேமிப்பது போல. வங்கியிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் நம்முடைய மூச்சை விரைவாக செலவழித்தால் நாம் உயிர் வாழும் ஆண்டுகளும் குறையும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். 

சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். 

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். 

சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். 

பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை.

சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். 

சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம்.

ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது.

இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.

நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது.

அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது.

இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும்.

இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.

செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. 

அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.

உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும். 

வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.
!
பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது.

சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.

எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.

செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.

நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.

காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்.

ஆரோக்கியமான நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7100 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை. கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்.

எனெனில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம்.

அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான்.

மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது.

பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது.

ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது.

பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும்...

சித்தர்களின் அருளால்
(சிவசம்போ)

Wednesday, February 12, 2020

உலர் அத்திப்பழத்தின் மகிமை தெரியாத சிலர்

உலர் அத்திப்பழத்தின் மகிமை தெரியாத சிலர்




அத்திப்பழத்தினை உலரவைத்து, ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் கோர்க்கப்பட்டு, சில கடைகளில் விற்கப்படும்.

சிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும். 

ஏனென்றால் இதனுடைய சுவையும், பயனும் அறியாத காரணத்தால் தான். 

உலர் அத்திப்பழத்தின் பயனை தெரிந்து கொண்டால் இதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்துவிடும்.

இதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கும். 

பலன்களும் அதிகமாக தரும். 

நாட்டுமருந்து கடை அல்லது டிரைஃபுட் பொருட்கள் விற்கும் கடையில் இது கிடைக்கும். 

இந்த உலர் அத்திப்பழத்தின் பயனை பற்றி பார்ப்போமா.

அத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம். 

இது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது. 

தினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ஏற்படும் பயன்கள்.

இதயத்திற்கு
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது. 

ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும்.

இதயம் ஆரோக்கியமாகும். இதற்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.

புற்றுநோயை தடுக்கும்.

புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.

நம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எலும்புகள் வலுவாக
தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது. 

ஒரு அத்திப்பழத்தில் 3% கால்சியம் உள்ளது.

நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது. 

இதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.

Monday, February 10, 2020

சில முக்கிய மருத்துவ குறிப்புகள்...

சில முக்கிய மருத்துவ குறிப்புகள்...



தீராத விக்கலை நிறுத்த…

1. ஒரு 30 வினாடிகள்…
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…
நின்று போகும் தீராத விக்கல்!


ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!


கொட்டாவியை நிறுத்த…

கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்…
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்…
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!


உடல் துர் நாற்றத்தைப்போக்க…

குளிக்கும் போது…
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்…
அவ்வளவு தான்…
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!


வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.


தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.


வேனல் கட்டி தொல்லையா?

வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.


தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!


முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்


கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.


சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.


முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.


வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். 

கருகருவென முடி வளரத்தொடங்கும்


மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.


நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.


சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.


சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.


புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். 


இருமலை போக்கும்.
சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.


2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.


சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.


ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் & உலக குடை தினம்

ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ்&உலக குடை தினம் 



☔அனைவருக்கும் இன்று குடையை பரிசாக அளியுங்கள்... வரலாறு..!!☔

முத்தான சிந்தனை துளிகள்.

அறிவுரையினால் புரிந்து கொள்வதை விட அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்பவரே அறிவாலும், மனதாலும் பலசாலியாகின்றார்கள்.

உலக குடை தினம்

🌂 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

குடை, நம்மை சூரியனின் கதிர்வீச்சு மற்றும் மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக பயன்படுகிறது.

🌂 இந்த நாளில் உலகின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பான குடையை போற்றுவதற்காக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய, கலை நயமிக்க குடைகளை பரிசளிக்கிறார்கள்.

ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ்

💉 உயிரியலில் மிகச் சிறப்பாக பங்காற்றிய ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் (JOHN FRANKLIN ENDERS) 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

💉 இவர் பாக்டீரியாக்களின் வீரியத்தன்மை மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியின் ஆற்றல் குறித்து சில காரணிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். அதன்பிறகு தன் குழுவினருடன் இணைந்து பொன்னுக்கு வீங்கி அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைக் குணப்படுத்தும் நோய் எதிர்ப்புசக்தி மருந்தையும் கண்டறிந்தார்.

💉 போலியோ தடுப்பு மருந்து தயாரிப்புக்கு காரணமாக அமைந்த புதிய, ஆபத்து இல்லாத முறையிலான போலியோமையெலிட்டிஸ் (poliomelitties) வைரஸ்கள் உற்பத்திக்கான ஆய்விற்கு டி.ஹெச்.வெல்லர் மற்றும் எஃப்.சி.ராபின்ஸ் இருவருடன் இணைந்து இவருக்கு 1954ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

💉 இவர்களது ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த ஆராய்ச்சி முறை, போலியோ மருந்து தயாரிப்புக்கு மட்டுமல்லாமல், பிற வைரஸ்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.

💉 வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நவீன தடுப்பு மருந்துகளின் தந்தை ஜான் பிராங்க்ளின் எண்டர்ஸ் 1985ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
🌄 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார்.

♗ 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி IBM சதுரங்கக் கணினி 'DEEP BLUE", உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.

Friday, February 7, 2020

Carona குறித்து இந்தியாவில் நாம் அதிகம் பயப்பட தேவையில்லை....

Carona குறித்துஇந்தியாவில் நாம்அதிகம் பயப்பட தேவையில்லை...



நம் கலாசாரம்நமக்கு பாதுகாப்பு.


டாக்டர் நண்பர் ஒருவரின் பதிவு....


கரோனா வைரஸ்
கடந்த 10 நாட்களாக 
சீனாவில் கரோனா வைரஸ்
தாக்கத்தைப்பற்றியே அனைத்து
ஊடகங்களிலும் மிரட்டலுடன் 
செய்தியாக வருகிறது..

பல ஊடகங்கள் தங்களின்
T R P அதிகரிக்கவேண்டும் 
என்பதற்காக இந்தியாவில் 
இந்த வைரஸ் நோய் வரவேண்டும் என்பதுபோல் தான் செய்திகளை
வெளியிடுகின்றனர்!

உண்மையில் அவர்களின் 
எண்ணம் பலிக்காது..
இதற்கு பல காரணங்கள் உள்ளன!

1)கோடை காலம்...

அடுத்து வரும் கோடை காலம்
நமக்கு மிகவும் பாதுகாப்பானது
எந்தவித வைரஸ் மற்றும் தொற்றுநோய்
கிருமிகளால் நமது கடும் வெப்பத்திற்கு
முன் தாக்குப்பிடிக்க முடியாது..

2)உணவு முறை...

சீன மக்களைப்போல் கண்ட கண்ட
உயிரினங்களையும் அதுவும் 
அரை வேக்காட்டுடன் உண்ணும்
பழக்கம் இந்தியர்களுக்கு இல்லை!

பெரும்பாண்மையாக சைவ உணவு
சாப்பிடுவது நமக்கு பலம்
அசைவம் சாப்பிடுபவர்கள் கூட
நன்கு வேக வைக்கப்பட்ட அசைவ
உணவுகளையே உண்கின்றனர்
அதனால் தான் முன்பு தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய பறவைக்காய்ச்சல்
கூட நம்மை அதிகமாக தாக்கவில்லை!

3)மரியாதை தருவது...

பொது இடத்தில் மற்றவர்களை
சந்திக்கும் போது
கை கொடுப்பதை தவிர்த்து
வணக்கம் கூறுவதால்
கைகொடுப்பதால் பரவுகின்ற
கிருமிகள் பரவுவதில்லை!

4)இறுதி சடங்குகள்....

இறந்தவர்களின் வாய் மூக்கு 
மற்றும் கழிவு துவாரங்கள் வழியாக கிருமிகள் வெளியேறாமல் இருக்க
மூக்கு வாய் அடைத்து கால்விரல்கள் போன்றவற்றை கட்டுப்போடுவதால்
இறந்தவர்களின் உடலிலிருந்து
கிருமிகள் வெளியேறுவதில்லை.

அதேபோல் இறந்தவர்களின் உடல் 
மீது போர்த்தப்படும் கோடித்துணி
மீது கிருமிநாசினியான மஞ்சள் 
அறைத்து இறைப்பதால் சவத்தை
எடுப்பவர்களின் பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்படுகிறது!

இறப்புக்கு சென்று வந்தவர்கள் 
குளித்தபிறகுதான் வீட்டிற்க்குள்
செல்வது சம்பிரதாயம் இதனால்
கிருமிகள் எதுவும் வீட்டிலுள்ள
வயதானவர்கள் மற்றும் 
குழந்தைகளுக்கு பரவுவதற்கு
வாய்ப்பில்லை!

5)ஆப்ரிக்காவைத்தாக்கிய 
எபோலா வைரஸ் 
ஆசியாவின் பல பகுதிகளை
தாக்கிய பறவைக்காய்ச்சல் 
போன்றவை இந்தியாவை 
தாக்காததற்கு காரணம் 
பாரம்பரிய தற்காப்பு முறைகளை
சடங்குகளாக வைத்திருப்பதே
காரணம்.

6)தடுப்பு முறை...

நோய் வந்தபின் மருத்துவமணைக்கு
ஓடுவதை விட நோய் எதிர்ப்பு
சக்தியை கூட்டுவதற்கான 
ஏராளமான மூலிகைகள் மற்றும்
சித்த வைத்திய முறைகள்
நமக்கு ஏராளமாக உள்ளன!
நிலவேம்பு கசாயம், 
பப்பாளி இலை கசாயம்,
இன்னும் ஏராளமான கசாயங்களை
அருந்தியதால் தான் கடந்தமுறை 
பல இடங்களில் டெங்கு முதலான காய்ச்சல்களை கட்டுக்குள் வைத்துள்ளது!

7)தற்காப்பு முறை....

நோயினை ஊடகங்களில் 
பார்த்து அதிகமாக பயப்படுவதோ கவலைப்படுவதோ அவசியமில்லை!
பாதிப்பு உள்ள தேசங்களுக்கோ
அந்த நாட்டு மக்களுடன் சேர்ந்து
பயணிப்பதையோ சில காலத்திற்கு
தவிர்க்கலாம்!

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மருத்துவமணை 
மற்றும் பொது இடங்களுக்கு
செல்லும் போது மாஸ்க் அணிவது
அவர்களின் பயத்தினை போக்கும்!

உடல்உழைப்பு உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி யோகாசனம் போன்றவற்றினால்
நமது உடலில் நோய் எதிர்ப்பு
சக்தி கூடும்..

அவற்றினை 
முறையாக பின்பற்றினாலே
வியாதிகள் வருவது குறைந்து
உடல் நலம் மேம்படும்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும்
மிகைப்படுத்தப்பட்ட காணொளிகளே
கண்டு பயப்படவேண்டாம்.
அவைகளில் பெரும்பாலானவை
போலியாக சித்தரிக்கப்படுபவைகளே..

விழிப்போடு இருப்போம்
தேவையற்ற வதந்திகளை
தவிர்த்து நலம் காண்போம்.....

Wednesday, February 5, 2020

டயரை கண்டுபிடித்தவர்... பிறந்த தினம்...

டயரை கண்டுபிடித்தவர்... பிறந்த தினம்... வரலாறு !!


இந்த சிந்திக்க வைக்கும் சிந்தனை துளி அவருடையது.

"தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால்... முடிக்க முடியாத செயலையும் எளிதில் முடித்து விடலாம்..."
ஜான் பாய்ட் டன்லப்

🌟 வாகன டயர் கண்டுபிடிப்பாளரான ஜான் பாய்ட் டன்லப் 1840ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் ஒரு கால்நடை மருத்துவர் ஆவார். 

🌟 குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்க காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

🌟 அதே சமயத்தில் 1887ஆம் ஆண்டு அவருடைய மகன் தன் சைக்கிளை கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் ஓட்டுவதற்கு வழி கேட்டான். இவரும் மகனுக்கு உதவ முடியுமா என்று சோதனையில் இறங்கிவிட்டார்.

🌟 தோட்டத்தில் இருந்த பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை நிரப்பி சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிள் ஓட்டுவதற்கு எளிதாக இருந்தது.

🌟 அதை மேம்படுத்தி 1888ஆம் ஆண்டு பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். ஏற்கனவே 1845ஆம் ஆண்டிலேயே ராபர்ட் தாம்சன் இதை கண்டுபிடித்திருந்தார். பிரபலமாகாததால் அது தெரியாமல் போய்விட்டது. 

🌟 ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த வில்லியம் ஹியூம் என்ற தொழிலதிபர் இவருடன் சேர்ந்து டன்லப் என்ற டயர் நிறுவனத்தை உருவாக்கினார்.

🌟 பல தொழிற்சாலைகள் உருவாவதற்கு காரணமாக இருந்து சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் பாய்ட் டன்லப் 1921ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்

✈ 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.🌎 1778ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தென் கரோலினா (ருளு ளவயவந), அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது.🏫 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் (ரஷ்ய தலைநகரம்) ஆரம்பிக்கப்பட்டது.


Tuesday, February 4, 2020

நீங்களும் மருத்துவர் ஆகலாம்

 நீங்களும் மருத்துவர் ஆகலாம்



இன்று உலக அளவில் எல்லாவற்றிலும் முன்னேற்றம். உணவில், உடையில் முன்னேற்றம். நாகரீகத்தில், விஞ்ஞானத்தில் என அத்தனை துறைகளிலும் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். 

அதேப்போல் விதவிதமான நோய்களிளும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அதற்கான பலவித இரசாயன மருந்துகளிலும் முன்னேற்றம் அடந்துள்ளோம்.

யாரை கேட்டாலும் நான் இதற்கு இந்த மருந்து சாப்பிடுகிறேன், அதற்கு அந்த மருந்து சாப்பிடுகிறேன் என கூறுகின்றார்கள். ஆனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் மருந்தே சப்பிடுவதில்லை என சொல்பவரை காணமுடிவதில்லை. 

சிலர் ஆங்கில மருந்து சாப்பிடவில்லை என்றால், சித்தா, ஆயூர்வேதம், ஹோமியோபதி என வேறு ஏதாவது மருந்துகளை சாப்பிடுகின்றார்கள். மருந்து சாப்பிட்டால் தான் நோய்கள் குணமாகும் என நம்மில் நிலவும் நம்பிக்கை தான் இதற்கு காரணமாகும்.

மருந்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியாதா? முடியும்.

அதற்கான ஒரு எளிய முறைதான் சீன அக்குபிரஷர் மருத்துவம். இது ஊசி,  மருந்துகள் இல்லாத, வலி இல்லாத ஒரு மருத்துவமாகும்.

இதைக் கற்றுக்கொள்வதால் பல நோய்களுக்கு நீங்களே உங்களுக்கு சிகிச்சை அளித்துக் கொள்ளலாம். உங்கள் உறவினர்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். அதனால் தேவையற்ற மருத்துவ செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.

இதைக் கற்றுக்கொள்ள தமிழ் படிக்கத் தெரிந்தால் போதும்.

உங்கள் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்.

இந்த சீன அக்குபிரஷர் மருத்துவத்தை கற்றுக் கொள்ள விரும்புபவர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பி அதன் விதிமுறைகளை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி.

WhatsApp: +919790740990.

TNPSC தேர்வு 2020 : கோள்களின் இயக்கம் பற்றிய புவிமையக் கொள்கையை உருவாக்கியவர் யார்


TNPSC தேர்வு 2020 : கோள்களின் இயக்கம் பற்றிய புவிமையக் கொள்கையை உருவாக்கியவர் யார்?

பொது அறிவு - அறிவியல் வினா விடைகள்


1. எரிபொருளின் பாதை ஓர் .......... - பரவளையம்

2. பொருள் எறியும்போது பெரும நெடுக்கத்தை பெற ............. கோணத்தில் எறியப்பட வேண்டும். - 45 டிகிரி

3. கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையே ...................... செயல்படுவதால், கோள்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. - மைய நோக்கு விசை

4. மைய விலக்கு விசை துருவப் பகுதியில் ............. ஆகவும் நிலநடுக்கோட்டில் ............... ஆகவும் இருக்கும். - குறைவாகவும், அதிகமாகவும்

5. கோள்களின் இயக்கம் பற்றிய முதல் கொள்கையான புவி-மையக் கொள்கையை உருவாக்கியவர் - தாலமி

6. கோள், சூரியனுக்கு மிக அருகில் உள்ளபோது, கோளின் வேகம் எவ்வாறு இருக்கும்? - பெருமம்

7. பரப்பு இழுவிசையின் அலகு யாது? - நியூட்டன் மீ-1

8. மிகச்சிறிய அளவிலான நீர்த்துளி கோளவடிவம் பெறுவதற்கு காரணம் .......... - அதன் பரப்பு இழுவிசை

9. பெர்னௌலியின் சமன்பாடு என்னா???: Answer this question using comment box

10. ஆற்றல் அழிவின்மை விதியை அடிப்படையாகக் கொண்டு நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டத்திற்கான தேற்றத்தை வகுத்தவர் - டேனியல் பெர்னௌலி

11. நியூட்டனின் முதல் இயக்க விதியில் இருந்து அறியப்படும் கருத்து - நிலைமம்

12. பொருளின் நிலைமத் திருப்புத்திறன் பங்காற்றுவது - சுழல் இயக்கத்தில்

13. ............. யின் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது. - நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி

14. பருப்பொருளின் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல? - மின்னு}ட்டம்

15. இயங்கும் பொருள் ஒன்றின் இயக்க ஆற்றல் E எனில், அதன் B பிராக்லி அலைநீளம் ........... - λ = h /√2mE



அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...


Www.kavimalaravan.blogspot.com