Tuesday, February 4, 2020

சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு.

சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு


சுதந்திர தாகம்... நீண்ட கால சிறைவாசம்... இத்தனை நாட்களா?

 கதைகள்/கட்டுரைகள் பகுதியில் ஜவஹர்லால் நேரு பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.



🌹1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியதால் காவலர்கள் நேருவின் மீது தடியடி நடத்தினர். 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அவர் அனைத்து கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார்.

🌹நேரு முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரஸை காந்தியின் வழிகாட்டுதலில், 1929ஆம் ஆண்டு லாகூர் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திர தீர்மானம்  (Poorna swaraj resolution) நிறைவேற்றப்பட்ட பிறகு காங்கிரஸில் நேருவின் முக்கியத்துவம் கூடியது.

🌹பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது. அதே ஆண்டில், இந்தியா உடனான ஆங்கிலேயரின் இணைப்பை துண்டித்து 'சுதந்திர இந்தியா" என்ற அமைப்பை அவர் நிறுவினார். பின்பு அதன் பொதுச்செயலராகவும் பொறுப்பேற்றார்.

🌹சத்தியாகிரகம் மற்றும் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935ஆம் ஆண்டுகளில் அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1935ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.

🌹1938ல் தேசிய திட்டக்கமிட்டியின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். தேச உருவாக்கம் எப்படி அமைய வேண்டும்? என்பதை திட்டமிடும் பொறுப்பு இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது.

🌹பண்டிட் நேரு 1940ல் இந்தியாவை வலுக்கட்டாயமாக உலக போரில் பங்கேற்க வைப்பதை கண்டித்து தனிநபராக சத்தியாகிரகம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டார். அதன்பின் டிசம்பரில் மற்ற தலைவர்களுடன் இவரும் விடுதலை செய்யப்பட்டார்.

🌹1942ல் வரலாறு சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்திற்கான தீர்மானத்தை மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவில் முன்மொழிந்தார்.

🌹இதனால் மற்ற தலைவர்களுடன் நேருவும் கைது செய்யப்பட்டு அகமத் நகர் கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுவே இவருடைய இறுதியான மற்றும் நீண்டகால சிறைவாசமாகும். இதேபோன்று இவர் 9 முறை கைது செய்யப்பட்டார்.

🌹விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 3,269 நாட்களை நேரு சிறையில் கழித்தார். அங்கே பல அற்புதமான நூல்களை எழுதினார்.

🌹ஆங்கிலேயர் ஆட்சி செய்யாத மாகாணங்களை சேர்ந்தவர்களையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக்கும் திட்டத்தை நேருவே செயல்படுத்தினார்.

🌹நேருவிற்கு பேரன் பிறந்தபோது மன்னிப்பு கேட்டால் சிறையை விட்டு அனுப்புகிறோம் என்று ஆங்கிலேயர் கூறவே அதை மறுத்துவிட்டார் நேரு.

🌹தெருவில் போலீஸ் வாகனம் போகும்போது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்க, பேரனை பார்த்துவிட்டு, 'இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்றுதான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!" என்று கடிதம் எழுதினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு ஆற்றிய பணிகளை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்...!!


No comments:

Post a Comment