Monday, July 9, 2018

சுடர்மிகு பாரதி பகுதி - 2

சுடர்மிகு பாரதி - பகுதி - 2

ஐய பேரிகை



ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!

பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
 வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்

                                            (ஐயபேரிகை)

இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
 இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
 காலன் நடுநடுங்க விழித்தோம்.

                                            (ஐயபேரிகை)

 காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
 கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
 நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.

-    பாரதியாரின் ஞானப் பாடல்கள்



மின்னும் சொல் படைத்த பாரதியியை பார் போன்ற செய்வோம்.


த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment