Saturday, July 7, 2018

10-சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 10

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 10.


இப்போது மீண்டும், தேவையான அளவு என்பதை பற்றி பார்க்கலாம், உடலில் ஆயிரக்கணக்கான சுரப்பிகள் உள்ளன. சிலவற்றை மட்டுமே நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது. ஸ்கேனிங் எந்திரத்தில் தெரியாத உறுப்புகள் தான் உடலில் அதிகம். தொலைநோக்கியில் தெரியாத கோள்களும், விண்மீன்களும் தான் பிரபஞ்சத்தில் அதிகம். மனித அறிவினால் அறிந்து கொள்ள முடியாதவைதான் எப்போதுமே பிரபஞ்சத்தில் அதிகம். இந்த உண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடிந்தால், நோய்களில் இருந்து வெகு எளிதில் விடுபட முடியும்.

அதாவது அறிவுக்கு எல்லை உண்டு என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். நமது அறிவைக் கொண்டு எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது என்பதை ஏற்க வேண்டும். அமைதியாக சிந்தித்து விட்டு கூட இதை பற்றிய இறுதி முடிவுக்கு வரலாம். ஆனால் இதில் அரைகுறை புரிதல் இருப்பின். உண்மையின் வெளிச்சத்தை காணமுடியாது. நோய்களில் இருந்து விடுபடுவதற்குரிய மெய் வழிகளை கடைபிடிக்க முடியாது.

,"எல்லா வற்றையும் அளந்து பார்க்க முடியும்" என்ற மாயை தான் அலோபதி கட்டமைத்துள்ளது. இதைவிட ஒரு படி மேலாக "எங்கள் அளவீடுகளுக்குள் தான் உடலின் இயக்கமே உள்ளது" எனும் ஆனவமும் அதற்கு உள்ளது. ஆனால் உண்மை வேறு!

ஒரு மனிதனின் உடலில் எந்தச் சுரப்பு எவ்வளவு சுரக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அந்த மனிதரின் உயிராற்றல் தானே தவிர சோதனை கருவிகள் அல்ல. உயிராற்றலை ஸ்கேனில் கானமுடியாது. ஆனால், அது இருக்கிறதா அல்லவா, இந்த உடல் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் உயிரில் பொதிந்து உள்ளது. ஆற்றல் கண்ணுக்கு புலனாகாது. உடலின் ஒவ்வொரு இயக்கமும் உயிராற்றலால் தீர்மானிக்கப்படுகிறது

.உடலின் இயற்கையான ஆற்றல் என இந்த உயிராற்றலை தான் புரிந்து கொள்கிறோம். உண்மையில் இது உடலின் ஆற்றல் அல்ல, உயிரின் ஆற்றல், அதனால் தான் மரணத்திற்கு பின்னர் உடல் உள்ளது. உயிர் மட்டும் பிரிந்து செல்கிறது. உடலைக்கருவியாகக் கொண்டு உடல் ஆடும் ஆட்டம் தான் உயிருள்ள உடலின் செயல்பாடுகள்.

இந்த உயிர் உடலை வளர்க்கிறது. உடல் வளர வளர மனம் வளர்கிறது. மனம் ஓர் அறிவுதான். அறிவு என்பது உடலுக்குத் தொடர்பானது. உயிரோ அனைத்துக்கும் ஆதியானது. இந்த உயிர் இயற்கையின் பேராற்றலின் படைப்பு, ஆகவே மனத்தை விட உயிருக்கு அதிகம் தெரியும்.

இந்த உயிரும் மனமும் உடலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானவையே. பொதுவான பண்புகள் நிறைய உள்ளன. தனித் தன்மையான பண்புகளும் உள்ளன. இதைப் புரிந்து கொள்ள எளிய வழி. கைரேகைகளை பற்றி சிந்திப்பது தான். எத்தனை கோடி மனிதர்கள் பிறந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கைரேகை படைக்கப்படுகிறது அல்லவா. இது நம்மை மீறிய, நமது அறிவால் சாதிக்க முடியாத இயற்கையின் பேராற்றலின் செயல். தோற்றத்தில் எல்லோரும் மனிதர்களே. ஆனால் உள்ளடக்கத்தில் ஒவ்வொருவரும் வேறு வேறானவர்கள். ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே வேறு வேறான எடையில், தோற்றத்தில், உடல் வலுவில், மனநிலையில், அறிவாற்றலில், உயிராற்றலில் இருப்பதை காண்கிறோம்.

ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. ஒவ்வொரு உயிர் உருவாக்கும் உடலும் தனித்தன்மை கொண்டது. எல்லா உயிர்களுக்கும் பொதுவான சில தன்மைகளை வைத்து நாம் உடலை புரிந்து கொள்கிறோம். அவ்வளவு தான், உயிராற்றலின் இயல்பு என்னவென்றால், தன்னை தற்காத்துக் கொள்வது தான். அது இந்த உலகில் வாழ வந்துள்ளது, இந்த உடலில் வாழ வந்துள்ளது. உடலில் வாழத்தேவையான வேலைகளை உயிராற்றல் செய்து கொண்டே இருக்கும்.

கண்ணில் தூசி விழுந்தால், நமது அறிவைக்கொண்டு ஏதும் செய்யாமலே, கண்ணில் நீர் ஊறத்துவங்கும். அந்த நீரில் மிதக்கவிடப்பட்டு தூசி வெளியேற்றப்படும். எலும்பில் கீறலோ  முறிவோ ஏற்பட்டால் அந்தக் கீறலும் முறிவும் மறையும் வண்ணம், எலும்பு வளர்ச்சி அடைகிறது. தோல் கிழிந்தால், அப்படியே கிழிந்த நிலையில் இருப்பது இல்லை. மீண்டும் புதுத் தோல் உருவாகும், உடலில் எந்த உறுப்பில் சேதமானாலும் அந்தச் சேதம் அப்படியே தொடர்வதில்லை. மாறாக, மீண்டும் பழைய நிலைக்கு உடல் வந்து சேர்ந்து விடுகிறது.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் உடலின் இந்த பணிகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நடந்து கொள்வது தான். மரபு மருத்துவ முறைகள் இந்த உண்மையை அறிந்தவை, அதனால் தான் இயற்கைக்கு முரணான எந்த மருந்தையும் மரபு முறைகள் கண்டுபிடிக்கவில்லை. இயற்கையை புரிந்து கொள்வதும் நம் உடலை புரிந்து கொள்வதும் ஒன்று தான். இயற்கை எப்படி தன்னைத் தானே சரி செய்து கொள்கிறதொ அப்படி உடலும் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. இவ்வாறு சரி செய்து கொள்ளும் போது உடல் சில மாற்றங்களுக்கு உட்படுகிறது.

கண்ணில் விழுந்த தூசியையே எடுத்துக் கொள்வோம். தூசி விழுந்தால் கண் சிவந்து போகிறது, நீர்கோர்க்கிறது வலி எடுக்கிறது. இவை எல்லாம் நீங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்கள். அதாவது வழக்கமான செயல்பாடு தடைபட்டுள்ளது. இது சீராகும் வரைக்கும் கண்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கண்கள் அறிவுறுத்துகின்றன. மூடிய கண்களில் தான் வேகமாக சீரமைப்புப்பணி நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அறிகுறிகள் மாறிவிடுகின்றன.
கண்கள் வழக்கம் போல் இயங்க துவங்குகின்றன.இப்போது கண்களில் வழிந்த நீரை அளவிட்டு பார்த்தால் அதன் அளவு வழக்கத்தை விட அதிகமாகத்தான் இருக்கும்.அது வெறும் நீர் அல்ல, மருந்து. புண்களிலும் ஒரு வித நீர் சுரக்கும். அதுவும் மருந்து தான், எச்சில் கூட மருந்து இல்லை தான். உடலின் மிகச் சிறந்த கிருமி நாசினி எச்சில் தான். தேவைக்கு ஏற்ப இந்த மருந்துகள் உடலின் ஆற்றலால் சுரக்கின்றன.
தேவை நிறைவேறியதும் தாமாகவே சுரப்பின் அளவு கட்டுப்படுகிறது. எவ்வளவு மருந்து நீர் சுரக்க வேண்டும் என தீர்மானிப்பது, உடலின் இயக்க ஆற்றல் தான். எவருக்கு எவ்வளவு எச்சில் ஊறவேண்டும், சிறுநீர் வெளியேற வேண்டும் என்பதையெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்க முடியாது. அப்படி செய்வதே அறிவியலுக்கு புறம்பானது. அதாவது உடலின் இயற்கை அறிவியலை புரிந்து கொள்ளாதவர்கள் தான் எல்லா சுரப்புக்களையும் கணக்கில் அடக்கப்பார்க்கிறார்கள்.

அழுகையை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா அழுகைக்கும் ஒரே விதமாகவா கண்ணீர் சுரக்கிறது. அழும் காரணத்தின் ஆழத்தை பொறுத்து கண்ணீரின் சூடும், அளவும் மாறுபடுகின்றன. உடலுறவின் போது வெளிப்படும் ஆண், பெண் சுரப்புக்கள் இவ்விருவரின் மனநிலைக்கு தக்கவாறு சுரக்கின்றன. கண்ணீரையோ, பாலுறவு சுரப்புக்களையோ"இவ்வளவு சுரக்க வேண்டும். இல்லா விட்டால் நோய் என்று கூறினால் எவ்வளவு அபத்தமானதோ அதே அளவுக்கு அபத்தமானது தான், சர்க்கரை நோய் குறித்து அலோபதி கூறும் அளவுகள் எல்லாம்.

இன்சுலினையும், குளுக்கோஸையும் உடல், தனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சுரக்கும். நாம் செய்ய வேண்டியது எல்லாம், நமக்கு என்ன அறிகுறிகள் தோன்றுகின்றன என்று கவனிப்பது தான். அதாவது, உடலில் என்ன தொல்லைகள் ஏற்பட்டுள்ளன என்பதை மட்டும் கவனிக்க வேண்டும். கை கால் வலி, சளி, வயிறு மந்தம், வாயுத்தொல்லை, சிறுநீர் அடிக்கடி பிரிதல், மலக்கட்டு அல்லது அடிக்கடி மலம் கழித்தல் போன்ற தொல்லைகளை கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகளை கொண்டு தான் மருத்துவம் செய்ய வேண்டும். தேர்ந்த மரபு மருத்துவர்கள் அறிகுறிகளை வைத்து, மூலகாரணத்தை கண்டு பிடித்து விடுவார்கள். நாடி பிடித்து பார்த்து, உடலின் இயக்கத்தை மனக்கண்ணால் காணும் மரபு மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

மேற்க்கண்ட சிக்கல்களுக்கான மூல காரணம் எதுவோ, அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் உடல் சீரடைந்து இயங்கத் துவங்குகிறது. அலோபதி முறையில் என்ன நடக்கிறதென்றால், மேற்கண்ட அறிகுறிகளுடன் செல்லும் மக்களை, பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். இறுதியில் தாங்கள் போட்டு வைத்துள்ள கணக்குகளையும், இந்த சோதனை முடிவுகளையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள், கணக்கில் மாறுதல் இருந்தால், வந்தவர் நோயாளி, அதிலும் எந்த கணக்கில் மாறுபாடு உள்ளதோ அந்த கணக்குக்கிற்குரிய நோயாளி. தைராய்டு கணக்கில் மாறுபாடு இருந்தால், வந்தவர் தைராய்டு நோயாளி, சர்க்கரையில் மாறுபாடு இருந்தால் சர்க்கரை நோயாளி, இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்தால் வந்தவர் இரத்த அழுத்த நோயாளி.

நீங்கள் சில தொல்லைகளுக்காகவே அங்கு செல்கிறீர்கள் உங்கள் உடல் இயக்கத்தை தனியாக ஆய்வு செய்யவில்லை. மாறாக உலகம் முழுமைக்குமான கணக்கின் கீழ் உங்களை கொண்டு வந்து. அந்த கணக்கில் நீங்கள் இல்லை ஆகவே நீங்கள் ஒரு நோயாளி என்கிறார்கள். அதாவது, ஆஸ்திரேலியாவில் மாட்டுப்பண்ணை வைத்து இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் ஒரு நோயாளி ஆகிவிடுகிறீர்கள். அவர்களை பொறுத்த வரைக்கும், எல்லா உடல்களும் ஒன்று தான். ஆகவே அறிகுறிகளை பற்றி அவர்கள் அலட்டிக்கொளவதே இல்லை.

அறிகுறிகளோடு ஒத்துப்போகும் சிகிச்சைகள் அளித்தால் எந்த நோயிலிருந்தும் மக்களை காத்து விட இயலும். அறிகுறிகளுகுகு மாறான சிகிச்சைகளை அளித்தால், காய்ச்சலில் இருந்து கூட காப்பாற்ற முடியாது. வெறும் காய்ச்சல் என்ற காரணத்தால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இறந்து போனவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள். இது ஏன் நடக்கிறது என்றால், காய்ச்சலுக்கான மூலகாரணம் கண்டு பிடிக்க படுவதில்லை. அவர்களை பொறுத்த வரை, காய்ச்சல் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்று வெப்பத்தை அளந்து பார்த்து, அந்த வெப்பம் குறைவதற்கான மருந்துகளை கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் கணக்குகள் அவர்களிடம் உள்ளன.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிட்டதா எனக் கண்டறிவதே அடிப்படையில் தவறான முறை. இது அலோபதியின் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் பாதை போட்டுத் தரும் முறை. ஏற்கனவே சொன்னவாறு உடலில் எந்தச் சுரப்பு எவ்வளவு சுரக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு உடலும் தனித் தனியாக முடிவு செய்கிறது. தனக்கு தேவை என்பதற்காகவும், தன்னால் இயல்பாக இயங்க முடியவில்லை என்ற நிலையிலும் தான் உடலாற்றல் சுரப்புக்களில் மாறுபாடு உருவாக்குகிறது. சுரப்பு மாறுபாடுகள் என்பவை எல்லாம் விளைவுகளே தவிர மூல காரணம் அல்ல. வெறும் விளைவுகளை அளந்து பார்த்தால் நோய் எப்படித் தீரும்?

இனிப்பு ஆவண படத்திற்காக நான் சந்தித்த ஒருவர், தொடுசிகிச்சையின் வழியாக சர்க்கரையிலிருந்து விடுதலை அடைந்தவர். அவரது சர்க்கரை அளவு நான் சந்தித்த போது 220 புள்ளிகள் இருந்தது. அவரோ முன்னைக்காட்டிலும் உற்சாகமாகவும், துடிப்பாகவும் இருக்கிறார். அலோபதியின் கணக்கு இதை ஏற்காது. ஆனால் அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

தர்மபுரி அருகே உள்ள கிராமம் ஒன்றில் கந்தன் எனும் முதியவரை சந்தித்தேன். அவர் வயது 66 நீண்ட காலமாக சர்க்கரைக்கான அலோபதி மருந்துகள் உட்கொள்பவர். வலது காலில் புண் வந்து ஆறமல் முழங்காலுக்கு கீழே வெட்டி வீசிவிட்டார்கள். நான் சந்தித்த போது, அவரது இடது கால் விரல்களில் ஒரு விரல் அகற்றபட்டு இருந்தது. அந்த விரலில் ஏற்பட்ட புண்ணும ஆறவில்லை என்று மருத்துவ மனையில் அதை அகற்றி விட்டார்கள், விரலை வெட்டியது போதாதென முழங்காலுக்கு கீழே வெட்டி விட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்கள். ஏற்கனவே ஒரு காலை வெட்டியாயிற்று. இப்போது இரண்டாவது காலுக்கும் கெடு விதித்து இருந்தார்கள்.

அவரது மருத்துவ அறிக்கைகளை வாங்கி பார்த்தேன். விரலை வெட்டியபோது இருந்த சர்க்கரை அளவு 145 புள்ளிகள். அலோபதியை பொறுதத்தவரையில், இது பாதுகாப்பான அளவுதான். சர்க்கரை அளவு பாதுகாப்பாகத்தானே உள்ளது, ஏன் காலை வெட்டச்சொல்கிறார்கள்? எனக் கேட்டேன். "விரலை வெட்டும் அறுவை சிகிச்சைக்காக சர்க்கரை அளவை மருந்துகளின் வழியாக குறைத்து வைத்திருப்பதாகவும், இதே நிலை நீடிக்காது என்பதால் காலை வெட்டித்தான் ஆக வேண்டும் என்று மருத்துவர் கூறினார்" என்றார்கள் அந்த பெரியவரின் குடும்பத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பேச்சு வராமல் போய்விட்டது.

ஒருவரது சர்க்கரை அளவு 220 உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். மற்றவருக்கு 145 புள்ளிகள் உள்ளது இரண்டாவது காலையும் நீக்க வேண்டும் என்கிறார்கள். இருவரின் மருத்துவ அறிக்கைகளையும், நேர்காணலையும் முறைப்படி ஆவணப்படுத்தியுள்ளேன்.

கந்தன் ஒரு கூத்து வாத்தியார். தர்மபுரி கிராமங்களில் பலநூறு தெருக்கூத்துக்களை நிகழ்த்தியவர். இப்போது அவரது இரண்டாவது காலையும் நீக்கி விட்டார்கள். ஒரு கூத்துக்காரரின் குரலும், காலும் பறிபோனால் அவரது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்.?

சர்க்கரை நோய் என்று வரும் மக்களிடம் நான் வழக்கமாக கேட்கும் கேள்வி, "சர்க்கரை என மருத்துவர் கூறியிருப்பார்.
உங்களுக்கு என்ன செய்தது?" என்பது தான். அவர்கள் வித விதமான சிக்கல்களை கூறுவார்கள். "தலை வலித்தது, உடல் வலித்தது, அடிக்கடி சிறுநீர் போனது, மூட்டு வலி ஏற்பட்டது, பசி அடங்கவே இல்லை" என்பது போல பல தொல்லைகளை குறிப்பிடுவார்கள். இந்த தொல்லைகளுக்காக மருத்துவரிடம் சென்ற பிறகு தான், அவர்கள் "சர்க்கரை நோயாளிகள்" என அறிவிக்கப்பட்டனர்.

முதியவர் கந்தன் உறவினர்களிடமும் இதே கேள்வியைத்தான் கேட்டேன்."இவருக்கு என்ன செய்தது என்பதற்காக மருத்துவ மனைக்கு சென்ற போது, இவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனச் சொன்னார்கள்?,

அவர்கள் கூறிய பதில், முதுகு வலிக்கிறது என்றார். அதற்காக மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது தான் இவருக்கு சர்க்கரை இருப்பதாகச் சொன்னார்கள், அதிலிருந்து மாத்திரை சாப்பிடுகிறார். "என்றார்கள்.

அவருக்கு இருந்த தொல்லை முதுகுவலி. இப்போது அவரிடம் இரண்டு கால்களும் இல்லை, பேசக்குரலும் இல்லை. நிச்சயமாக அவரது உள்உறுப்புகளில் சேதம் ஏற்பட்டிருக்கும். இது முதுகு வலிக்கான சிகிச்சையா?, என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். நீங்களும் உங்கள் உற்றாரும் இது போன்ற உடல் தொல்லைகளுக்காக மருத்துவரை சந்தித்து சர்க்கரை அளவு கணக்கிடப்பட்டு, சர்க்கரை நோயாளிகள் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம். இவ்வாறு உடலில் இருந்த எளிய தொல்லைகளை கண்டு அஞ்சி மீள முடியாத சுழலில் சிக்கியவராக இருக்கலாம். இப்போது நான் குறிப்பிட்ட கந்தன் என்பவர் உயிரோடும் இல்லை இறந்து விட்டார்.

*கேட்பவன் கேனையனா இருந்தா கேப்பையிலும்நெய்யொழுகும் என்பார்*,

மேலும் நாளை பார்க்கலாம் உறவுகளே
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

நேரம் பதிவு செய்ய போதாத காரணத்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவு செய்து வருகிறேன்.

ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம் திருப்பூர், 8778832095,


சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி -08 ஐக் காண

https://kavimalaravan.blogspot.com/2018/05/8-7.html


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment