விளாமரம்
வேறு பெயர்கள் :– கடிபகை,
கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி
போன்றவை.
அரியவகை
மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது,
இதன் பழங்கள் பலராலும் விரும்மி
உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத
காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது,
விளாமரங்களை வணிகரீதில் வளர்த்தால் நல்ல லாபம்பெரலாம் அத்தகைய
விளாமரம் பற்றி தெரிந்துகொள்வோமா.......
பெரோனியா
எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்த விளா மரம்
தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத்
தாயகமாகக் கொண்டது ஆகும். விளா
மரத்தின் வேர் இலை, காய்,
கனி போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
விளாவானது கடிபகை, பித்தம், விளவு,
வெள்ளி எனப் பல்வேறு பெயர்களால்
வழங்கப்படுகிறது. இந்தியாவில் விளாவில் இலை, காய், பழம்,
பழ ஒடு, பட்டை மற்றும்
பிசின் போன்றவை பல்வேறு மருத்துவ
தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இப்பழங்களில்
70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து,
0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள்,
100 கிராம் பழத்தில் 170 மி.கி. ரிபோபிளேவின்
மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து
ஆகியன அடங்கியுள்ளன. இப்பழத்தை உப்புடன் சேர்த்து சாப்பிடலாம். ஜெல்லி தயாரிப்பதற்கும் இப்பழங்கள்
பயன்படுகின்றன.
பயன் தரும் பாகங்கள்
:– கொழுந்து, இலை, காய், பட்டை,
ஓடு மற்றும் பிசின். ஆகியவை.
வளரியல்பு :– விளாமரம் தாயகம் இந்தியா பின்
பாக்கீஸ்தான், இலங்கை,தாய்வான், மாயின்மருக்குப்பரவிற்று.
இது எங்கும் வளரும். மர
வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம்
காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல்
வளராது. ஆழமான மண்வகையில் நன்கு
வளரும். மேலும் வீடுகளிலும், கோயில்களிலும்,
தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. மூன்று
வகைகளில் இது பெரிய மர
வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம்.
இந்த கருமைநிறமாக இருப்பதால்
கருவிளாம் என்று சொல்லப்படுகிறது. விளாமரம்
30 அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதன் இலைகள் கூட்டிலைகள்.
இலைகள் 5-7 வரை இருக்கும், இது
25-35 மில்லி இருக்கும். தனி இலை 10 மில்லி
20 மில்லி அகலம் இருக்கும். இதன்
இலைகள் நல்ல மணத்தைக் கொண்டது.
இலை நீள் வட்ட வடிவமாக
இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு
வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும்.
இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும்.
பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும்.
உள் சதைமரக்கலரில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும்.
காயாக இருக்கும் போது அதன் சதை
துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும்.
இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். விளாமரம்
வளர்ந்த 5 வது வருடத்தில் காய்
காய்க்கும். இதை
எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப்
பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள்.
விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல்
மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
விதைகளின்
மூலம் இம்மரங்கள் பொதுவாக இனவிருத்தி செய்யப்படுகின்றன.
மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல்
மூலமும் இம்மரங்கள் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஆழமான மண் வகைகள்
உள்ள பகுதிகளில் இவை நன்றாக வளரும்.
ஓரளவு மண்ணின் உப்புத் தன்மையையும்
தாங்கி வளரும். இது வெப்ப
மற்றும் மித வெப்ப பிரதேசங்களில்
பயிரிட ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து
1500 மீட்டர் உயரத்திற்கு மேல் இம்மரங்கள் நன்கு
வளராது.
நாற்றுக்களை
மழைக்காலங்களில் நட வேண்டும். மரங்களின்
கிளைகள் நன்கு இடைவெளி விட்டு
வளருமாறு தேவையில்லாத கிளைகளை வெட்டி விட
வேண்டும். நட்ட பின், ஐந்தாவது
ஆண்டில் இம்மரங்கள் காய்க்க ஆரம்பிக்கும். பொதுவாக
இம்மரங்களுக்கு உரம் ஏதும் இட
வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்டு கூறுமளவுக்கு இம்மரத்தில் எந்தவிதமான பூச்சிகிளோ, நோய்களோ தாக்குவதில்லை.
மருத்துவப்
பயன்கள் :– விளா சதை நரம்புகளைச்
சுருங்கச் செய்வது இதன் பொது
குணமாகும். பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும்.
பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத்
தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத்
தணித்து அவற்றைத்துவளச் செய்யும். துவர்ப்புச் சுவையோடு வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றி, உடலுக்குக் கிளிர்ச்சியைத்
தந்து, புண்களை ஆற்றக் கூடிய
செய்கை உடையது. நாவறட்சி, விக்கல்,
வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க
வல்லது. ஒவ்வாமை நோய், இரத்த
போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின்
இலை, சம அளவு உலர்த்திய
பொடி 100 கிராம், மிளகு 10 கிராம்,
வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு
வறுத்து பொடி 100 கிராம் உப்பு
20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில்,
சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும்,
பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும்
ஊட்டமுடையதாகும்.
குட்டி விளாம் என்பது
நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது
பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை
மருத்துவக் . சிறு
குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம்.
சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும்,
அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும். தோல்
மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன்
இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக
இருக்கும்.
- விளாங்காய் சதையை சிறிது வேக விட்டுக் கொடுக்கப் பேதி, சீதப் பேதி தீரும்.
- பழத்தை ஓட்டுடன் அரைத்து விழுங்க மருந்து வீறு தணியும்.
- விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை.
- இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசியின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும்.
- விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு, காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்.
- விளாங்காயை மேலே சொன்னபடி வேக வைத்து அதன் சதையுடன் உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான சகல கோளாறுகளும் நீங்கி விடும்.
- விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து காலையில் மட்டும் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்ணாசை வெறுத்து விடும்.
- ஒரு கைப்பிடி அளவு விளா இலை எடுத்து முறைப்படி குடிநீரிட்டு அருந்தி வர காச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.
- வேர்க்குரு, கோடைக் கொப்புளங்கள் முதலிய வற்றிக்கு விளா இலைக் கொழுந்தை சாறு பிழிந்து பூசிவர குணமாகும்.
- விளாங்காய் மற்றும் வில்வக்காய் இவைகளின்
சதைப் பகுதியை எடுத்து அதை
கஞ்சியாக க் காச்சிக் குடித்து
வந்தால் மூல நோய் தொல்லை
குறையும்.
- விளாம்பழத்தின் ஓட்டைப் பிளந்து பழத்தை மட்டும் உட்கொண்டு வர வாய் நீர் ஊறல் வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்களும் நீங்கி, நன்கு பசி உண்டாகும்.
- விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலி சூரணம் தேவையான அளவு கலந்து உண்ண விக்கல், மேல் மூச்சு வாங்கல் நிற்கும்.
- விளாமரப்பட்டை 488 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு இடித்து, 500 மிலி நீர் விட்டு நன்கு காச்சி, தினம் இரு வேளை அருந்தி வர பித்த வாந்தி, குமட்டல், புகையிலை நஞெசு நீங்கும்.
- நீரழிவு நோய்க்கு ஆவாரை வேர், விளா வேர், பூலாவேர், இலவங்கம், காட்டு மல்லி வேர் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் இட்டு நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர குணம் தெரியும்
- விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அடக்கி அதன் ரசத்தை மட்டும் விழ்ங்கி வந்தால் வறட்டிருமல் நீங்கும்.
நமது அமைப்பில் மூலம் இப்படி மருத்துவ பயன்மிக்க மரத்தையும் நடுவோம்
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் எம்.எஸ்சி எம் பிஃல் பி.எட்
கணினி அறிவியல்
No comments:
Post a Comment