Wednesday, May 3, 2017

மீண்டும் ஓர் விவசாய கவிதை


வெறும் வாகை படும் பாடு….
                        -வெவசாயி

கருகிய பயிரோடு,
கரிசல் மண் பொளவடையில்,
நித்தம்,நித்தம் பயிரிட்டு
எப்போதும் தோற்றே புதைக்கப்படும்
அவனின் தோள் வலியை
கூகுள் காட்டாது 
அவன் கூழுக்கு படும் அவஸ்தயை...

யாகுவுக்கு என்ன தெரியும்?
அவன் ஏா்பிடிக்க மேலிப்பால்
குடித்த கதை..?

கதைபடித்து கதைபடித்து
சொல்லாடலில் மயங்கிப்போய்
சுயம் இழந்து போன நடைபினங்களே !
தினம் தினம் நீ,
நரபழி கொடுப்பது நாளைய உணவுகளை அல்ல!
அதை
வோ்வை வேள்வியில் தீயிட்டு சமைப்பவா்களை

மிச்ச மீதியில் சதை வளா்பது கடினம்
இனி
கொடுப்பதைக் கொடுத்து அவனில்
முன்பதிவு செய்து கொள்

அவனும் விரைவில்
ஆதார் அட்டைக்கு மறுப்பு சொல்லி
அவசர ஊா்தியில்
அமாவாசை  நிலா பார்க்க சென்றுவிடுவான்

இன்று
தினம் தலைப்புச் சேதியாவது
இளவேனிர் பருவத்தில் பதின்ம வயதாகிப்போன
பசுமர தளிர்கள் போல், அதை
தொட்டுத்தழுவி, உரசி, மண்சோறு தின்ற
அரசியல் உளறல்களில்
கேட்பாறற்றுக் கிடக்கும் வாசகங்களாக,
மாறிப்போகும் மாந்தா் கூட்டம் 
இந்த
விசாயி..........



No comments:

Post a Comment