பாதாம் மரம்!
வீட்டுக்கு முன்
பாதாம்
மரம்
வைத்து
விட்டால்
2 வருடங்களுக்குள்
வளர்ந்து
காய்தரும்.
வாதுமை,
பாதாம்
பருப்பு
அல்லது
கொட்டை
பெறப்படும்
மரம்
ஆகும்.
பாதாம்
பருப்பை
வாதுமை
எனவும்
கூறுவர்.
வாதுமை
கொட்டைகளை
வலாங்கொட்டை
எனவும்
கூறுவர்.
இக்
கொட்டைகள்
சுவைமிக்கவை.
பாதாம்
மரங்கள்
மத்திய
கிழக்கை
பூர்வீகமாகக்
கொண்டவை,
இங்கேயே
இவை
அதிகம்
உற்பத்தி
செய்யப்படுகின்றன.
ஆசியாவின்
வெப்ப
மண்டல
நாடுகளில்
வளர்கின்றன.
ஒரு மரத்துல இருந்து
10 கிலோ அளவுக்கு பருப்பு கிடைக்கும். ஒரு
மரத்திலிருந்து வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம்
கிடைக்கும்.
ü
இரத்தத்திற்கு
நன்மை செய்யும் எச்.டி.எல்.
கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால்
குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம்
சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க
வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை.
வேலையும் கவ
ü
லையும்
அதிகம் எனில், அப்போது பாதாம்
பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து
சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும்
தாராளமாகக் கிடைக்கும்.பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,
தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக்
அமிலமும் அதில் இருக்கிறது. எனவே
நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு
பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு
காலையில் அதை அரைத்து சாப்பிட
வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின்
மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.பாதாம் பருப்பு சாப்பிடுவதால்
உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும்.
ü
அதுமட்டுமின்றி
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது
ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை
ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை
செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை
தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும்
தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு
உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின்
வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.
ü
பாதாம்
பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம்
இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி
பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின்
வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர்.
இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை
இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும்
அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல்
பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய
ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ü
நீரிழிவு
நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக
மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.நீரிழிவு
நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு
தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை
ü
சேதப்படுத்திவிடும்.மேலும் பாதம் பருப்பை
சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு
நோய் வருவதற்கான முந்தைய நிலையில்
பாதாமில்
உள்ள சத்துக்கள்:
ü
பாதாமில்
உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம்
பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில்
3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம்
கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக்
கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும்
நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில்
உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக்
கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு
குறைந்த கலோரி உணவு என்று
சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில்
எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.பாதாமில்
உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா
கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர
பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு
நல்லது.
ü
பாதாமில்
பூரித கொழுப்பு குறைவு.பாதாமில் எலும்பு
வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம்,
மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி
– 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும்,
பாஸ்பரஸ§ம் ,கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை
மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை
மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான
ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின்
இ கூட செறிந்திருக்கின்றது.
உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின்
இ தேவை.
ü
ஓட்ஸ்,
சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின்
நண்பன். பாதாம் உடல் எடையை
ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை.
பாதாம் போன்ற கொட்டைகள் உடல்
எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து.
இந்த கருத்து சரியல்ல. பாதாம்
பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே
பசி அடங்கி விடும்.
ü
கிராம்
பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
ü
பாதாம்பால்
ü
பாதாம்
விதைகளிருந்து தயாரிக்கப்படும் பால் உடலுக்கு
மிகவும் ஏற்ற உணவாகும்.இவ்
இயற்கைப் பாலை அருந்துபவர்களுக்கு உடல்
மேலும் ஆரோக்கியத்தைப் பெறுகிறது.
பாதாமின்
பயன்கள்:
ü
பாதாமை
தோலுரித்த பிறகே உண்பது நல்லது.
பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை
ü
உண்டாக்கலாம்.
தவிர பாதாம் பருப்புகள் வாயில்
நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும்.
ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு
ஏற்றது.
ü
பாதாமில்
இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில்
பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட
எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில்
இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள்,
வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது.
எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து
போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம்
எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால்
சருமம்
ü
மிருதுவாகின்றது.
புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து
ü
எடுக்கப்படும்
எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின்
தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும
வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது.
தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.
ü
பாதாம்
பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த
கலவை. பாலுடன் சேர்த்து பருக
ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு
நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள்,
ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு,
சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால்
வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம்
ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு,
ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப்
போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம்
பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின்
பாலுக்கு பதிலாக பாதாம் பாலை
உபயோகிக்கலாம்.
ü
ஆய்வுகளின்
படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப்
பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை
உடையவை. இதனால் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால்
அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை
உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம்
சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள்
அதிகரிக்கப்படுகின்றன.
வேம்பு, புன்னை, புங்கன் போன்று காற்று புயல் போன்ற காலங்களில் விழாமல் தாங்கி நிற்கக்கூடிய மரம்...
இனி இந்த மரத்தையும் நடுவோம்
த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment