நிலம் கீறும் ஏர்ப்பறவை
தானே பதியமிட்ட நெருஞ்சி முல்லு கண்டமேனி பல்லிலிக்க
பொதிய மலையல்லாத மொட்ட மாணிக்காட்ட ,
இரண்டடி கீறழில் புழுதி பறக்க விட்ட ,
தரிசக்காட்டு செம்மாண்ட கெழவன்,
செதுக்கன பறவை இது .
செவல மாட்டுக்காரன் செஞ்ச வேலையில
உழைச்சி களைச்சி பட்டுப்போன
மரமாகி
வாக்கரிசி போடுற நெலையில படுத்திருக்கு
பசுமர உடலை பாங்குற அறுத்து பக்குவம் செய்திட்ட
கௌரவ கொலை செய்த கொடும்பாதக கிழவன் - செதுக்கி
இரும்புக் கொழுவிட்ட மூணு அடிக் கலப்ப ஆது
சித்திர மொத நாள் கட்டிய பொன்னேரில்
குறத்திக் கிழவன் அவன் மூட்டிய கலப்பையில்
பொட்டலு காடு அதை
பொன்னி வெளையிர மண்ணாக்கிய
பொன்னேரு கெழவன் அந்த ஊழவன்…
செக்கபோடு போட்டு பூட்டுன ஏர கழட்ட
மணி ஓன்னுரெண்டு ஆவும்,
கெழவன் பொழுதேரும் கட்டிக்குவான்....
அப்படி
கேவுரு வெதச்சி கிண்டிப்போட்ட களி நெனப்புல
நொகத்தடிய மாரு மேல சாச்சுக்குனு
கெழவன் மூச்சு விடுது
உழுத உழவில் இரண்டடி புழுதியில்
குட்டை கலப்பை அதில
மோலிப்பால் குடிச்ச நெனப்பு வந்து போகுது
ஏா் ஓட்டுற சத்தம் படுக்கையில கேக்க
பாடை ஏறக்கெடந்த உடம்பு சட்டுனு
நின்னு நடக்குது.
கழப்ப சத்ததுல அவன் உசுர் ஒட்டி கெடக்குது.
உழவன் புடிச்ச உழவில் உலகம் பசி ஆறுது
எம்பாட்டன் வெள்ளாமை எட்டுத்தெசை
போவுது
ஓட்ட ஒடச்சலில் தெனம் அவன் பசிபோகுது
பசி போக்குற சாமியாகுறான் செம்மாண்ட கெழவன்
ஏன்னா ? என்நாளும்
அவன் உழவன்
த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
பேச: 9095903089
No comments:
Post a Comment