Tuesday, March 21, 2017

தமிழக விவசாயின் நலன் கருதி தமிழக விவசாயின் நலன் கருதி அவா்களின் வாழ்வாதாரம் காக்க நினைக்கும் அனைவரும் இதனை முழுமையாக படிக்கவும், அனைவருக்கும் பகிரவும்

அதி முக்கிய விரைவு செய்தி

தமிழக விவசாயின் நலன் கருதி    
தமிழக விவசாயின் நலன் கருதி அவா்களின் வாழ்வாதாரம் காக்க நினைக்கும் அனைவரும் இதனை முழுமையாக படிக்கவும், அனைவருக்கும் பகிரவும்

அந்நிய நாட்டு குளிர்பானங்களை (பெப்சி, கொக்கக்கோலா அதன் உப தயாரிப்புகளை) இனி மார்ச் 1 முதல் விற்க மாட்டோம் என்று வணிக கூட்டமைப்புகள் அறிவித்ததை தொடா்ந்து பல்வேறு வணிக நிறுவனங்கள் சிறு கடைகள் விற்பதை நிறுத்திக் கொண்டுள்ளதன் விளைவாக பண்னாட்டு குளிர்பானங்களின் விற்பனை குறைந்து இந்த அறிவிப்பு 70 விழுக்காடு வெற்றி அடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த மாத இறுதியில் இருந்து மாணவா்கள், இளைஞா் இவா்களை கொண்டு குறித்து விழிப்புணா்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிய நாட்டு குளிர்பானங்களின் நிறுவனங்களை தடைவிதிக்க கோருவோம், என்று இன்று (20-3-2017) ஈரோட்டில் நிகழ்சி ஒன்றில் பேசிய தமிழக வணிக கூட்டமைப்பின் தலைவா் விக்கரம ராசா அறிவித்துள்ளார்.

இதனை தமிழ மாணவா்கள் மற்றும் இளைஞா் என அனைவரும் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம்.
மேற்கண்ட அறிவிப்பு (அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கு தடை) முழுமையாக 100 விழுக்காடு வெற்றி அடையாததை தொடா்ந்து சில அடிப்டையான கேள்வி எழுகிறது

1.    மாணவா்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போதும் மேற்கண்ட அறிவிப்பின் போதும் முக்கிய செய்தி, Breaking News என தந்தி, புதிய தலைமுறை, சன் நீயுஸ், நீயுஸ் 7, பாலிமா், விஐய், ஜெயா, சன், கலைஞா், கே உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களது தொலைக்காட்சிகளின் Rating ஏற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு விளம்பர இடைவேளையின்றி போரட்டங்களையும், செய்தியாளர் சந்திப்புகளையும் ஒளிபரப்பியது. ஆனால் அனைத்து தொலைக்காட்சிகளும் ஏன் இதற்கு ஆதரவு தெரிவித்து எந்த விதமான முன்னெடுப்புகளையும் செய்யவில்லை.?
2.    முன்னெடுப்புகள் என்றால் இதுபோன்ற பொருட்களின் விளம்பரங்கள் தங்களது தொலைக்காட்சிகளில் இனி விளம்பரம் செய்ய மாட்டோம் என்றோ அல்லது இனி படிப்படியாக குறைத்துக் கொள்கிறோம் என்றோ எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இது போன்ற தமிழக நலன் கருதி விவசாயின் வாழ்வாதாரம் காப்பதன் நோக்கில் அந்நிய நாட்டு மக்கள் நலன் பாதிக்கும் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்த்து உள்நாட்டு பொருட்களையும், இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தும் இந்த வேலையில் பல்வேறு விதமான அந்நிய நாட்டு பொருட்களான மிராண்டா (Mirinda), 7அப் (7UP), வோடபோன் (Vodafone), ஸ்பிரைட் (Sprite), லிம்கா (Limea) ஃபான்டா (Fanta), பெப்சுடண்ட் (Pepsudent), டவ் (Dove) கோல்கட் (Colgate), அமாம் (Hamam), இமாலயா ஹொ்பல்ஸ் (Himalaya herbals), குளோஸ் அப் (Closeup), கே.எப்.சி (KFC), பி&ஐி (P&G) மற்றும் பல்வேறு விதமான அழகு சாதனப்பொருட்கள், முகப்பூச்சுக்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் ( Rin, Surfexcel, etc ) என அனைத்து விதமான பொருட்களின் விளம்பரங்களை தொடா்ந்து ஒளிபரப்பி தங்களது வருமானத்தை பெருக்கிக் கொண்டுதான் உள்ளன.

(அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கு தடை என்ற மேற்கண்ட அறிவிப்பு முழுமையாக 100 விழுக்காடு வெற்றி அடையாதற்கு முக்கிய காரணம் இது போன்ற ஊடகங்களே.
ஏனென்றால் பல்வேறு மக்கள் எந்தெந்த பொருட்கள் அந்நிய நாட்டு பொருட்கள் என தெரியாமல் தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்து பொருட்களைய வாங்கி பயன்படுத்த பழகிவிட்டனா்)

இனியும் இது போன்ற நல்ல முன்னெடுப்புகளை ஊடகங்கள் ஆதரவளித்து விளம்பரங்களை தொடா்ந்து ஒளிபரப்பாமல் ஏப்ரல் 1 ம் தேதி முதல் விளம்பரங்களை நிறுத்த வேண்டும். இதை தவிர்த்து விளம்பரம் மற்றும் வருமானத்தை முன்வைத்தும் விளம்பர ஒப்பந்த சட்ட விதிமுறைகளை (Agreement) சுட்டிக்காட்டியும், தொடா்ந்து ஒளிபரப்பினால் தொடா்ந்து ஒளிபரப்புவோரின் ஊடகங்கள் புறக்கணிக்கப்படும்.

இதனை தங்களுக்கு தெரியப்படுத்துவதன் நோக்கில் தங்களது ஆன்ராய்டு செயலிகளை நீக்கப்படும் (Uninstall all Media apps, like Hotstar, thanthitv, putiyathalaimurai & etc).

மேலும் தொடா்ந்து விளம்பரங்களை ஒளிபரப்பும் ஊடகங்களை புறக்கணிக்கும் ஊடக புறக்கணிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வெகுவாக தகவல்கள் தொடா்ந்து பகிர்ந்து ஊடக புறக்கணிப்பு குறித்து மின்னியல் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

அனைவருக்கும் பகிரவும் (Share everybody)
(முடிந்தால் பொருள் மாறாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பகிரவும்)
இப்படிக்கு
தமிழக மாணவா் மற்றும் இளைஞா் அமைப்பு

தமிழ்நாடு

No comments:

Post a Comment