Friday, August 9, 2019

TNPSC-GROUP-IV|பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்..!! பொதுத்தமிழ்

TNPSC-GROUP-IV|பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்.
பொதுத்தமிழ் 


பேச்சுக்கலை பற்றிய குறிப்புகள்!!
💢 ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று. இது, நுண்ணிய நு}ல்பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை.

💢 இது, மக்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையது.

💢 மேடைப்பேச்சில் நல்ல தமிழைக்கொண்டு மக்களை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் முதலியோர் ஆவர்.

பேச்சும் மேடைப்பேச்சும்

💢 பேச்சு வேறு, மேடைப்பேச்சு வேறு. வெறும்பேச்சுக்கும் மேடைப்பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.

💢 பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது, ஆனால் மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.

பேச்சுக்கலையில் மொழியும் முறையும்

💢 மேடைப்பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி என்றாலும் அக்கருத்துகளை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.

💢 பேச்சுக்கலையில் வெற்றிபெற வலிமையான கருத்துகள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல் வேண்டும்.

💢 அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்தமொழி நடை ஆகும்.

முக்கூறுகள்

💢 பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துப் பேசுவதனையே பேச்சுமுறை என்கிறோம். இதனை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனவும் கூறலாம்.

எடுத்தல்

💢 பேச்சைத் தொடங்குவது எடுப்பு ஆகும்.

💢 மண்ணில் ஈரப்பதம் இருந்தால் தான் விதைக்க முடியும் என்பதனைப் போலக் கேட்போரைத் தன்வயப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. இடத்திற்கும் சு+ழலுக்கும் ஏற்பத் தொடக்கவுரை அமைதல் நன்று.

தொடுத்தல் முறை

💢 தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல் எனப்படும்.

💢 பேச எடுத்துக்கொண்ட செய்தியின் நுட்பங்களையும் கருத்துக்களையும் பல தலைப்புகளின்கீழ் வரிசைப்படுத்தி, ஓர் ஓவியன் பல வண்ணம் தீட்டி, இயற்கை வனப்பை உருவாக்கிக் காட்டுதல்போலப் பேசுதலே ஒரு பேச்சாளரின் கடமையாகும்.

முடித்தல்

💢 பேச்சைத் தொடங்குவதிலும் பொருளை விரிப்பதிலும் செலுத்தும் கவனத்தை, அழகுறப் பேச்சை முடிப்பதிலும் செலுத்துதல் வேண்டும்.

💢 நாடகக்கலை, திரைப்படக்கலை போன்றே பேச்சுக்கலையிலும் முடிவு என்பது தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக் கொடுக்கக்கூடியது எனலாம்.

Tuesday, August 6, 2019

TNPSC-GROUP-IV| இலக்கணக் குறிப்பறிதல் - பொதுத்தமிழ் இலக்கணக் குறிப்பறிதல்

TNPSC-GROUP-IV| இலக்கணக் குறிப்பறிதல் - பொதுத்தமிழ்
இலக்கணக் குறிப்பறிதல்


பண்புத்தொகை

💢 பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகை எனப்படும். பண்புப்பெயரும், அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லிற்கும் இடையில் 'மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன எனும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

எ.கா
நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் - வட்டம், சதுரம்
சுவையைக் குறிக்கும் சொற்கள் - இனிமை, கசப்பு
குணத்தைக் குறிக்கும் சொற்கள் - நன்மை, தீமை
எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எ.கா 
வெண்கரடி - வெண்மை + கரடி
வட்டக்கோடு - வட்டம் + கோடு
பெருங்கடல் - பெருமை(பெரிய) + கடல்
செவ்வேள் - செம்மை + வேள்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

💢 இரண்டு பெயர்ச்சொற்கள் இணைத்து எழுதப்படும்போது அவற்றின் இடையில் 'ஆகிய" அல்லது 'ஆன" என்ற சொல் மறைந்து நின்று பொருள் தருவது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் வரும்.


எ.கா 
தாமரை மலர் - இதில் தாமரை சிறப்புப் பெயர், மலர் பொதுப்பெயர் ஆகும்.
வெள்ளை மலர்(வெள்ளையான மலர்)
ஆண்மயில் (ஆணான மயில்)

வினைத்தொகை

💢 இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பது வினைத்தொகை எனப்படும். அதாவது வினைத்தொகையில் இரு சொற்களே இருக்கும். முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும். இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.

எ.கா
செய்வினை
செய்த வினை - இறந்தகாலம்
செய்கின்ற வினை - நிகழ்காலம்
செய்யும் வினை - எதிர்காலம்

வினைத்தொகையை கண்டறியும் முறை

💢 வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும். முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும், இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

எ.கா
சுடுசோறு
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு(எதிர்காலம்)

உவமைத்தொகை

💢 இரண்டு சொற்களுக்கு இடையே போல, போன்ற, அன்ன, நிகர என்னும் உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும். உவமை முதலிலும், உவமேயம் பின்னும் வரும்.

எ.கா
கனிவாய், மலரடி
'கனிவாய்" என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானால் 'போன்ற" உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

எனவே 'கனிவாய்" என்பது உவமைத்தொகையாகும்.

Thursday, August 1, 2019

ஐஞ்சிறுங்காப்பியங்கள் நீலகேசி மற்றும் சூளாமணி| பொதுத்தமிழ் ஐஞ்சிறுங்காப்பியங்கள்| நீலகேசி

ஐஞ்சிறுங்காப்பியங்கள் நீலகேசி மற்றும் சூளாமணி|
பொதுத்தமிழ்

ஐஞ்சிறுங்காப்பியங்கள்|
நீலகேசி


💐 நீலகேசி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய  நூல்களுள் ஒன்றாகும். சமண சமய  நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது.

💐 தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது.

💐 பௌத்த சமயத்தின் பெருமையைக்கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும்  நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.

💐 இந் நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.

💐 இந் நூல் கடவுள் வாழ்த்து தவிர, 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. 11 பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது.

💐 பத்தாம்  நூற்றாண்டில் தோன்றிய நீலகேசி  நூலுக்கு, 14 ஆம்  நூற்றாண்டில் தோன்றிய உரை நூல் நீலகேசி விருத்தியுரை ஆகும்.

💐 இந்த உரை நூலின் ஆசிரியர் சமய திவாகர வாமனமுனிவர்.

💐 இதனால் இந்த உரை நூலுக்குச் சமய திவாகர விருத்தி என்னும் பெயரும் வழங்கலாயிற்று.

சு+ளாமணி

💐 ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த  நூலாகும்.

💐 சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார்.

💐 பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

💐 பெருங்காப்பியத்தின் இலக்கணம் அனைத்தும் பெற்ற குறுங்காப்பியம் இது.

💐 இக்காப்பியத்தின் தலைவன் திவிட்டன்.

💐 இந் நூல் ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும்  நூலைத்தழுவித் தமிழில் எழுதப்பட்டது.

💐 இது விருத்தப்பாவல் ஆன  நூல் ஆகும்.

💐 இந் நூல் சமண தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது.

💐 இது 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டு, 2131 பாடல்களை கொண்டது.

💐 இந் நூல் கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒத்துள்ளது.


எந்த சர்க்கரை உடலுக்கு நல்லது

எந்த சர்க்கரை உடலுக்கு நல்லது



TNPSC|GROUP-4|ஐஞ்சிறுங்காப்பியங்கள்| பொதுத்தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடர்பான குறிப்புகள்

ஐஞ்சிறுங்காப்பியங்கள்|
பொதுத்தமிழ்

ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடர்பான குறிப்புகள்!!

💐 அறம், பொருள், இன்பம், வீடு, என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் என்று தண்டியலங்காரம் என்ற நூல் விளக்குகிறது. ஐஞ்சிறுங்காப்பியங்கள் அனைத்துமே சமணக்காப்பியங்கள் ஆகும்.

💐 ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற சொல்லை ஏற்படுத்தியவர் சி.வை தாமோதரம் பிள்ளை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்
நாககுமார காவியம்
உதயண குமார காவியம்
யசோதர காவியம்
நீலகேசி
சு+ளாமணி

நாககுமார காவியம்

💐 இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

💐 நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல் தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். 

💐 சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 

💐 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

💐 இந்நூலை 'சொத்தை நூல்" என்கிறார் மது.ச.விமலானந்தம்.

💐 இது சமணநூல் ஆகும்.

💐 இக்கதையின் நாயகன் 519 பெண்களை மணம் செய்கிறார்.

💐 இந்நூல் 16ம் நூற்றாண்டினைச் சார்ந்தது.

உதயகுமார காவியம்.

💐 இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

💐 இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்தது.

💐 இந்நூல் மொத்தம் 369 பாடல்களையும், 6 சருக்கங்களையும் கொண்டது.

💐 இதன் பாவகை விருத்தப்பாவால் ஆனது.

💐 இந்நூல் உதயணன் என்பவனின் கதையைக் கூறுகிறது. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.

💐 உ.வே சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.

யசோதர காவியம்

💐 இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

💐 இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்தது. 

💐 இதில் 320 பாடல்களையும், 5 சருக்கங்களையும் கொண்டது.

💐 இதன் பாவகை விருத்தப்பாவால் ஆனது.

💐 இந்நூல் வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்திலிருந்தும், யசோதர சரிதத்திலிருந்தும் எடுக்கப்பட்டது என்றும் கூறுவர்.

TNPSC Tamil |அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் எவ்வாறு? கிளிக் செய்யுங்கள்.! பொதுத்தமிழ்

  TNPSC Tamil |அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் எவ்வாறு? கிளிக் செய்யுங்கள்.!
பொதுத்தமிழ் 


அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

உயிர் எழுத்துக்கள் - 12 (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள)

ஆய்த எழுத்து - 1 (ஃ)

மெய்யெழுத்து மற்றும் அதன் வர்க்கம்

க், ங், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

க, ங, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன

💢 உயிர் எழுத்துக்களை முதலில் வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா

எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம் - ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை

💢 மெய்யெழுத்துக்களை முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்தாக வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா

தத்தை, தண்ணீர், தந்தம், தங்கை - தங்கை, தண்ணீர், தத்தை, தந்தம்

💢 உயிர் மெய் எழுத்துக்களை க, கா, கி, கீ என வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா

கோமாளி, காலை, கலை, கொக்கு - கலை, காலை, கொக்கு, கோமாளி

💢 எழுத்துக்களை க, ங, ச என்ற முறையில் வரிசைப்படுத்தக் கூடாது.

மேலும் பல எடுத்துக்காட்டுகள்

💢 திரை, தளிர், துறைமுகம், தாமரை, தீமை - தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்

💢 கொல்லன், காவலன், அரசன் - அரசன், காவலன், கொல்லன்

💢 பச்சை, பட்டம், பங்கு, பஞ்சு - பங்கு, பச்சை, பஞ்சு, பட்டம்

💢 நிதி, நான்கு, நட்பு, நேற்று - நட்பு, நான்கு, நிதி, நேற்று

💢 உழும், ஆடும், அடும் - அடும், ஆடும், உழும்

💢 மீன், முத்து, மாங்காய், மச்சம் - மச்சம், மாங்காய், மீன், முத்து

💢 காட்சி, பேறு, தெய்வம், உழைப்பு - உழைப்பு, காட்சி, தெய்வம், பேறு

💢 சௌக்கியம், சுக்கு, சங்கு, சொல் - சங்கு, சுக்கு, சொல், சௌக்கியம்

💢 சிறப்பு, சனி, சீற்றம், சாலை - சனி, சாலை, சிறப்பு, சீற்றம்

💢 இமயம், உலகம், அன்பு, ஐவர் - அன்பு, இமயம், உலகம், ஐவர்

💢 உழவன், வாணிபம், இடையன், ஊதியம் - இடையன், உழவன், ஊதியம், வாணிபம்

💢 ஏணி, ஈடுபாடு, ஆசை, ஊண் - ஆசை, ஈடுபாடு, ஊண், ஏணி

💢 தமிழ், படித்தல், ஊக்கம், இனிமை - இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்

💢 தூண்டில், தங்கம், தேர், திங்கள் - தங்கம், திங்கள், தூண்டில், தேர்

💢 கொக்கு, கீரி, கௌதாரி, கிளி - கிளி, கீரி, கொக்கு, கௌதாரி

மேலும் இது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள தமிழ் வாகை TNPSC  பகுதியை தேர்ந்தெடுக்கவும்!!


TNPSC|GROUP-IV|SCIENCE|பொது அறிவு - தாவரவியல் தாவரங்களின் உணவூட்டம்

பொது அறிவு - தாவரவியல்

தாவரங்களின் உணவூட்டம்

🌟 உயிரினங்கள் ஊட்டப்பொருள்களைத் தங்கள் உடலுக்குள் ஏற்றுக் கொள்வது உணவூட்டம் எனப்படும். உயிரினங்களுக்குத் தேவைப்படும் ஊட்டப்பொருள்கள் அனைத்தும் அவை எடுத்துக்கொண்ட உணவு மூலமே கிடைக்கின்றன.

🌟 உணவு எடுத்துக் கொள்ளும் முறைகளில் உயிரினங்கள் வேறுபடுகின்றன. இருவகையான ஊட்ட முறைகள் பொதுவாக உள்ளன.

(i) தற்சார்பு ஊட்ட முறை

(ii) பிறசார்பு ஊட்ட முறை

(i) தற்சார்பு ஊட்ட முறை :

🌟 தற்சார்பு ஊட்ட முறையில், தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கிறது. தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் தாவரங்கள் தற்சார்பு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

🌟 இவை கரியமில வாயு மற்றும் நீரை ஆற்றல் உதவியால் பல்வேறு கரிமப் பொருள்களாக மாற்றுகின்றன. கரியமில வாயுவை கரிமக்கூட்டுப் பொருள்களாக மாற்றுவதற்குத் தாவரங்கள் எவ்வாறு ஆற்றலைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்து இவை, ஒளித்தற்சார்பு உயிரிகள், வேதித்தற்சார்பு உயிரிகள் என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

(ii) பிறசார்பு ஊட்ட முறை :

🌟 சில உயிரினங்களால் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே தயாரிக்க முடிவதில்லை. இவை தங்கள் உணவுக்காக மற்ற உயிரினங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துள்ளன. தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாத உயிரிகள் பிறசார்பு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

🌟 பிறசார்பு ஊட்ட முறை இருவகைப்படும்.

1. சாறுண்ணி வகை ஊட்ட முறை

2. ஒட்டுண்ணி வகை ஊட்ட முறை

1) சாறுண்ணி(மட்குண்ணி) வகை ஊட்ட முறை :

🌟 இறந்த அல்லது உயிரற்ற கரிமக் கூட்டுப்பொருள்களிலிருந்து உணவைப் பெறும் தாவரங்கள் சாறுண்ணித் தாவரங்கள் எனப்படும். 

எ.கா. மியூக்கர், (பூஞ்சை), பேசில்லஸ் சப்டிலிஸ் (பாக்டீரியா) மானோட்ரோபா (ஆஞ்சியோஸ்பெர்ம்).

2) ஒட்டுண்ணி வகை ஊட்ட முறை :

🌟 ஒட்டுண்ணி உணவூட்ட முறையில் ஓர் உயிரினம் தனக்குத் தேவையான உணவை மற்ற உயிரியின் (ஓம்புயிரி) உடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது. இத்தகைய தாவரங்கள் ஒட்டுண்ணித் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.

🌟 ஒட்டுண்ணிகள் ஓம்புயிரியைத் துளைத்து, உணவு, நீர், கனிமங்களை உறிஞ்சுவதற்குச் சில சிறப்பான அமைப்புகளைப் பெற்றுள்ளன. இந்த அமைப்புகளுக்கு 'ஹhஸ்டோரியாக்கள்" (உறிஞ்சு உறுப்புகள்) என்று பெயர்.
எ.கா. சாந்தோமோனாஸ் சிட்ரி (பாக்டீரியா) செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா பூஞ்சை) கஸ்குட்டா (ஆஞ்சியோஸ்பெர்ம்)

கூட்டுயிரி உணவூட்ட முறை

🌟 இவ்வகை ஊட்டமுறையில் இரண்டு வேறுபட்ட உயிரினங்கள் சேர்ந்து வாழ்கின்றன. இவை ஒன்றாகச் சேர்ந்து வாழும்போது, இவை ஊட்டப் பொருள்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

🌟 இத்தகைய உணவூட்ட முறை கூட்டுயிரி ஊட்ட முறை என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்களுக்குக் கூட்டுயிரிகள் என்று பெயர்.
எ.கா. லைக்கன், மைக்கோரைசா, ரைசோபியம்.