Friday, June 14, 2019

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்

அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்


நன்றி: Dr. Gouse, MD (Acu.,Tcm)., Singapore.

ஆரோக்கியம் என்பது நோய் வந்தபின் குணப்படுத்திக் கொள்வதல்ல. நோய்கள் வராமல் உடலை  தற்காத்து கொள்வதே ஆரோக்கியமாகும். அப்படிபட்ட ஆரோக்கியத்தை பெறுவது எப்படி?

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். பசி வேறு, தாகம் வேறு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உணவோடு தண்ணீரை உட்கொண்டால் வயிற்றில் உள்ள உணவுத்துகள்கள் தண்ணீருடன் கலந்து மிதக்க ஆரம்பிக்கும். அதனால்  செரிமானம் தாமதமாகும். உணவை சாப்பிட்டு விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்துவது நல்லது.

2. பசிக்கும் போது பயமில்லாமல் உங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் போதுமான அளவு சாப்பிடுங்கள். பசி இருக்கும் பொழுது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டும்,  பேசிக்கொண்டும் சாப்பிடாதீர்கள்.

3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். ஆரோக்கிய ரீதியாக விரல்களுக்கும்
ஜீரணத்திற்கும்  நெருங்கிய தொடர்பு உள்ளது. உதாரணமாக ஒரு உணவை வெறுங்கையால் தொட்டால் அது விரைவில் கெட்டுப்போகும். அது போல் கையால் சாப்பிட்டால் அந்த உணவு வேகமாக சிதைந்து விரைவாக ஜீரணமாகிவிடும். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை.

4. விரும்பிய சைவ - அசைவ உணவுகளை உண்ணுங்கள். மசாலா குறைத்து, உப்பு, புளி, இனிப்பை மிதமாக சாப்பிடுங்கள். 

5. ஒரே வகை உணவையும், ஒரே சுவையுள்ள உணவையும் தொடர்ந்து சாப்பிடாதீர்கள். அவ்வப்போது அறுசுவைகளையும்  கலந்து சாப்பிடுங்கள். 

6. முடிந்த அளவு இயற்கையாக விளைந்த உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். 

7. பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள். 

8. கடைகளில் விற்கப்படும் ஜூஸ்களையும் மற்றும் அனைத்து குளிர் பானங்களையும் அவசியம் தவிர்த்து விடுங்கள். 

9. பக்கவிளைவுகள் இல்லாத எந்த மாத்திரையும் கிடையாது.  தலைவலி, ஜுரம் என்று எதற்கெடுத்தாலும் உடனே மாத்திரையை சாப்பிடாதீர்கள். சற்று பொருத்திருங்கள், ஓய்வெடுங்கள்.  சரியாகவில்லை என்றால் பிறகு தகுந்த மருத்துவரை பாருங்கள். 

10. சளி, ஜுரம், ஜலதோஷம் இருக்கும் போது டீ, காஃபி, பால் போன்றவற்றை சாப்பிடாமல் இருந்தால் நோய்கள் விரைவாக குணமாகும்.

11. குறைந்தது 6 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 4 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

12. பள்ளிச் செல்லும் மாணவர்களுக்கு அவசியம் காலை உணவை கொடுத்துவிடுங்கள். 
டீ, காஃபி, பால் போன்றவற்றை கொடுத்தால் பசி அடங்கிவிடும். அதனால் அவர்கள் காலை உணவை சாப்பிடமாட்டார்கள்.
காலையில் சாப்பிடாத மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். மேலும் பார்வை கோளாறுகள் உண்டாகும். 

13. சிறுவர்களை  தினமும் மாலையில் ஓடியாடி விளையாட அனுமதியுங்கள். செல்போன் விளையாட்டையும், டிவி பாரப்பதையும் கட்டுப்படுத்துங்கள்.

14. மாணவர்களை அதிகாலையில் படிக்க வையுங்கள். அதிகாலை நேரத்தில் படித்தால் இலகுவாக மனதில் பதிந்துவிடும்.

15. சிறுவர்களை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க அறிவுறுத்துங்கள்.

16. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை.  ரிலாக்ஸாக  நடைப்பயிற்சி செய்வதே சிறந்த உடற்பயிற்சியாகும். 

17. குடலில் மலம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் அரைப்பகுதியாவது  தினமும் மலமாக வெளியேறிவிட வேண்டும். 

👉  உணவை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு சுகர் வருவதில்லை.

👉  மனதை அமைதியாக வைத்திருப்பவர்களுக்கு BP வருவதில்லை.

👉  கவலை இல்லாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதில்லை. 

இவையனைத்தையும் கடைபிடிப்பவர்களுக்கு  
நோய்கள் வருவதில்லை.
நன்றி.

மேலும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு மேலே உள்ள 
Whatsup எண்ணில் இணையுங்கள்.

No comments:

Post a Comment