பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளை தவிர மற்ற கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தொழில்நுட்ப கல்வி வாரியத்தின் இணையதளத்தை அதிக மாணவர்கள் பார்த்ததால், தற்போது இணையதளம் முடங்கியுள்ளது.
tndte.gov.in மற்றும் intradote.tn.nic.in ஆகிய இரண்டு இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை கொடுத்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பாலிடெக்னிக் கல்வியை பொறுத்தவரை ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகிறது
No comments:
Post a Comment