Thursday, May 30, 2019

மோடி 2.O அமைச்சர்கள் - 2019 MINISTERS

மோடி 2.O அமைச்சர்கள்

  1. Modi Cabinet 2.0: List of new Council of Ministers 2019 



Modi Cabinet 2.0: List of new Council of Ministers 2019
Cabinet Ministers
1
Narendra Modi
2
Amit Shah
3
Rajnath Singh
4
Nitin Gadkari
5
Nirmala Sitharaman
6
Smriti Irani
7
S Jaishankar
8
Ravi Shankar Prasad
9
D.V. Sadananda Gowda
10
Harsimrat Kaur Badal
11
Mahendra Nath Pandey
12
Arvind Sawant
13
Prahlad Joshi
14
Piyush Goyal
15
Prakash Javadekar
16
Mukhtar Abbas Naqvi
17
Ram Vilas Paswan
18
Thawar Chand Gehlot
19
Giriraj Singh
20
Gajendra Singh Shekhawat
21
Santosh Gangwar
22
Arjun Munda
23
Dr Harshavardhan
24
Dharmendra Pradhan
25
Ramesh Pokhriyal Nishank
Minister of State

Thursday, May 23, 2019

புதியப் பாடப்புத்தகம்||11ம் வகுப்பு|| 38 சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ள நூலின் பெயர்?? 11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்

புதியப் பாடப்புத்தகம்||11ம் வகுப்பு|| 38 சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ள நூலின் பெயர்??
11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள் 


1. சுடுகாடு, கொல்புலி, குரைகடல் என்பதன் இலக்கண குறிப்பு - வினைத்தொகைகள்

2. திருவாசகம் என்பது ------------ கடவுள் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். - சிவன்

3. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக திருவாசகம் அமைந்துள்ளது. - எட்டாவது

4. திருவாசகத்தில் காணப்படும் பதிகங்களின் எண்ணிக்கை - 51 பதிகங்கள்

5. திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 658

6. 38 சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ள நு}லின் பெயர் - திருவாசகம்

7. மாணிக்க வாசகர் இயற்றிய நு}ல்கள் எவை? - திருவாசகம், திருக்கோவையார்

8. மாணிக்க வாசகர் யாரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார்? - அரிமர்த்தன பாண்டியனிடம்

9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்? - ஜி.யு.போப்

10. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடல் எது ? - நம்ரதா கே சாகர்


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

Wednesday, May 22, 2019

இளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா


இளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா?

ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும். அதிகபட்சமாக 250 - 300 ML இளநீர் அருந்தலாம். அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும்.

வெயில் காலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இளநீருக்கான தேவை என்றுமே குறையாது இருப்பினும் சமீப காலமாக இளநீரை அதிகமாக அருந்தக் கூடாது, கர்பிணிகள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்கவும் என்பன போன்ற செய்திகளை அதிகமாகப் பகிரப்படுகிறது. உண்மையாக இளநீர் குடிப்பது ஆபத்தா? மருத்துவம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடிய இயற்கை நீர். ”வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன “ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி ராஜ். இவர் வூட்டு நியூட்ரீஷியன் கிளீனிக்கின் நிறுவனர் மற்றும் மருத்துவராக இருக்கிறார்.இளநீரை தினமும் அருந்துவதால் ஆபத்து என்பதெல்லாம் உண்மை கிடையாது என்று பிரீத்தி ஒரு ஆய்வையும் மேற்கோள் காட்டுகிறார்.

படிக்க... வியர்வையில் இருந்து தப்பிக்க இதோ தீர்வு.

அதில் தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் உடலுக்கு மிக முக்கியமான இன்சுலினை தூண்டி வேலை செய்ய வைக்கிறது. அதை தூண்டுவதற்கான ஊட்டச்சத்து இளநீரில் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.
அதேபோல் இளநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் என்னும் வதந்தியும் பரப்பப்படுகிறது. அதற்கு பிரீத்தி “ எத்தனைப் பெரிய இளநீராக இருந்தாலும் அதில் அதிகபட்சமாக 250 ML சர்க்கரைதான் இருக்கும். இதே நீங்கள் மற்ற சாஃப்ட் ட்ரிங்குகளை குடிக்கும்போது அதில் குறைந்தபட்சம் 20 டீஸ்பூன் சர்க்கரை இருக்கிறது. இளநீர் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானதே என்கிறார்.

இளநீர் அருந்தும் முறை :

பிரீத்தி ராஜ் ( ஊட்டச்சத்து நிபுணர் )

இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து உண்ண வேண்டும் என்கிறார் பிரீத்தி “ இளநீரின் சத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கவேண்டுமெனில் வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும். இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, சருமத்தை பளபளக்கச் செய்யும்

வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்கக்கூடிய ஆற்றல் சத்துகள் போன்றவை அதிகமாக இருக்கின்றன. வெளிநாடுகளிலும் இளநீரை அருந்தியபின் வழுக்கையை உணவுபோல் உண்ணுகின்றனர். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்களும் இந்த முறையையே பின்பற்றப்படுகிறது.” என்கிறார்.

நீரிழிவு நோயாளிகள் இளநீர் அருந்தலாமா? என்ற கேள்விக்கு “ தாராளமாக அருந்தலாம். ஆனால், அவர்கள் தங்களின் உணவு முறையில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் பிரச்னை இல்லை. அவர்கள் இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து உண்ணும்போது இரத்தத்தில் உள்ள குளுகோஸைக் கட்டுப்படுத்தும். இது சர்க்கரையை விட ஆபத்து இல்லை. குறிப்பாக செவ்விளநீர் அருந்துவது இன்னும் நல்லது” என்கிறார்.

படிக்க... நாய்களைக் காட்டிலும் ஆண்களின் தாடியில் கிருமி அதிகம்!

இன்று பலருக்கும் இதயப் பிரச்னை, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் பொட்டாசியத்தின் குறைப்பாடால் ஏற்படக் கூடியது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.

இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம்தான் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கும் இந்த இளநீர் நல்ல மருந்தாக இருக்கும். சிறுநீரகக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும் எனக் குறிப்பிடுகிறார். குறிப்பாக பெண்களுக்குதான் சிறுநீரகப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. அவர்கள் இளநீரை எடுத்துக் கொள்வது நல்லது எனவும் பரிந்துரைக்கிறார்.

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம். வெயிலில்லாத காலை மற்றும் மாலையில் அருந்துவதைத் தவிர்க்கலாம்.



கர்பிணிகள் உடலுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறார் எனில் இளநீர் அருந்தலாம். அவர்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்னைகள் , அதற்குரிய மருத்துவம் எடுத்துக் கொள்கிறார்கள் எனில் அவர்கள் இளநீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி அருந்தலாம் என்கிறார் பிரீத்தி.

தீமைகள் குறித்த கேள்விக்கு “இளநீர் அருந்துவதால் தீமைகள் என்பது மிகக் குறைவு. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இளநீர் அருந்தக் கூடாது. அதேபோல் நீர் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்னும் கட்டுப்பாடு உள்ளவர்கள், கால் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படும் பிரச்னை கொண்டோர், நட்ஸ் அலர்ஜி , இதயப் பிரச்னை உள்ளவர்கள், பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்னும் கட்டுப்பாடு உள்ளவர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

ஒரு நாளைக்கு எத்தனை இளநீர் அருந்தலாம் என்ற கேள்விக்கு “ ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும். அதிகபட்சமாக 250 - 300 ML இளநீர் அருந்தலாம். அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். பின் அதற்குறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆரோக்கியமான உடல் கொண்டவர்கள் அதிகபட்சமாக இரண்டு இளநீர் அருந்தலாம் “ என்கிறார் பிரீத்தி.

நன்றி News-18

Tuesday, May 21, 2019

கரிசாலை நெய்

கரிசாலை நெய் 

————————-
கரிசாலை என்ற வெள்ளை பூ பூக்கும் கரிப்பான் என்ற மூலிகை எங்கும் கிடைக்கும் . நகர் புறத்தில் கீரை விற்பவர்களே கொண்டுவந்தது தறுவார்கள் . அதை கழுவி தண்ணீர் காய்ந்ததபின் . மிச்சியில் போட்டு அரைத்து விழுதை எடுக்கவேண்டும் . அதை ஒரு துணி அல்லது வடிகட்டியில் வைத்து பிழிந்து சாறு எடுக்கவும் . கரிசாலை சாறு ஒருபக்குடன் அரைபங்கு நெய் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும் . சிறு தீயாக எரிக்கவும் . சிறிது நேரத்தில் தண்ணீர் சத்து வற்றி மெழுகு போல்வரும் . முருகவிடகூடது . . 5கிராம் மிளகை த்ஹோல் செய்து இந்த கரிசாலை நெய்யில் சேர்த்து கிண்டி இறக்கவும் . . கரிசாலை நெய் பயன் பாட்டுக்கு தயார் .
பயன்படுத்தும் முறை

———————————–
கரிசால நெய்யை கட்டை விரல் வெள்ளை பகுதியில் ரேகைக்கு மேல் உள்ள பகுதி முழுவதும் தடவவும் . வாயை நன்றாக திறக்கவும் . கரிசாலை நெய் தடவிய கட்டை விரலை வாய்க்கு உள்ளே அன்னக்கிர்க்கு ( உள்நாக்கு ) மேல்பக்குதிக்கு கொண்டு செல்லவும் . .
கரிசாலை நெய்யை அண்ணாக்கின் மேல்பகுதியில் தடவவும் . அங்கு கட்டை விரலால் அழுத்தி இடவலமாக(கையை ) சுற்றவும் . ஒரு நிமிடம் சுற்றினால் போதும் . தலை , தொண்டை மார்பில் இருக்கும் விஷம் சளியாக கோழையாக கைவழியாக இறங்கும்.

இது வழ வாழபாக இருப்பதால் வழலை என்று பெயர் . இது சங்கிலிபோல் நஊலாகவும் வரும் . சிலருக்கு உள்ளே உள்ள சளி வெளிவரும் . . இப்படி வழலை வெளி வந்தபின் வாய கொப்பளிக்கவும் . வெது வெதுப்பான நீர் நல்லது . இது ஒரு சுற்று . இவ்விதம் நான்கு சுற்று வழலை வாங்கவும் . . இதை சிவா வாக்கியர் மூலாதாரத்தில் முளைக்கும் கோரையை தினம் நான்ங்குகட்டு அறுத்து எடுக்கவேண்டும்.. இதனால் கிழவன் பாலனாவான் என்று மறை பொருளாக சொல்கிறார் .. இந்த நெய்யை ஒரு ரூபாய் வட்டம் அளவு சாப்பிட்டு நீர் அருந்தவும்..

நன்றி: 
முகநூல் பதிவு....☝️

புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியாக கருதப்படுவது எது?


புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியாக கருதப்படுவது?


1. கார்பனின் புற வேற்றுமை வடிவம் எத்தனை வகைப்படும் - 3 

2. தொழுநோயினை ஏற்படுத்தும் நோய்காரணி? - மைக்கோபாக்டீரியம் இலெப்ரே

3. இந்திய அரசு எந்தாண்டு முதல் பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது? - 1954

4. தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது? - தேனி 

5. சர்வதேச யோக தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? - ஜீன் 21

6. புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியாக கருதப்படுவது - மரியான அகழி 

7. இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - தாதா சாகேப் பால்கே

8. யுனோஸ்கோ அமைப்பு, நாளந்தா பல்கலைகழகத்தை உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக எந்த ஆண்டு அறிவித்தது? - 2016

9. தமிழ் இலக்கியத்தில் புனையப்பட்ட முதல் புதினம் எது? - பிரதாப முதலியார் சரித்திரம்

10. அமர்த்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை வென்ற ஆண்டு - 1998


பிள்ளைக்கூடம் என்ற நூலின் ஆசிரியர் யார்??

பிள்ளைக்கூடம் என்ற நூலின் ஆசிரியர் யார்??

TET தேர்வு : தனிவட்டி தொடர்பான முக்கிய வினாக்கள்  - 2019

11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்


1. 1882 -ல் உருவான ஹண்டர் கல்விக்குழு வலியுறுத்தியது எதனை? - தாய்மொழிக்கல்வியை

2. இந்திய அரசியல் அமைப்பின் எந்த உறுப்பின் கீழ் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. - 45வது உறுப்பு

3. பிள்ளைக்கூடம் என்ற நு}லின் ஆசிரியர் யார்? - இரா. மீனாட்சி

4. சுடுப்பு+க்கள், நெருஞ்சி போன்ற கவிதை தொகுப்பினை படைத்தவர் யார்? - இரா.மீனாட்சி

5. பிள்ளைக்கூடம் என்ற பாடல் எந்த நு}லிலிருந்து எடுக்கப்பட்டது? - கொடி விளக்கு

6. நற்றிணை ------------- என்ற அடைமொழியால் அழைக்கப்படுகிறது. - நல்ல திணை

7. நற்றிணையில் காணப்படும் சிற்றெல்லை மற்றும் பேரெல்லைகளின் எண்ணிக்கை எவ்வளவு? - 9, 12

8. நற்றிணை தொகுத்தவர் யார்? - பாண்டியன் மாறன் வழுதி

9. நற்றிணை தொகுப்பித்தவர் யார்? - பாரதம் பாடிய பெருந்தேவனார்.

10. சங்க கால புலவர்களில், நற்றிணையில் 110ம் பாடலை பாடியவர் யார்? - போதனார்

11-ம் வகுப்பு புதிய பாடப்பகுதி பொதுத்தமிழ் | விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்டவர்?| TNPSC தேர்வு - பொதுத்தமிழ் - கவிஞர்களின் சிறப்புப் பெயர்கள்

11-ம் வகுப்பு புதிய பாடப்பகுதி பொதுத்தமிழ் | விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்டவர்?|
TNPSC தேர்வு - பொதுத்தமிழ் - கவிஞர்களின் சிறப்புப் பெயர்கள்!! 👇


11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள் 




1. தஞ்சை பெரிய கோவிலின் 1000வது ஆண்டு விழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது? - 2010

2. தஞ்சை பெரிய கோவிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது? - 216 அடி

3. சோழன் செங்கணான் எழுபத்தெட்டு கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்? - திருநாவுக்கரசர்

4. விசித்திர சித்தன் என்று அழைக்கப்பட்டவர் யார்? - முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

5. மகேந்திரவர்ம பல்லவன் குடைவரை கோவில்களை அமைத்ததாக கூறும் கல்வெட்டு - மண்டகப்பட்டு கல்வெட்டு

6. கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்று கூறியவர் யார்? - பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

7. ப்ரெஸ்கோ என்ற இத்தாலிய சொல்லுக்கு என்ன பொருள் - புதுமை

8. ப்ரெஸ்கோ ஓவியங்கள் காணப்படும் இடங்கள் - எல்லோரா, அஜந்தா, சித்தன வாசல்

9. காகிதத்தில் ஒரு கோடு என்ற கவிதை தொகுப்பினை படைத்தவர் யார்? - மதுசூதனன்

10. ஆத்மநாம் என்ற கவிதை தொகுப்பினை எழுதியவர் யார்? - மதுசூதனன்

Wednesday, May 8, 2019

மீட்பு போகன்| கதை கேட்க வாங்க|பாவா செல்லதுரை

மீட்பு போகன்| கதை கேட்க வாங்க|பாவா செல்லதுரை


பக்கத்தில் வந்த அப்பா| சுந்தர இராமசாமி| பாவா செல்லதுரை

பக்கத்தில் வந்த அப்பா| சுந்தர இராமசாமி

பாவா செல்லதுரை

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!


சாலையின் ஓரத்தில் இருக்கும் தள்ளுவண்டியை கடக்கும் போது வாசனை தூக்குகிறதா? ஆம், அதான் முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழத்தின் சீசன் ஆரம்பித்துவிட்டதே? பின் வாசனை தூக்காமலா இருக்கும். அப்படி விற்கப்படும் பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்து மட்டும் செல்லாமல், அதனை வாங்கி சாப்பிடவும் செய்யுங்கள். ஏனெனில் பலாப்பழம் வருடம் முழுவதும் கிடைக்காது. அதற்கென்று வரும் சீசன் போது வாங்கி சாப்பிட்டால் தான், அதன் உண்மையான சுவையை ருசிக்க முடியும்.

உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க...

பலாப்பழம் மட்டுமின்றி, அதன் விதையிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை வளமாக உள்ளது. மேலும் இப்பழத்தில் கலோரிகள் இருக்கிறது ஆனால் கொழுப்புக்கள் இல்லை. ஆகவே இப்பழத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு மட்டுமின்றி அழகைப் பாதுகாக்கவும் உதவுகிறது. சரி, இப்போது பலாப்பழத்தின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

மலச்சிக்கல்:

பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

புரோட்டீன்:

பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி:

பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

ஆற்றல்:

பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சிம்பிள் சர்க்கரையான ஃப்ருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் உள்ளது.

புற்றுநோயைத் தடுக்கும்:

பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இரத்த அழுத்தம் :

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செரிமானம்:

பலாப்பழத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

குடல் புற்றுநோய்:

பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

பார்வையை மேம்படுத்தும்:

பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

சரும ஆரோக்கியம்:

தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.

ஆஸ்துமா:

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்:

பலாப்பழத்தில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளை வலிமையோடும் வைத்துக் கொள்ளும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த சோகை:

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், பேன்டோதெனிக் ஆசிட், காப்பர், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உருவாக உதவும். மேலும் இப்பழம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சி, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

சளி மற்றும் நோய்த்தொற்றுகள்:

பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும். மேலும் ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும்.

இரத்த சர்க்கரை அளவு:

உடலில் மாங்கனீசு குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது. ஆனால் இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

தைராய்டு தைராய்டு:

சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் காப்பர் குறைபாடு ஏற்பட்டால், அது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இத்தகைய காப்பர் பலாப்பழத்தில் இருப்பதால், தைராய்டு இருப்பவர்கள், இதனை உட்கொள்வது நல்லது.

மாலைக்கண் நோய்:

பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இதய நோய்:

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.

அல்சர்:

அல்சர் இருப்பவர்கள், பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குணமாவதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.

சரும சுருக்கம்:

பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

கூந்தல் வளர்ச்சி:

பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பட்டுப்போன்ற சருமம்:

நல்ல பட்டுப் போன்ற சருமத்தைப் பெற, பலாப்பழத்தின் விதையை உலர வைத்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, உலர வைத்து கழுவி வேண்டும். இப்படி செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

வைட்டமின் ஏ:

பலாப்பழத்தின விதையில் உள்ள வைட்டமின் ஏ, முடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.

கலகேஷ்ரா அறக்கட்டளையில் வேலைவாய்பு

கலகேஷ்ரா அறக்கட்டளையில் வேலைவாய்பு

நிறுவனத்தின் பெயர்: கலகேஷ்ரா அறக்கட்டளை‘

வேலை வகை: மத்திய அரசு வேலை

வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு

பணியிடங்கள்  : Faculty (Bharatanatyam,Carnatic Music)

கல்வித்தகுதி : Post Graduate/Diploma

வயது வரம்பு :  28 வயதுக்குள் இருக்க வேண்டும். [வயது வரம்பில் தளர்வு உண்டு ]

சம்பளம் : Rs. 15,000 - Rs. 25,000

தேர்வுமுறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் : 15.05.2019

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Kalakshetra Foundation Thiruvanmiyur,
Chennai 600 041

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு &விண்ணப்பபடிவம்: 

Official Website Career PageClick Here
Official Notification & Application Form PDFClick Here

மழையின் சிறப்பை அய்யன் திருவள்ளுவர் என்ன அழகாக அழுத்தமாக கூறியுள்ளார்!!!

மழையின் சிறப்பை அய்யன் திருவள்ளுவர் என்ன அழகாக அழுத்தமாக கூறியுள்ளார்!!!


வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

“மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்”

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

“மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்”

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

“பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்”

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

“வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது”

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

“மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்”

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

“மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது”

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

“மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.”

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

“எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்”


நாம் நமது பங்களிப்பாக எங்கெங்கு முடியுமே அங்கெல்லாம் அடர் வனம் செய்வோம்.


பனைகள் சூழ்ந்த உயிர் வேலி நமது பூமியில் உருவாக்குவோம்.

###முதுகு வலிக்கு காஞ்சி பெரியவா சொல்லும் மருந்து

முதுகு வலிக்கு காஞ்சி பெரியவா சொல்லும் மருந்து


☘☘☘☘☘☘
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்! 

நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!

"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! எல்லா  வகை...  வைத்தியமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சது தான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. குணப்படுத்தணும்" என்றார்.

அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.

உடனே பெரியவாள் ''முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊற வச்சு, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவசர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "சனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட செரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை] 

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதின்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போகட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மிளகு ரசம், பெரண்டை துவையல் பண்ணி சாப்டு..! என்ன?" என்றார்.

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்" என்றார் அந்த பக்தர்.

மூணு மாதம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர். 

வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரசம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன சிம்பிள் வைத்தியம் கை மேல் பலன் கொடுத்திருந்தது.

பெரியவா திருவாக்கிலிருந்து சில                      health tips...

வீடுகள்ல, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - விளக்கேத்த, சமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. விளக்கெண்ணெய் - வருடத்தில் ரெண்டு தரம், காலைல வெறும் வயித்துல குடிச்சா..... வயிறு செரியா இருக்கும். வயித்துவலி இருந்தா, கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா செரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனமும் கை,கால், முட்டிகள்ல தடவிண்டா, முட்டி வலி வரவே வராது. 

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]

தெனமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்திரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ல, வெளியிலேர்ந்து வந்தா... குடிசைவாசிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிண்டு தான் வீட்டுக்குள்ளயே நொழைவா! 

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான கெடக்கு! பின்ன...ஏன் வியாதி வராது? என்று கூறுகிறார் மஹா பெரியவாள்.☘☘☘

###SI Exam 2019 : புவியியல் பகுதி முக்கிய வினா விடைகள்!!!2019 புவியியல் வினா விடைகள்

SI  Exam 2019 : புவியியல் பகுதி  முக்கிய வினா விடைகள்!!!2019

புவியியல் வினா விடைகள்


1. நிலநடுக்கம் தோன்றும் மையம் எவ்வாறு கூறப்படுகிறது? - நிலநடுக்க மையம்

2. இந்தியாவிலுள்ள செயல்படும் எரிமலை எங்குள்ளது? - பாரன் தீவு

3. பு+மியின் எந்த பகுதி பேரிஸ்பியர் என்றழைக்கப்படுகிறது? - கருவம்

4. ரிக்டர் அளவு கோளின் மதிப்பீட்டு எல்லை எவ்வளவு? - 0-9 ரிக்டர்

5. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அலைகளில் எந்த அலை அதிக அழிவினை ஏற்படுத்துகிறது? - டு - அலைகள்

6. மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது? - ஆப்பிரிக்க கண்டம்

7. தமிழ்நாட்டிலுள்ள இறந்த எரிமலைக் குன்று எது? - திருவண்ணாமலை குன்று

8. வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி - அழுத்தமானி

9. குருட்டாறுகள் உருவாக்கப்படுவது - பள்ளத்தாக்கு பாதையில்

10. துணை அயன உயர்வழுத்த மண்டலத்தினை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - குதிரை அட்சரேகை

11. பீடப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - காளான் பாறை

12. பர்கான் எந்த நிலத்தோற்றத்துடன் தொடர்புடையது? - படிய வைத்தல்

13. மியின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கி செல்லும் போது 1000மீ உயரத்திற்கு எவ்வளவு வெப்பநிலை குறையும்? - 6.5°C

14. வெப்பமண்டலத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிர் - நெல்

15. எல்நினோ ஏற்படும்போது வெப்ப நிலையானது எந்த கடற்கரையில் மிக வேகமாக அதிகரிக்கிறது? - பெரு மற்றும் ஈக்வடார்


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!

###TNPSC | வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதின் பெயர் என்ன??- 2019 | 11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்

வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதின் பெயர் என்ன??- 2019




11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்

1. யானைகளின் வாழ்நாள் எத்தனை ஆண்டுகள் - 70ஆண்டுகள்

2. வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதின் பெயர் - வேணுமேனன் ஏலிஸ் விருது

3. 'வேணுமேனன் ஏலிஸ்" விருதினை கிருஷ்ண மூர்த்தி எந்த ஆண்டில் பெற்றார்? - 2000

4. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை அரசின் மூலம் செயல்படுத்தியவர் யார்? - கிருஷ்ண மூர்த்தி

5. 'யானை டாக்டர்" என்ற குறு புதினம் ------------- என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. - அறம்


6. மழை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ------------- என்ற கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது. - OROLOGY

7. மலைவாழ் மக்களாகிய திராவிடர்களை மலைநில மனிதர்கள் என்று அழைத்தவர் யார்? - கமில் சுவலபில்

8. 'சேயோன் மேய மைவரை" என்ற மேற்கோள் உடைய நு}ல் எது? - தொல்காப்பியம்

9. 'மலை வேடா" என்ற சொல்லினை உருவாக்கிய மாநிலம் எது? - இடுக்கி கேரளம்

10. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கும் சொல் - மெட்டு


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

Saturday, May 4, 2019

PSTM சான்றிதழ் என்றால் என்ன?

PSTM சான்றிதழ் என்றால் என்ன? 



தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு 

PSTM சான்றிதழ் என்றால் என்ன?

💥TNUSRB முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.

💥தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழி கல்வி ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்திருந்தால் மட்டுமே PSTM சான்றிதழ் பெற முடியும்.

💥நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, அரசுத் தேர்வுக்கு நீங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.

💥அரசுத் தேர்விற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்பொழுது PSTM சான்றிதழின் வேறு எந்த விவரத்தையும் கேட்பதில்லை. நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் PSTM சான்றிதழ் வாங்கினாலும் போதுமானது. 

💥தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கும் பொழுதே நீங்கள் இந்த PSTM சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், PSTM சான்றிதழ் விரைவில் பெற வேண்டும்.

💥பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (DEGREE) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். 

💥PSTM-க்கான வடிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தமிழ் மொழியில் நிரப்பலாம்.


Thursday, May 2, 2019

'விதைகளே இனி பேராயுதம்

'விதைகளே இனி பேராயுதம்



'விதைகளே இனி பேராயுதம்' என்று அன்றே முழக்கமிட்டவர் நம் இயற்கை சூழல் ஆய்வாளர் திரு.கோ..நம்மாழ்வார் ஐயா அவர்கள்.

    ஏன் அவர் அப்படி முழக்கமிட்டார் என்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு  புரிய வருகிறது. நாம் காலையில் எழுந்து முகம் துடைக்கும் துண்டு முதல் பல் துலக்குவதில், குளிப்பதில், உண்பதில், பயணிப்பதில் என்று தொடர்ந்து இரவு படுக்கை வரை பெரும்பாலும் அனைத்திலும் கலப்படம் இல்லாமல் இல்லை.

முன்பெல்லாம் நமக்கு தேவைப்படும் விதைகளையோ/நாற்றுகளையோ நாமே உருவாக்கி செயல் பட முடியும். ஆனால் இன்று சூழ்நிலை வேறு. பணம் இருந்தால் கடையில் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற மனோபாவம் வந்தபின், நாம் தற்சார்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இப்போது விதைகளுக்கே ஒரு பெரிய தொகையை  ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.

     சரி புரிதல் உள்ளவர்கள் அவ்விதைகளை ஒருமுறை வாங்கி அடுத்தடுத்து பயிர்களை உருவாக்கலாம் என்றாலும் வாய்ப்பில்லை. காரணம் அனைத்துமே மீண்டும் முளைக்காத விதைகள். அதனால் அடுத்தடுத்து  பருவங்களுக்கும் நாம் அவனிடமே கையேந்த வேண்டிய நிலை உள்ளது. காரணம், விதைகளுக்கு பின் ஒரு பெரும் வணிகம் கட்டமைக்கப்பட்டு உலா வருகிறது என்பதே!

   சரி உண்மையான பொருளை நாம் அடைய வேண்டும் என்றால் என்ன செய்வது என யோசித்து நேரடியாக உற்பத்தியாளரிடம் சென்றால் அங்கும் போலிகள் வலம் வருகின்றன. காரணம் , போலி என்பது அவர்களுக்கே தெரியாமல் உள்ளது.

 சரி என்ன செய்ய முடியும்?

புரிதல் உள்ள நபர்களிடம் ஒவ்வொரு வகை விதைகளாக சேகரித்து, நாமே பண்டைமாற்றம் செய்து தற்சார்பாய் வாழ்வது தான். இதனால் நம் விதைகள் நம் கைக்குள்ளே உலா வரும். இதனால் மரபணு மாற்றப்பட்ட விதைகளோ அல்லது முளைக்காத விதைகளையோ, கடைகளையோ நாடி செல்ல தேவை இருக்காது.

    இதற்காக 'செங்கோல் வளர்ச்சிக் கழகம்' அமைப்பில் ஒரு துணை குழுவை உருவாக்கி அதற்கு 'முளை' என்று பெயரிட்டு விதை வங்கியில் விதைகளை பண்டமாற்றம் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன் மூலம் பல வகையான விதைகளை   முறையாக பண்டமாற்றம் செய்து வளர்த்திட 'முளை விதையகம்'  ஒரு தளமாக இயங்கும். 

    ஆதலால், தங்களிடம் இருக்கும் நாட்டு இரக விதைகளை பகிருங்கள், இல்லாதவர்களிடம் சேர்ப்போம். 

நம்மிடம் கீழ்கண்ட விதைகள்/நாற்றுகளின் தரவுகள் உள்ளன. தேவைப்படுபவர்கள் கூறுங்கள் தகவல் கொடுக்கிறோம். தங்களிடம் உள்ள விதைகள்/நாற்றுகளை கூறுங்கள் பரவலாக்குவோம்.

அ) காய்கறி விதைகள்:
௧.வெண்டை
௨.பீர்க்கன்
௩.சுரை
௪கொலுமிச்சை
௫.எலுமிச்சை
௬.அவரை
௭.மொச்சை
௮.பூசணி
௯.முருங்கை
௧௰.தம்மட்டவரை
௧௨.நுரைபீர்க்கன்
௧௩.பாகற்காய்
௧௪.புடலை
௧௫.கத்தரி

ஆ) கீரை விதைகள்:
௧.புளிச்சகீரை
௨.சர்க்கரை வர்த்தினி
௩.அகத்தி

இ) பழவிதைகள்/நாற்றுகள்:
௧.தேன் வாழை
௨.மொந்தன் வாழை
௩.பூ வாழை
௪.விளாம்பழம்
௫.பப்பாளி
௬.நாவல்

ஈ) பூஞ்செடி விதைகள்/நாற்றுகள்:
௧.செம்பருத்தி
௨.மல்லிகை
௩.பவளமல்லி
௪.மரமல்லி

உ) மூலிகை செடி விதைகள்/நாற்றுகள்:
௧.கற்றாழை
௨.ரணக்கள்ளி
௩.கள்ளி முள்ளியான்
௪.தூதுவளை 
௫.பிரண்டை
௬.கற்பூரவல்லி
௭.திருநீற்றுப்பச்சை
௮.மருதாணி
௯.துளசி
௧௰.நொச்சி
௧௧.சிறியாநங்கை(நிலவேம்பு)
௧௨.அமுக்கிரா
௧௩.முடக்கத்தான்
௧௪.துத்தி

ஊ) பயிறு விதைகள்:
௧.நரிப்பயறு
௨.கருப்பு கொள்ளு

எ) அரிசி நெல் விதைகள்:
௧.திருச்செங்கோடு சம்பா
௨.மாப்பிள்ளை சம்பா

ஏ) மர விதைகள்:
௧.நீர்மருது
௨.வில்வம்
௩.யானைக்குண்டு மணி
௪.பெருங்கொன்றை
௫.மலைவேம்பு
௬.புங்கன்
௧௰.பூவரசு
௧௨.தேக்கு
௧௩.பாதாம்
௧௪.கொடுக்காப்புளி
௧௫.மந்தாரை
௧௬.சொர்க்கம்

ஐ)  விதைகள்:

௧.மரபருத்தி
௨.கருங்கண்ணி பருத்தி
௩.ஆமணக்கு


    வாருங்கள்
'இழந்த மரபை மீட்போம்'

 குறிப்பு: தங்களுக்கு வேண்டிய விதைகளை நேரடியாக /அஞ்சல் மூலமாக பெறமுடியும். *எந்தவொரு விதைகளுக்கும் கட்டணமில்லை. மாறாக அடுத்த சிறிது காலத்தில் இரு மடங்காக முளை விதையகத்திற்கு விதைகளை திருப்பி கொடுக்க வேண்டும். தற்போது, நம்மிடம் உள்ள தரவுகளின் படி திருச்செங்கோடு, நாமக்கல் பகுதியில் மேலே குறிப்பிட்ட விதைகள் கிடைக்கும்.

தொடர்புக்கு:
+919345928585
+919842978556

இப்படிக்கு,
முளை விதையகம்,
செங்கோல் வளர்ச்சிக் கழகம்
'மாறுவோம் மாற்றுவோம்'
www.Facebook.com/sengolvalarchikazhagam/

Forwarding 👆🏽👆🏽