மூல நோய் குறித்து கூறும், இயற்கை மருத்துவர் எஸ்.நந்தினி: மலக்குடலில் உள்ள சுருக்கு தசையின் உட்பக்கம் இருக்கக்கூடிய சிறு அறைகள், புடைத்து வீங்குவதால் மலக்குடலில் மூலம் உருவாகிறது.
சித்த மருத்துவத்தில் இது, 21 வகைகளாகவும், நவீன மருத்துவத்தில் இரண்டு வகைகளாகவும் பிரிக்கப்படுகிறது.
மலவாயின் உட்புறமாகக் காணப்படுவது, உள் மூலம். வெளிறிய சிவப்பு நிறத்தில் காணப்படுவதுடன், சளிச்சவ்வானது இதன் முனையை மூடியிருக்கும். மலம் கழிக்கும்போது வெளித்தள்ளப்படும்.
மலவாயின் உட்புறமாகக் காணப்படுவது, உள் மூலம். வெளிறிய சிவப்பு நிறத்தில் காணப்படுவதுடன், சளிச்சவ்வானது இதன் முனையை மூடியிருக்கும். மலம் கழிக்கும்போது வெளித்தள்ளப்படும்.
மலவாயின் வெளிப்புறமாகக் காணப்படுவது வெளி மூலம். வெளிப்புறத் தோலால் மூடப்பட்டு இருக்கும்; அதிகளவு வலியை உண்டாக்கும். ஆசன வாயில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வலியுடன் கூடிய வீக்கம். வாயுத் தொல்லை, மலத்தோடு ரத்தம் கசிதல், அஜீரணம், மலச்சிக்கல், வயிறு உப்புசம் ஆகியவை, மூலநோயின் அறிகுறிகள். தேவைப்பட்டால், 'ப்ராக்டோஸ்கோபி' எனும் எளிய முறை சோதனையை, மருத்துவர் பரிந்துரைப்பர்.
தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி; நார்ச்சத்து அதிகமுள்ள காய், பழம், தானியம், கீரைகளை உணவில் சேர்த்தல்; தாராளமாக நீர் அருந்துதல்; காரம் மற்றும் மசாலாப் பொருட்களைக் குறைத்து உட்கொள்ளுதல்...மலச்சிக்கல் மற்றும் குடல்புண் உண்டாக்கும் மாத்திரைகளைத் தவிர்த்தல்; தினமும் மலம் கழித்தல்; ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்து வயிற்றை சுத்தம் செய்தல் ஆகியவற்றால், மூலநோய் வராமல் தடுக்கலாம். வெளி பிரயோக மருந்தாக, காட்டு ஆமணக்கு இலையை, ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, மூல முளை மீது வைத்துக் கட்ட, முளை பெயர்ந்து விழும்; துத்தி இலையை அரைத்து, விளக்கெண்ணெய் விட்டு தைலமாக தயாரித்தும் தடவலாம். ஆல், அரசு, அத்தி இவற்றின் பட்டைகளை சம அளவு எடுத்து இடித்து, நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை கழுவலாம்.
புளிய இலை, வேப்பிலையை, நீரில் கொதிக்க வைத்துக் கழுவ, தொற்று நீங்கும். திரிபலா சூரணத்தால், மூலத்தைக் கழுவி வர, ரத்தப் போக்கு நிற்கும்.மேற்கூறிய ஏதாவதொரு கஷாயத்தை, 1லி., தயாரித்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து, பெரிய பாத்திரத்தில் ஊற்றி ஆசனவாய், இடுப்பு நனையும்படி, 10 நிமிடங்கள் உட்கார, மூலத்தால் உண்டான வலி, கடுப்பு குறையும்.தேங்காய் பாலில், சிறிது கற்கண்டு, நெய்யில் வறுத்த பெருங்காயப் பொடி சேர்த்து பருகி வர, மூலத்தால் உண்டான எரிச்சல், வலி குறையும். விளாங்கு மீன், துத்திக்கீரை, தாளிக்கீரை, பசலைக் கீரை, சுக்கான் கீரை, வெந்தயக் கீரை சாப்பிடலாம்.
கருணைக்கிழங்கை வேகவைத்து உண்டு வர, மலச்சிக்கல் தீரும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி அரைத்து, பாக்களவு, காலை, மாலை சாப்பிட்டு வர, மூலத்தால் உண்டாகும் வலி, குருதிப்போக்கு சரியாகும். மேற்கூறப்பட்ட வீட்டு வைத்தியங்கள், ஆரம்ப நிலை நோய்க்கு பலன் தரும். நோய் முற்றிய நிலையில், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
கொய்யாப்பழம் ஓர் அர்புதமான தீர்வு
இவ்விடம் பதிவிடுவது
..........
கொய்யாப்பழம் ஓர் அர்புதமான தீர்வு
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
நன்றி: மருத்துவர். எஸ். நந்தினி
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.
..........
No comments:
Post a Comment