சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 12.
"சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் அபூர்வ மூலிகை ஒன்றை ஆப்ரிக்க காட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார் மரபு விஞ்ஞானி செந்தமிழன்" என்று இணையத்தில் சில அலோபதி மருத்துவர்கள் எழுதினார்கள். இவர்களோடு "பகுத்தறிவாளர்கள்" என்று தம்மை அழைத்துக்கொண்ட சிலரும் சேர்ந்து கொண்டார்கள். இன்னொருவர் மிக வினோதமாக" உங்கள் அப்பாவே சர்க்கரை நோய்க்கு அலோபதி மருந்து தானே சாப்பிடுகிறார் அவரை முதலில் குணப்படுத்துங்கள்" என்று எழுதினார்.
இப்படியான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு, அலோபதியின் பாவங்களை பாதுகாக்க பலர் முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள். நிறைய படித்தவர்களுக்கு பொது நாகரீகம் இருக்கும் என்ற பாமரத்தனமான நம்பிக்கையை இவர்கள் எல்லோரும் சேர்ந்து மாற்றி விட்டார்கள். மரபு மருத்துவமுறைகளை மிக மோசமாக கேலி செய்வதில் அலோபதி மருத்துவர்களுக்கென சிறப்பு பாடம் நடத்தப்படுகின்றனவோ என ஐயப்படும் அளவுக்கு அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
நீங்கள் அவர்கள் தோற்றத்தை வைத்து அவர்களின் நாகரீகத்தை எடை போட்டு விட வேண்டாம். அவரகளிலும் சில கண்ணியமிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனாலும் அவர்களுடைய பொதுவான போக்கு கண்ணியமிக்கதாக இல்லை. இவர்கள் படிப்பதற்கான செலவில் பெரும் பகுதியை பொதுமக்களாகிய நாம் தான் சுமக்கிறோம். நமது வரிப்பணத்தில் தான் அவர்கள் படிக்கிறார்கள். சிலர் சில கோடிகளை லஞ்சமாகக் கொடுத்துத் தனியார் கல்லூரிகளில் பட்டம் வாங்குகின்றனர்.
உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ, சில மருத்துவ மேற்படிப்புகளுக்கு ஏறத்தாழ மூன்று கோடி ரூபாய் வரை லஞ்சம் தரவேண்டியிருக்கிறது. இது தவிர கல்வி கட்டணம், இதர செலவுகள் எல்லாம் சேர்ந்து அவரது கல்வியைக் கோடிகளில் கொண்டு நிறுத்தி உள்ளது. ஒரு கிராம ஊழியர் ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கினால், கொதிக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.
ஆனால் இவர்கள் கோடிகளை லஞ்சமாக கொடுத்து கொண்டு, அதைப் பற்றிய கவலை ஏதும் இல்லாமல் இருக்கிறார்கள். எத்தனை கோடிகளை கொட்டினாலும் பன்மடங்கு கோடிகளை இந்த மக்களிடம் இருந்து பிடுங்கி விட முடியும் என்ற நம்பிக்கை தான் காரணம்.
மருந்து என்பதன் உண்மையான பொருளை இந்த ஊழல் பேர்வழிகள் மாற்றி அமைத்து விட்டனர். இவர்களது மருத்துவ முறை, பன்னாட்டு ஊழலில் ஊறிக்கிடப்பது. உலகெங்கும் கிளைகள் அமைத்து, அந்தந்த நாட்டு அரசுகளுக்கு லஞ்சங்களை வாரிக்கொடுத்து மருந்து விற்பனை செய்வது தான் அலோபதித்துறையின் மருந்துத்துறை.
நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும். பெரும் பாலான அலோபதி மருத்துவர்களின் மேசைவிரிப்பு, பேனா, பென்சில், டேபிள் வெயிட், கடிகாரம், அழகுப் பூ ஜாடி போன்றவற்றில் கூட மருந்து நிறுவனங்களின் பெயர் இருக்கும். இந்த சின்னஞ்சிறு பொருட்களை கூட இவர்கள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து இலவசமாகத் தான் வாங்கிக் கொள்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இவர்கள் மருந்து எழுதும் இலட்டர் பேடு கூட மருந்துக்கடை உரிமையாளரால் இலவசமாக தரப்படுகிறது. பலருக்கு கிளினிக் வாடகை, மின் கட்டணம் போன்றவையும் மருந்து கடைகளால் தரப்படுகின்றன.
ஆக மருந்து நிறுவனங்கள், மருந்து கடைகள் ஆகியவை "இணைந்து வழங்கும் "மனிதர்களைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இவை தவிர பரிசோதனை கூடங்களில் இருந்து தரப்படும் பல "அன்பளிப்புகள்" மற்றும் கழிவுத் தொகைக்காகவும் அவர்கள் விசுவாசம் காட்ட வேண்டியுள்ளது. அவர்களது கைகள் "அன்பளிப்புகளால்" கட்டப்பட்டு உள்ளன, பாவம்.
உங்களுக்கு தெரிந்த மருந்து விற்பனை பிரதிநிதி இருந்தால் விசாரித்து பாரூங்கள். அவர்கள் இதைவிட அதிகமான தகவலை சொல்லி உங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள், நாகரீகம் கருதி அவற்றை நான் எழுதவில்லை.
இங்கே நான் உங்களுடன் உரையாட விரும்புவது மருந்துகள் எனும் தலைப்பில் என்பதால், மருந்துகளுக்கு பின்னால் இருக்கும் ஊழலை பற்றி அறிமுகம் செய்தேன். அவ்வளவு தான். உண்மையில் மருந்து கம்பெனிகளின் எடுபிடிகளாக இந்த அலோபதி மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்நது தான் மருந்து எனும் கருத்தை சீரழித்து விட்டார்கள்.
*நோயாளிக்குத்தான் மருந்து, நோய்க்கு அல்ல.*
நம்முடைய மரபில், மருந்து என்பது தனித் தயாரிப்பு தானே தவிர,பொது தயாரிப்பு அல்ல, அதாவது, நோயாளியின் நிலைக்கேற்ப தனித் தனியாக மருந்துகளை தயாரிப்பது தான் நம் முறை. பொத்தாம் பொதுவாக, பலகோடி பேர்களுக்கும் மருந்துகளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்வது வணிகமயமான சூழலின் விளைவு. இது வெறும் வியாபாரம், மருத்துவம் அல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக, மரபு வழி மருத்துவர்கள் நோய்க் குறியீடுகளை கண்டறிந்து அவற்றுக்கு தக்க மருந்துகளை தாமே தயாரித்து கொடுத்து வந்ததார்கள்.
இப்போது கூட மரபு மருத்துவர்கள் பலர் இம்முறையை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக கேரளத்து ஆயுர்வேத மருத்துவர்கள் இதை ஒரு தவம் போல செய்வதைக்காண்கிறோம். இதற்கான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு மனிதருக்குமான நோய் அறிகுறிகள் வெவ்வேறு விதமானவை. ஒரு மனிதரின் அறிகுறியும் மற்றவர் அறிகுறியும், ஒத்துப்போனாலும், இந்த இருவரின் உடல் மனநிலைகள் மாறுபட்டவை.
ஆகவே ஒரே அறிகுறிக்கான மருந்துகளை கூட அப்படியே தராமல், நபர்களின் உடல் மற்றும் மனநிலைக்கு தக்கவாறு தரவேண்டும். இது எல்லா மரபு வழி மருத்துவ முறைகளிலும் கடைபிடிக்கப்படும் விதி.
உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் ஒரே விதமான உடல் நலக் குறைவு என வைத்துக் கொள்வோம். உடல்நலக்குறை என்பதை எதை வைத்து புரிந்து கொள்வது? நீங்கள் கூறும் அறிகுறிகளையும், உங்கள் உடலில் செய்யப்படும் சில பரிசோதனைகளையும் வைத்து உடலின் தன்மை புரிந்து கொள்ளப்படுகிறது.
இப்போது உங்கள இருவருக்கும் மருந்து தர வேண்டும். இருவருக்கும் ஒரே அறிகுறிகள் என்பதால் ஒரே மருந்தினை தரமுடியுமா?
பெரும் பாலான மரபு வழி மருத்துவர்கள். அப்படி தருவதில்லை. உங்கள் இருவரின் வயது, உடல் வலிமை மனவலு நோயின் அளவில் உள்ள மாறுபாடுகள். உங்கள் இருவரின் தாங்கும் திறன், உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு மருந்தின் தன்மையை முடிவு செய்கிறார்கள்.
ஒரே மருந்தினை இருவருக்கும் தந்தால், அது யாரேனும் ஒருவருக்கு எதிர் விளைவை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம.
சித்த மருத்துவர்களை பற்றி சொல்லப்படும் சேதி ஒன்று உண்டு "உண்மையான சித்த மருத்துவர் என்பவர் தாமே மருந்து தயாரித்து கொடுப்பவர்தான்" என்று. நம் மரபில் மருத்துவரும் மருந்தியல் வல்லுனரும் ஒருவர் தான். சித்தர்கள் யாவரும் மருந்தியல் வல்லுனர்கள் தானே.
இப்போது என்ன நடக்கிறது என்றால், நோய் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நோயளி கணக்கில் கொள்ளப்படுவதில்லை. நோயின் தன்மைக்கேற்ப மட்டுமே மருந்துகள் தயாரிக்கபடுகின்றவே தவிர, நோயாளியின் தன்மை புறக்கணிக்க படுகின்றன. மாத்திரைகளின் வீரியம்(power), மட்டும் வயதை கணக்கில் கொண்டு மாற்றித் தரப்படுகின்றன.
இதுவும் ஒரு பொது கணக்குத்தான், பத்து வயது குழந்தைகள் எல்லோருக்கும் ஒரே வீரியம் உள்ள மருந்துகளை கொடுக்க முடியும். இம்முறையில்? பத்து வயதில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒரே ஆற்றலில், வலுவில்லாத, மனநிலையில் உள்ளவர்களா என்ன? அல்லது, உலகம் முழுவதும் உள்ள பத்து வயது பிள்ளைகளின் உடல் நிலை ஒரே விதமாகத்தான் இருக்கிறதா?
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன். மீண்டும் நாளை தொடரும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
நன்றி
ReplyDelete