Tuesday, February 28, 2017

இரத்த தானம்

பொதுவாக கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரை இவையனைத்தும் வெறுமனே தகவல்களின் அடிப்படையில் மட்டுமில்லாமல் ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட கருதுகோளுக்கான சிக்கலை மட்டும் குறிப்பிடாமல் அதனை தீர்பதர்கான வழிமுறைகளையும், சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதே இயல்பு இந்த அளவில் இந்த கட்டுரையும் எள்ளளவேனும் உதவும் என்ற அடிப்படையில் இந்த கட்டூரையை தொடா்கிறேன்.

லக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் கடைபிடிக்கப்படுகின்றது.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவா்
இன்முகம் காணும் அளவு.- குறள் 224

பிறா் நம்மிடம் துன்பப்பட்டு இரப்பது அவருக்கு மட்டும் துன்பம் தராது, நமக்கும் துன்பம் தருவதாகும். ஆகையால் அவரது துன்பத்தை நீண்ட நேரம் விடாமல் இரந்தவா் முகம் மகிழுமாறு உடனே உதவி அவறின் துன்பத்தை போக்க வேண்டும் என்பது வள்ளுவன் வாக்கு.

மனித ஒழுக்கம்,அறம், ஈகை இதுபோன்ற மனிதம் தலைக்கக்கூடிய அனைத்தும் கட்டவில்கப்பட்ட இன்றைய உலகத்தில் பிறருக்கு தக்க நேரத்தில் உதவுகின்ற மனப்பன்மை என்பது பாலையில் துளிர்விட்ட பசுமரத்தை காண்டதாகத்தான் இருக்கிறது.உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான நாடு ஜப்பான் என்கிறார்கள் இதில் கருத்து வேறுபாடு இருக்கலாம், இருப்பினும் ஜப்பானை காட்டிலும் இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நிகழ்கிறது. ஒரு புள்ளிவிவரத்தின் படி ஒரு மணி நேரத்திற்கு சுமார்    43 போ் சாலைவிபத்துக்களில் இறப்பதாகவும். விபத்துக்களில் உலத அளவில் தமிழகத்தில் சென்னை இரண்டாது இடத்தையும் மாவட்ட வாரியாக ஒருநாளைக்கு  480 விபத்துக்களும் தேசிய அளவில் ஒருநாளைக்கு 667 விபத்துக்களும் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது. ஒருநாளைக்கு 16 குழந்தைகள் சாலைவிபத்தில் இறப்பதாகவும் டைம்ஸ் ஆப் இன்டியா என்ற ஆங்கில நாளிதழ் சமீப (சூன் மாதம்) புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது. இதில் 80 விழுக்காடு விபத்துக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். இதில் அனுமதிக்கப்படுகின்ற அணைவருக்கும் விபத்தில் தான் இழந்த இரத்த அளவை காட்டிலும் குறைந்தபட்சம் 5 விழுக்காடு இரத்தமாவது அதிகமாக தேவைப்படுவது மருத்துவ அளவிலான உண்மை. ஆனால் மருத்துவமனைகளில் அணுமதிக்கப்படும் 80 விழுக்காட்டில் 50 க்கும் மேற்பட்ட விழுக்காட்டினா் போதுமான இரத்தம் இல்லாமலும், தகுந்த இரத்தவகை சரியான நேரத்தில் கிடைக்காமலும் அவா்களின் உயிர் காக்கப்படாமல் இறக்க நேரிடுகிறது.

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை வாழும் நம் நாட்டில் விபத்து பகுதிக்கு மிக அருகில் குறைந்தது ஒரு ஆயிரம் மக்கள் தொகையாவது வசிக்க நேரிடும். அதில் 10 நபருக்காவது இரத்தம் வழங்கக்கூடிய நிலையில் தேவையான இரத்தம் இருக்க கூடும். ஆனால் யாரும் இரத்தம் வழக்க தயாராக இருப்பதில்லை.  இதற்கு காரணம் கிராமபுறம் மற்றும் நகா்புறம் என வகைப்படுத்தப்பட்டோமானால் நகர்புறத்தை காட்டிலும் விழுக்காடு  அடிப்படையில் கிராமபுறங்களில் போதுமான விழிப்புனா்வு இல்லாத நிலையிலும் கிராமபுற மக்கள் அதிகம் இரத்ததானம் செய்கின்றனா். தனியா யாரும் தானம் செய்யாவிடினும் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக இரத்தம் வழங்கிக்கொண்டிருக்கின்றனா். ஆனால் நகா்புறங்களில் இரத்த தானம் செய்தாலும் ஏற்படுகின்ற விபத்துக்களுக்கு போதுமானதாக இல்லை.

நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கங்கள் மூலமாவவும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவணங்கள் மூலமாகவும் பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றாலும் முகாம்களில் பங்கு பெற்று இரத்தம் வழங்குவது குறைவாகவே உள்ளது. அதற்கு அடிப்படை காரணம் முகாம் நடைபெறுவது குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததும் இரத்ததானம் குறித்தே விழிப்புனா்வு இல்லாததும் முக்கிய காரணமாகும்.

இந்திய அளவில் 2 விழுக்காடு மக்கள் மட்டுமே இரத்ததானம் செய்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது,

மக்களுக்கு இரத்த தானம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த பேரணி போன்றவை நிகழ்த்துவது இது குறித்து விரிவான விளக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பது தெறிந்த ஒன்று. ஆக மக்களுக்கு இரத்தம் குறித்த அடிப்படை செய்திகளையும், அதன் உற்பத்தி குறித்தும் தெறியப்படுத்துவது மிக முக்கியம். மனிதனுக்கு தேவையான இரத்தத்தின் அளவு, ஒவ்வொருமுறை இரத்தம் கொடுக்கும் முன் உடலின் இரத்த அளவை சோதித்த பின்னரே தானம் செய்ய இயலும் என்பதை அறியாத ஜனம் அதிகம். ஏற்கனவே என்னுடைய உடலிலேயே போதுமான இரத்தம் இல்லாத போது நான் தானம் செய்ய இயலுமேயானால் என்னுடைய உடல் நலம் பாதிக்கும் என்றும், கிராம புரங்களில் இரத்தம் கொடுத்த பிறகு உடல் எடை குறைந்து விடுவதாகவும் கருதுகின்றனா். இதுபோன்ற அச்சங்களை கிராம மக்களிடையேவும் படிப்பறிவின்றி இருக்கும் மக்களிடையேயும் விழிப்பபுணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஓர் ஆரோக்கிய மான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி.
எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.தற்போதைய ஆய்வு களில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும்
இரத்த தானம் பயன்படுகிறது.இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

இதே காரியத்தை 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறி, ரத்தத்தை குத்தி வெளியில் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்

அண்மை காலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ரத்த வங்கிகளில் போதுமான ரத்த இருப்பு இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது. இந்தியாவின் சுகாதாரத் தலைநகரம் என்று அழைக்கப்படும் தமிழகத்தில் போதிய அளவில் ரத்த வகைகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரத்ததான முகாம் நடைபெறுவது பெருவாரியாக குறைந்துள்ளது. ரத்து வகைகள் கையிருப்பு இல்லாததற்கு இதுதான் முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு ஆண்டுக்கு தமிழகத்தில் 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஆண்டுக்கு 4 லட்சம் யூனிட் ரத்தம் தேவையாக உள்ளது. ஆனால் தற்போது 60 சதவீதம் ரத்தம் மட்டுமே கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பெண்களுக்கு தங்களின் உடல் இரத்த அளவு குறித்தும், இரத்த அளவை சீராக பராமறிக்க தேவையான ஆலோசனைகளையும் வழங்குவது அவா்களின் உடல் நலத்தை சீராக்குவதோடு மட்டுமில்லாமல் இரத்த தானத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் வாய்ப்பு வழங்கக்கூடும். காரணம் குழந்தைபேறு காலங்களில் இரத்தப்பற்றாக்குறையால் ஏற்படும் சிக்கல்களை களைய வழிவகுக்கும்.

தனியார் மருத்துவமனைகளில் இரத்தம் கொடுக்க வருவோரை தடுத்து பாதிக்கப்பட்டோருக்கும் இவருக்கும் இடையில் தனியார் மருத்துவமனை  ஓா் அரசியல் நடத்துகிற கொடுமைகளும் நிகழ்கிறது, கிருத்துவ மதத்தின் புனித நூலான திருக்குறான் ரோமா்-15 அதிகாரம் 15 ல் ”அன்றிவும் பலமுல்லவா்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல் நடவாமல் பலவீனருடைய பலவீனங்ககளைத் தாங்க வேண்டும்” என்றும்  மற்றொரு இடத்தில் ”நாம் ஒவ்வொருவரும் பிறருடைய துன்பத்துக்கேதுவாக நன்மையுன்டாகும் படி நடந்து கொள்ளவேண்டும்”என்று மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவி குறித்து கூறுகிறது.

அறநூல்களான அணைத்தும் பிறருக்கு உதவ வேண்டும் என்றும் அறச்செயல்களை புரிய வேண்டும் கூறுவது இயல்பு எனினும் இக்கட்டூரை வாயிலாக குறைந்தது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற உயிரை காப்பாற்ற உதவுங்கள், தங்களால் உதவா நிலை இருப்பின் மற்றவருக்கு தகவல் கொடுப்பாதன் மூலமாகவது உதவி அவா்களின் உயிரைகாப்பாற்ற முன்வாருங்கள் எனக் கூறி பாதம் பணிகிறேன்.
பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்
மனிதாபிமானத்தை வளர்ப்பீர்
விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!








(ஒழுகிய இரத்தத்தை கொட்டாங்குச்சியில் அள்ளி ஊத்தியபடியே)
கொடும் பாதக
எப்போதும் நிகழ்கின்ற விபத்துக்களில் இரத்தம் வைத்திருக்கின்ற ஆண்டைகளே வென்றுவிடுகின்றனா்
அடிமைகள் இரத்ததை கேட்டுக்கொண்டும்சாலைகளில் ஒழுக விட்டும் இறந்து போகிறார்கள்
இவா்களை மருந்திட்டு சொல் பேச்சு கேட்க வைப்பாயா?
மறுப்பேதும் சொல்வாயானால்
சண்டாலச் சாத்தான் இவா்களை கொன்றழிப்பது எப்போது
சொல்லடா கொடும் பாதக ?....


-    .சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.
-    


No comments:

Post a Comment