பூ நூல்தாித்த மீசைகாரன்
எம்பாட்டன் எட்டைய
புரத்து ஆளு,
பட்டைய கௌப்புனான்
பாரு,
அவன் பாட்டுக்கிங்க
யாரு,
தமிழை தலைநிமித்தின
ஜோரு
அவன் கரைச்சிகுடிச்சும்
மெதக்குற ஆளு,
தமிழை கரைச்சிகுடிச்சும்
கடலுல மெதக்கிற தோலு
அவன் மெதக்கிறவேலு;
எங்கப்பன் முண்டாசு
கட்டுன பூநூலு
சமூகத்தை மொரச்சி
பாத்தத கேளு;
அவன் உதட்டு மேல
குருவாளு- அதுல
வெள்ள கொக்க வெரட்டுனான்
பாரு
அவன்……. தமிழ்..பாட்டுக்கொரு
தேரு
இலக்கணம் கட்டுன
கட்டுக்கெல்லாம் பாட்டுச் சொல்லி
அங்கொரு பாஞ்சாலி
சபத சத்தியம் சொல்லி
பண்ணின பாட்டில
அந்த கட்டுடைத்து - சண்டாலன்
பஞ்ச தந்திரம்
சொன்னவன் எம்பாட்டன்
சுதந்திர பக்குவன்
கண்டவன் முப்பாட்டன்
ஆரியம் பேசிய ஆண்டைகளை
-வார்த்தை
சூரிய சத்தியில்
வென்றவன் நீ
வீட்டு மூலைச்சட்டியில்
கண்ட பெண்னை
பாட்டுச் சாலைசத்தியில்
ஏத்திய தீ
எம்பாட்டன் எட்டைய
புரத்து ஆளு
பட்டைய கௌப்புனான்
பாரு...
த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment