Saturday, February 25, 2017

பாரதியாருக்கு ஒரு பாடல்

பூ நூல்தாித்த மீசைகாரன்


எம்பாட்டன் எட்டைய புரத்து ஆளு,
பட்டைய கௌப்புனான் பாரு,
அவன் பாட்டுக்கிங்க யாரு,
தமிழை தலைநிமித்தின ஜோரு
அவன் கரைச்சிகுடிச்சும் மெதக்குற ஆளு,
தமிழை கரைச்சிகுடிச்சும் கடலுல மெதக்கிற தோலு
அவன் மெதக்கிறவேலு;

எங்கப்பன் முண்டாசு கட்டுன பூநூலு
சமூகத்தை மொரச்சி பாத்தத கேளு;
அவன் உதட்டு மேல குருவாளு- அதுல
வெள்ள கொக்க வெரட்டுனான் பாரு
பாட்டுக்கொரு தேரு
அவன்……. தமிழ்..பாட்டுக்கொரு தேரு

இலக்கணம் கட்டுன கட்டுக்கெல்லாம் பாட்டுச் சொல்லி
அங்கொரு பாஞ்சாலி சபத சத்தியம் சொல்லி
பண்ணின பாட்டில அந்த கட்டுடைத்து - சண்டாலன்
பஞ்ச தந்திரம் சொன்னவன் எம்பாட்டன்
சுதந்திர பக்குவன் கண்டவன் முப்பாட்டன்
              
ஆரியம் பேசிய ஆண்டைகளை -வார்த்தை
சூரிய சத்தியில் வென்றவன் நீ
வீட்டு மூலைச்சட்டியில் கண்ட பெண்னை
பாட்டுச் சாலைசத்தியில் ஏத்திய தீ

எம்பாட்டன் எட்டைய புரத்து ஆளு
பட்டைய கௌப்புனான் பாரு...

த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்





No comments:

Post a Comment