Tuesday, November 24, 2020

2020 | பொது தமிழ் வினா விடைகள் !!! - 2020


2020 |  பொது தமிழ் வினா விடைகள் !!!
 - 2020


பொதுத்தமிழ் வினா விடைகள் 


💢 கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என்று கூறும் நு}ல் எது? - பெரிய திருமொழி 


💢 கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ஓதும் பள்ளி என்று கூறும் நு}ல் எது? - திவாகர நிகண்டு 


💢 கல்வி கற்பிக்கப்படும் இடங்களை கல்லு}ரி என்று கூறும் நு}ல் எது? - சீவக சிந்தாமணி


💢 பள்ளி என்ற சொல்லின் பொருள் என்ன? - படுக்கை


💢 சமண பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றி எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது? - கழுகுமலை கல்வெட்டுகள் 


💢 கற்ற வித்தகளை அரங்கேற்றும் இடமாக திகழ்ந்த இடம் - மன்றம்


💢 சமய நு}லும் தத்துவ நு}லும் கற்பிப்போர் ---------- என்று அழைக்கப்பட்டனர் - எகுரவோர்


💢 எழுத்தும், இலக்கியமும், உரிச்சொல்லும் மற்றும் கணக்கும் கற்பிப்போர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? - கணக்காயர் 


💢 மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பேரிலக்கியங்களை கற்பிப்போர் - ஆசிரியர் 


💢 செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்த அவை எவ்வாறு அழைக்கப்பட்டது? - சன்றோர் அவை


💢 'லகிமா" என்ற அட்டமா சித்தி எதனை குறிக்கின்றது? - காற்றில் மிதக்கும் ஆற்றல் 


💢 'பிராகாமியம்" என்ற அட்டமா சித்தி எதனை குறிக்கின்றது? - இயற்கை தடைகளை கடக்கும் ஆற்றல் 


💢 படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றலைக் குறிக்கும் அட்டமா சித்தி எது? - ஈசத்துவம்


💢 யாருடைய பாடல்கள் குழூஉக்குறிகளாக எழுதப்பட்டுள்ளது - சித்தர்களின் பாடல்கள்


💢 எந்த சொல் குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையை கூறுகிறது? - மாங்காய்ப்பால் 


 

இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

Www.kavimalaravan.blogspot.com


Sunday, October 25, 2020

சீத்தாப்பழ சீஸன் வந்தாச்சு, இதோட நன்மைகள் தெரிஞ்சா சாப்பிடாம விடமாட்டீங்க!

 

சீத்தாப்பழ சீஸன் வந்தாச்சு, இதோட நன்மைகள் தெரிஞ்சா சாப்பிடாம விடமாட்டீங்க!


உணவுக்கு பிறகு இனிப்பு சாப்பிடவேண்டும் என்றால் என்ன சாப்பிடலாம். கொழுப்பும் சேர கூடாது, சர்க்கரையும் ஏறிவிடக்கூடாது என்பவர்களுக்கு சீ்த்தாப்பழம் நல்ல தேர்வாக இருக்கும்.


பழங்கள் என்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை போன்றவைதான் நினைவுக்கு வரும். சீஸன் பழங்கள் எல்லாம் அந்த நேரத்துக்கு மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் சில பழங்களை மட்டுமே எதிர் நோக்க தொடங்குவோம். அதில் முக்கியமானது மாம்பழமும், சீத்தாப்பழமும். சீஸன் வரும் போதே அதன் சுவையை ருசிக்க தொடங்கிவிடுவோம்.

பழங்களில் தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டதுதான். சீத்தாப்பழம் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே நிறைந்திருப்பதால் உடனடியாக உடலுக்கு ஆற்றல் தருகிறது. சீத்தாப்பழம் தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி -காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது. புரதம், தாது பொருள்கள், இனிப்பு, கொழுப்புசத்து நிறைந்தது.


இதில் இருக்கும் தாதுப்பொருள்கள் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலு கொடுக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டி- ஆக்ஸிடண்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி. சமைத்த உணவை காட்டிலும் பழங்களில் நிறைவாக வைட்டமின் சி கிடைக்கும்.

​ரத்த அழுத்தம்

சீத்தாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இவை இரண்டுமே உதவுகிறது. ரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆய்வில் அதிகமாக மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வருவதற்கான ஆபத்து குறைவாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அனைவருமே சீத்தாப்பழத்தை எடுத்துகொள்ளலாம்.

​செரிமானத்துக்கு உதவும்

ஒரு கப் அளவுள்ள சீத்தாப்பழ விழுதில் 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்தும் தாமிரச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது.

இவை குடல் இயக்கத்தை சீராக்கி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைச்சுற்றல் போன்றவற்றை குணப்படுத்தும்.

​மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

சீத்தாப்பழம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டது. மனநிலையை சீராக்க உதவும் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றுக்கு வைட்டமின் பி6 முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த வைட்டமின் மனநிலை கோளாறுகளுக்கு உதவக்கூடியது. வைட்டமின் பி 6 மன அழுத்தத்தை குறைக்க செய்பவை. இது குறித்த ஆய்வு ஒன்றில் வைட்டமின் பி6 குறைபாடு ஒருவரின் மனச்சோர்வை இரட்டிப்பாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த வைட்டமின் அதிகரிப்பதன் மூலம் மனச்சோர்வு அபாயம் குறைக்கப்படும். அதற்கு சீத்தாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 6 உதவக்கூடும்.

​உடல் எடை அதிகரிக்க

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உடல் எடையை குறைப்பதை போன்றே ஆரோக்கியமான எடை அதிகரிப்பையும் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்துவிட வாய்ப்புண்டு. அப்படி ஆகாமல் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் சீத்தாப்பழத்தை தேர்வு செய்யலாம்.

இது அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது. சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக செய்யும்.

​ஆஸ்துமாவுக்கு நல்லது

சீத்தாப்பழம் வைட்டமின் பி 6 கொண்டுள்ளது. இது மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது. நுரையீரல் தொடர்பான சிக்கல் இருப்பவர்களுக்கு சீத்தாப்பழம் நன்மை தரும். வைட்டமின் சி உள்ளதால் சளி பிடிக்குமோ என்று பயப்படவேண்டாம். இது சளியை போக்கிவிடும். சீத்தாப்பழத்தை குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்த கூடியது. ஆஸ்துமா, காசநோயை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

​எலும்பு பலமடையும் பெண்களுக்கும் ஏற்றது

சீத்தாப்பழம் உடலுக்கு வலிமை கொடுக்க கூடியது. இதயத்துக்கு பலம் கொடுக்கும் . கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்பு, பற்கள் பலமடையும். தசைப்பிடிப்பு இருப்பவர்கள் சீத்தாப்பழம் எடுத்துகொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். பெண்களுக்கு ஏற்ற கனி இது என்றும் சொல்லலாம்.

இது கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வை குறைக்கும். எரிச்சலை குறைக்கும் தன்மைகொண்டது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தகூடியது. கண் பார்வையை மேம்படுத்தும்.

​நீரிழிவுக்கு நல்லதா?

நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்துவருகிறது. சீத்தாப்பழம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.

சர்க்கரை நோய் குறையணுமா. இந்த கிழங்கில் இருக்கும் இதை தேடி சாப்பிடுங்க..

ஒரு சிலர் சீத்தாப்பழம் கிளைசெமிக் குறியீடு 54 என்பதால் நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்ல பழம் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் நீரிழிவு இருப்பவர்களுக்கு லோகிளைசெமிக் உணவில் 55 மற்றும் அதற்கு குறைவான அளவு உணவுகளே பரிந்துரைப்பதால் சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம் என்கிறார்கள்.மேலும் இது நார்ச்சத்தும் உள்ள பழம் என்பதால் இது ரத்த சர்க்கரை அளவு உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது என்றும் சொல்கிறார்கள்.

உங்களுக்கு நீரிழிவு இருந்து நீங்கள் சீத்தாப்பழத்தின் மீது அதிக பிரியம் கொண்டிருந்தால் ஒருமுறை உங்களின் மருத்துரின் ஆலோசனையை பெறவும் மறக்க வேண்டாம்.

Monday, August 31, 2020

புதிய கல்விமுறையை அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி மரியா மாண்ட்டிசோரி

புதிய கல்விமுறையை அறிமுகப்படுத்திய மரியா மாண்ட்டிசோரி  
மரியா மாண்ட்டிசோரி

💉 இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்விமுறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டிசோரி 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

💉 நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றை கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். 
இதன் மூலம் குழந்தைகள் பாடங்களை எளிதாகக் கற்றனர். இந்த முறை உலகெங்கும் பரவியது. 
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தார்கள். அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்விமுறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்விமுறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.
💉 தனது புதிய கல்விமுறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907ஆம் ஆண்டு முதல் வகுப்பைத் தொடங்கினார். இது மாண்ட்டிசோரி கல்விமுறை என பிரபலமடைந்தது. 
பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நு}ல்களாக வெளியிடப்பட்டது. புதுமைக் கல்வித் திட்டத்திற்கான கோட்பாடுகளை 1897ஆம் ஆண்டு உருவாக்கினார்.
💉 இவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மாண்ட்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார்.
💉 இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்விமுறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மாண்ட்டிசோரி 1952ஆம் ஆண்டு மறைந்தார்.

Wednesday, August 26, 2020

லட்டு, ஜிலேபி, ரஸகுல்லாவுக்கும் காலாவதி தேதி உண்டு தெரியுமா?

லட்டு, ஜிலேபி, ரஸகுல்லாவுக்கும் காலாவதி தேதி உண்டு தெரியுமா?



ஸ்வீட் இல்லாத கொண்டாட்டங்கள் இனிப்பதில்லை. மற்றவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவும், அன்பை வெளிப்படுத்தவுமான உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் தவிர்க்க இயலாத ஒன்று ஸ்வீட். யாரையாவது பார்க்கக் கிளம்புவோம், `ஒரு அரைகிலோ இனிப்பு வாங்கிட்டுப் போவோம்’ என ஸ்வீட் கடைப் பக்கம் ஒதுங்குவோம்.

லட்டு, ஜிலேபி, ரஸகுல்லா... என நமக்குப் பிடித்த இனிப்புகளை வாங்கிக்கொண்டு போவோம். உறவினர்கள், நண்பர்களைப் பார்க்கப் போவது மட்டுமல்ல, சாதாரணமாகவே ஏதோ ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தைக் கொண்டாடக்கூட உதவுவது இந்த இனிப்பு வகைகள்தான்.

சாலைகளில் செல்லும்போது, நம் கவனத்தை பல ஸ்வீட் ஸ்டால்கள் ஈர்ப்பதுண்டு. பல வண்ணங்களில், விதவிதமான டிசைன்களில், இனிப்புகளை ஒன்றன்மீது ஒன்றாக அழகாக அடுக்கிவைத்திருப்பார்கள். பார்க்கும்போதே, இதை வாங்கலாமா, அதை வாங்கலாமா, சமயத்தில், அத்தனையையும் வாங்கி விடலாமா என்றுகூடத் தோன்றும். அப்படி வாங்கும் `இனிப்புப் பலகாரங்களோடு ஆபத்தும் சேர்ந்தே வரலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

`தரமான எண்ணெய் அல்லது நெய், சர்க்கரை, மாவு, நிர்ணயிக்கப்பட்ட வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஸ்வீட் தயாரிக்க வேண்டும்’ என்கிறது உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம். ஆனால், பெரும்பாலான பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால்களில் தரமற்ற எண்ணெய், தரமற்ற மூலப்பொருள்களைக் கொண்டு, வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க கண்ணைப் பறிக்கும் நிறங்களில் ஸ்வீட் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

இவற்றைச் சாப்பிடுபவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடலாம்.
சோப்பு, ஷாம்பூ, எண்ணெய்... என நாம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்திலும் அவை கலாவதியாகும் நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பயன்படுத்தலாமா எனப் பார்த்து வாங்கலாம். ஆனால், ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரிகளில் விற்பனையாகும் இனிப்புகள் என்றைக்குத் தயாரிக்கப்பட்டவை என்பது கடைகாரர்களுக்கே வெளிச்சம். அதேபோல, எத்தனை நாளைக்குள் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

சில நேரங்களில் வீட்டுக்கு வந்து, வாங்கிவந்த ஊசிப்போன வாடையடிக்கும் முறுக்கையோ, ஸ்வீட்டையோ சாப்பிட்டுவிட்டு முகம் சுளிப்போம். அதிகபட்சமாக அந்தக் கடையில் போய் திரும்ப பலகாரம் வாங்கக் கூடாது என முடிவெடுப்போம். அதே இனிப்பை நாம் யாருக்காவது கொடுத்திருந்தால், அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள்! ஆக, இனிப்புகளுக்கும் காலாவதி உண்டு. அதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சரி... இனிப்புகளுக்கான காலவதி தேதியை அறிவது எப்படி? மூத்த உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

"எந்த உணவுப் பொருளுக்குமே காலவதியாகும் தேதி என்ற ஒன்று உண்டு. அந்த நாளுக்குள் அதைப் பயன்படுத்திவிடுவதுதான் நல்லது.

மற்ற உணவுகளைப்போல ஸ்வீட்டுக்கும் இது பொருந்தும்.

எப்படிக் கண்டறிவது?

ஸ்வீட் வாங்கும்போது, முதலில் அதில் வெள்ளையாக பூஞ்சைத் தொற்று உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அது, ஸ்வீட்டைக் கையில் எடுத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். அதேபோல ஓர் இனிப்புப் பலகாரம், நாம் வழக்கமாகப் பார்க்கும் நிறத்தைவிட அதிகளவு ஈர்க்கக்கூடிய நிறத்தில் இருக்கக் கூடாது.

ஸ்வீட் கெட்டுப்போய்விட்டதா என்பதை அதன் சுவையே உணர்த்திவிடும். அப்படி கெட்டுப்போயிருக்கும் எனச் சந்தேகப்பட்டால், சிறிதளவு சாம்பிள் வாங்கிக் கடையிலேயே சாப்பிட்டுப் பார்த்துவிட்டு, பிறகு வாங்குவது நல்லது.

ஸ்வீட் ஈக்கள் மொய்த்தபடி சுகாதரமற்ற நிலையில் இருந்தால், வாங்கக் கூடாது. சூரிய ஒளி பலகாரங்களின் மேல் நேரடியாகப் படாதவாறு பராமரிக்கப்படுகிறதா என்பதையும் சரிபார்த்துவிட்டுப் பிறகு வாங்க வேண்டும்.

இனிப்பு பொருள்களில் பால், ஜீரா (சர்க்கரை நீர்) சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து அவை கெட்டுப்போகும். எண்ணெய்களால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளைவிட, நெய்யால் தயாரிக்கப்பட்டவை அதிக நாள் கெடாமல் இருக்கும்.

பொதுவாக, எந்த இனிப்பையும், அது தயாரிக்கப்பட்ட நான்கு நாள்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது. பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ப்படும் ஸ்வீட்ஸில் காலாவதி தேதியைச் சரிபார்த்துத்தான் வாங்க வேண்டும். மில்க் ஸ்வீட்கள் சாதாரணமாக இரண்டு நாள்கள் வரை கெட்டுபோகாமல் இருக்கும். கெட்டுப்போன இனிப்புகள் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். சில நேரங்களில் வயிற்றில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்று வரலாம்".என்கிறார் தாரணி கிருஷ்ணன்.

இதுதொடர்பாக அரசு என்ன செய்கிறது... கெட்டுப்போன பலகாரங்களை விற்கும் கடைக்காரர்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்களா? உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு இதுபற்றி விசாரித்தோம். அங்கிருந்த அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசினார்...

``உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தங்கள் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஸ்டால்களில் திடீர் ஆய்வு செய்வார்கள். ஒவ்வொரு குழுவிலும் நான்கு அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடி ஆய்வுமேற்கொண்டு சந்தேகத்துக்குரிய ஸ்வீட்களில் சிறிதளவு எடுத்து ஆய்வுக்கு அனுப்புவார்கள்.

மற்றபடி, புகார் வந்தாலும் ஸ்வீட் ஸ்டாலுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்வார்கள். இந்த ஆய்வுகளின்போது, இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட கலரைவிட கூடுதலாக கலர் சேர்க்கப்பட்டிருக்கிறதா, தண்ணீர், எண்ணெய், மைதா மாவு, சர்க்கரை உள்பட ஸ்வீட் தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் தரமானவையாக இருக்கின்றனவா போன்றவற்றையெல்லாம் ஆய்வின்போது கவனிப்பார்கள்.

இனிப்பு வகைகளில் ஏதாவது கலப்படம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால், அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் சுகாதாரமற்றவையாக இருந்தால், பறிமுதல் செய்யப்படும். ஆய்வில் தரமற்ற பொருள்களை கொண்டு ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஸ்டால் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில்தான் இதுபோன்ற தரமில்லாத பொருள்கள் அதிகளவு கைப்பற்றப்படுகின்றன.

மேலும், பொருளில் கலப்படம் இருப்பதாகச் சந்தேகம் வந்தால், அந்தப் பொருளோடு உங்கள் பகுதியின் சுகாதார அலுவலரைத் தொடர்புகொள்ளலாம். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அலுவலகத்தின் எண்களில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்" என்றவர் தொடர்புகொள்ள வேண்டிய அந்த எண்களையும் நமக்குக் கொடுத்தார்.
அந்த எண்கள்: (044-24321830, 28583222, 28583422)

நன்றிகளும்
பிரியங்களும்.

Friday, July 24, 2020

செவ்வாழையில் உள்ள மகிமை

செவ்வாழையில் உள்ள மகிமை



உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது.
குறிப்பாக செவ்வாழை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சரி, இப்போது செவ்வாழையை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
  • செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.
  • மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.
  • பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு.
  • எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும்.
  • ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.
  • நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • எப்படியெனில் இதில் இயற்கையாக ஆன்டாசிட் தன்மை உள்ளது. இதனால் இப்பழத்தை தினமும் உட்கொண்டு வர நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும்.
  • ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும். இத்தகைய நன்மை கொண்ட செவ்வாழையை தினமும் சாப்பிட்டு நன்மை பெறுங்கள்

Friday, June 12, 2020

எந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்!

எந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்!


உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் தன்மை காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.

இருந்தாலும் எந்த நோய்க்கு எந்த காய்கறி, பழங்களை சாப்பிடலாம் என தெரிந்து சாப்பிட்டால் இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.

உடற்பருமன்

அதிகளவில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினால் உடற்பருமன் ஏற்படுகிறது. உடற்பருமனால் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.

முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப்ஆகியவற்றினை நம் உணவில் அதிகமாக சேர்த்து கொள்வதன் மூலம் உடற்பருமனை குறைக்கலாம்.

நீரிழிவு நோய்

பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயினால் தான். உண்மையில் மெல்ல கொல்லும் ஆபத்தினை உடையது நீரிழிவு நோய் தான்.

தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகிய காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.

மேலும் சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி போன்ற பழங்களையும் உணவில் சேர்த்து கொள்வதால் நீரிழிவு நோயினை கட்டுபடுத்தலாம்.

குடல் புண்

அதிகளவில் துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளையும் சாப்பிடும் போது அவை சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும். இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் புண் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

குடல் புண் சரியாவதற்கு மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க் கோளாறுகள்

உடற்பருமன் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை உண்டாகிறது. இது கருத்தரித்தல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் அதிக சேர்த்து கொள்ளலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்சனைகளுக்கு கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ரத்தசோகை

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை பிரச்சனை உண்டாகிறது. இதனால் மாதவிடாய் பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தினசரி உணவில் நாம் சேர்த்து கொள்ளும் போது சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா ஆகிய பழங்களில் ஏதேனும் ஒன்றினை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

சிறுநீரகக் கல்

சரியாக நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றினால் சிறுநீரகக் கல் உண்டாகிறது.

இயற்கையாக இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் ஆகியவற்றினை நம் உணவில் சேர்த்து கொண்டால் போதுமானதாகும்.

மூலம்

மலச்சிக்கல், அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான பிரச்சனை போன்றவற்றில் மூலம் ஏற்படுகிறது.

பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிடும் போது மூலம் சரியாகும்.

நரம்பு கோளாறுகள்

கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா போன்ற காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்து கொண்டால் நரம்பு கோளாறு சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

Wednesday, June 10, 2020

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட  எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட  வேகமாக உடைந்து  குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக  மாறி  புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில்  தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு  வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே  மாரடைப்பு   ஏற்பட  பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள்  மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.✍🏼🌹

Sunday, June 7, 2020

எச்சரிக்கை மணி

எச்சரிக்கை மணி
_---------_-----------_-----------


நாமல்லாம் 1% கூட கொரோனாவோட தீவிரத்தை அறியாம காமெடி பண்ணிகிட்டு இருக்கோம்..

லாக்டவுன்கிறது அரசாங்கம் மக்களை வஞ்சிக்கிர மாதிரி உருவகப் படுத்திகிட்டு ஆட்சியாளர்கள திட்டிகிட்டு இருக்கோம். உண்மையில் கொரோனா வைரஸ் இப்பதான் பரவவே ஆரம்பிச்சுருக்கு.


எல்லாரும் ரெடியா இருந்துக்குங்க...ஒரு தீவிரமான லாக்டவுன் நமக்கு காத்திருக்கு.

நம்ம பாதுகாப்பை நாமதான் உறுதி செஞ்சுக்கனும். அரசாங்கம் அதோட கடைசி கோட்டு எல்லை வரை நம்மள காப்பாத்திருச்சு.

  இனி கட்டுப்படுத்த முடியாது கூட வாழ பழகிக்கிங்கன்னு சொல்லிருச்சு.

தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி கொடுத்த போதே தெரிஞ்சுக்கனும்.

 இனி அரசாங்கமே எல்லாத்தையும் பார்க்கிறது  முடியாதுன்னு கைவிரிச்சத... எல்லாத்துக்கும் அரசாங்கமே பொறுப்பு ஏற்க முடியாது.

நாம சுய கட்டுப்பாடுன்னா கிலோ எவ்வளோன்னு கேட்டா - அதுக்கு அரசாங்கமா பொறுப்பு ?

முடிஞ்ச வரை சிக்கனமாகவும் - பொருள்கள சேமிச்சும் வைச்சுக்குங்க. நேத்து வரை 50 கிலோ மீட்டருக்கு அப்பால கேட்ட கொரொனா சத்தம் இப்ப ஒவ்வொருத்தரு தலைக்கு மேலயும் காத்திருக்கு.  உடனே செத்துட்டா கூட தெரியாம போயிரும். அந்த கொடுமை, வலி , கஸ்டத்த அனுபவிச்சு சாவரது - ஆயிரம் நரகத்துக்கு சமம்.

உலகம் முழுதும் ருத்ரதாண்டவம் ஆடுன கொரோனா இந்தியால பம்முதுனா - அது நம்மோட உடல் வலிமைக்கும் - சீதோஸ்ன நிலமைக்கும் - மருத்துவ முன்னேற்றத்திற்கும் பயப்டுதுன்னு அர்த்தம்.

எந்த ஒரு வைரஸ்ஸூம் இடத்துக்கு ஏத்தாற் போல தன்னை மற்றிக்கொள்ள கொஞ்ச நாள் எடுத்துக்கும். அதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு . நம்ம நாட்டோட கிளைமேட்டுக்கும் - நம்ம உடல் மரபனு வரிசை அமைப்புக்கும் கொரோனா தன்னை தானே மாற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் இங்குபேட்டர் காலம்னுவேனா இதை எடுத்துக்கலாம்.

ஒரு தடவ பரவ ஆரம்பிச்சா - கட்டுப்படுத்தறதுக்கு  வாய்ப்பு 0%. சாவு 100% .. சமூக வலைதளத்துல எழுதி எந்த பிரியோஜனமும் இல்ல. இங்க காமெடி  வரைல் நியூஸ் தாண்டி யார் மனசிலயும் நிக்க போறதில்ல.

கடைசியா வாழ்ந்துக்குங்க.  மனித இனம்னு ஒன்னு பூமில இருந்துச்சு. ஆயுத குவிப்பு போட்டில யார் பெரியாள்னு நாட்டுக்கு நாடு சகுனி வேலை பாத்து பதட்டுத்துலயே இருந்துச்சு. உலகத்துலயே அசைக்க முடியாத சக்தின்னு இருந்த நாடுகள் கூட , எதுக்கு சாவரம்னே தெரியாம செத்துச்சு ..  இதான் அடுத்த 20 வருசத்துல ஏலியன்ஸ் சமிட் பண்ற அறிக்கையா இருக்கும்.

எச்சரிக்கை

 கொரோனா வைரஸ் மேல் பயம் இருக்கட்டும். நமக்கு வராது என்று அசட்டு தைரியம் வேண்டாம்.  பாதுகாப்பாக இருப்போம். ஆரோக்ய வாழ்வுக்கு ஆச்சாரமாக இருப்போம். நன்றி

டாக்டர் ரேலா என்னும் மனிதர்

டாக்டர் ரேலா



டாக்டர் ரேலா மருத்துவமனை பெயரைக்கேட்டதையடுத்து அவரைப்பற்றி மருத்துவ நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் தந்த தகவலும், இணையத்தில் அவரைப்பற்றி படித்த செய்திகளும் பிரமிப்பைத்தருகின்றன. 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்த முஹம்மது ரிளா (Mohamed Rela), சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும் M.S பட்டமும் பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற டாக்டர் ரேலா , எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு M.S பட்டமும் , FRCS பட்டமும் பெற்றவர். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணரான அவர் உலகப்புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் 1991 முதல் பேராசிரியராக பணியாற்றிவந்தார். 

1997 ம் ஆண்டு பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்த சாதனைக்காக , 2000ம் ஆண்டு டாக்டர் ரிளாவின் பெயர் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றது

அந்த பெண் குழந்தை ஆரோக்யத்துடன் வளர்ந்து தற்போது லண்டன் டிரினிடி கல்லூரியில் படித்துவருகிறார் என்பது நவீன மருத்துவத்துறையின் சாதனைகளின் சான்றாக கருதப்படுகிறது.

  தனது 30 ஆண்டுகால மருத்துவ பயணத்தில் சுமார் 5000 கல்லீரல் மற்றும் கணையம் சம்பந்தப்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்த சாதனையாளராக திகழ்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக 600க்கும் மேற்பட்ட scientific publications வெளியிட்டுள்ள உலகின் ஒரே மருத்துவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்

உலகின் தலைசிறந்த 20 குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணர்கள் என்ற பட்டியலில் உலகம் முழுதும் உள்ள மருத்துவர்களால் வாக்களிக்கப்பட்டு இடம்பெடித்த பெருமையும் டாக்டர் முஹம்மது ரிளா அவர்களைச்சேரும். 

தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரி(கிளியனூரி)ல் பிறந்து உலகம் முழுதும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணராக டாக்டர் முஹம்மது ரிளா சாதனை படைத்துவருவது , மருத்துவ ரீதியாகவும் , நம் மண்ணின் மைந்தர் என்ற வகையிலும் நமக்கெல்லாம் பெருமிதம் தரக்கூடிய ஒரு விஷயமாகும்.


Friday, June 5, 2020

நம்பிக்கை இழக்காதே

நம்பிக்கை இழக்காதே


ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. 

இரண்டு எறும்புகளும் பசியாக  இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன.

‘நண்பா இப்படி வந்து தண்ணீல விழுந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.

‘நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வரை நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.

நேரமாகிக்கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.

'நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போறேன்;’ என்றது செவ்வெறும்பு.

‘இல்லை ... இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.

‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாகத்தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.

ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக்கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,
  
‘இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம்’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு, சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.

மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து கேட்டது.....
‘கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’

'நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்ட.. என்றார் கடவுள்....

‘என்ன சொல்லுறீங்க..’...

‘நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்தா நிச்சயம்; எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன்...

♤♤♤கடைசியா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ,...
வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.

Thursday, June 4, 2020

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவு முறை:-

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவு முறை:-

இளைத்த உடலை தேற்ற நவதானிய சத்து மாவு:

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த சூரணமாகும்.
     
திரிபலா சூரணம் ஒருகிலோ அளவில் பாத்திரத்தில் எடுத்து, அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்யவும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும் சமயத்தில் கசாயத்தை இறக்கி ஆறவிட வேண்டும்.

இத்துடன்.

சுத்தம் செய்த கொள்ளு – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

பச்சைப்பயறு – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

கொண்டைக் கடலை – 100 கிராம்

எள் – 100 கிராம்

பச்சரிசி – 100 கிராம்

காராமணி – 100 கிராம்

துவரை – 100 கிராம்

இவைகளை ஒன்றுகலந்து ஆறிய திரிபலா கஷாயத்துடன் சேர்த்து, ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெய்யிலில் நன்கு காயவைத்து, அரைத்து, மாவை சலித்துப் பத்திரப்படுத்தவும்.
     
இதில் இரண்டு கிராம் அளவில் தேனுடன் அல்லது 50 கிராம் மாவை தண்ணீர் கரைத்துக் காய்ச்சி கஞ்சியாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிடலாம். இதனால் நீரிவினால் இளைத்த உடல் செழிக்கும்.

ஆவாரம்பூ கஷாயம் :-

தேவையானவை: 

ஆவாரம்பூ - 100 கிராம், 

சுக்கு - ஒரு துண்டு, 

ஏலக்காய் - 20, 

உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், 

சோம்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: 

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

ஆரைக்கீரைசூப்  :-

தேவையான
பொருட்கள்:

ஆரைக் கீரை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 5

பூண்டுப்பல் – 3

மிளகு – 5

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

இஞ்சி – 1 சிறு துண்டு

உப்பு – தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

திரிபாலா மிளகு சூரணம் :-

தேவையானவை

கடுக்காய்             100 கி 
(விதை நீக்கியது)

நெல்லிக்காய்      100 கி 
(விதை நீக்கியது)

தான்றிக்காய்        100 கி 
(விதை நீக்கியது)

மிளகு                     100 கி 

சீரகம்                      100 கி 

அனைத்தைவும் ஒன்றாக சேர்த்து மிசினில் அரைத்து காலை,மாலை உணக்குபின் 1 டீஸ்பூன் சுடான வெண்ணீரில் கலந்து குடித்து வரவும்.

சுகர்(சர்க்கரை வியாதி)
சமநிலைக்கு வரும் வரை. வந்தவுடன் ஆங்கில மருந்தை படிப்படியாக குறைத்து வரவும்.

கோதுமை கஞ்சி :-

தேவையான :
பொருட்கள்:

1 - கோதுமை 100 கிராம்

2 - பார்லி 100 கிராம்

3 -100 கிராம்
 கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்
அதை 10 நிமிடம் கொதிக்க வைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்கவும்.

குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி  பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை :

ஒவ்வொரு நாளும் வெரும்  வயிற்றில் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் சாப்பிடுங்கள் பிரகு அறை மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்
இதை 7நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். 

வெண்டைக்காய் இஞ்சி ஜூஸ்:-

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கப் (நறுக்கியது)

இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்

மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பாதம் எள்ளு பால் :-

தேவையானவைள்

வெள்ளை எள்ளை 100 கிராம் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்

இரவு 5 பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்

ஒரு டம்ளர் நன்றாக காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் எள்ளு பவுடரையும் உரித்து வைத்த பாதாம் பருப்பையும் போட்டு 10 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்...பின்னர் பாதாம் பருப்புடன் சேர்த்து பாலை குடித்து வரவும்...

தினமும் ஒரு வேளை எப்போது வேண்டுமானாலும் குடித்து வரலாம்..

உளுந்து கஞ்சி :-

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

அஸ்வகந்தா பொடி - 1 டீஸ்பூன்

பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) 

வெந்தயம் - 1 டீஸ்பூன் 

தண்ணீர் - 5 கப் 

சுக்கு பொடி - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

பால் - 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது) 

செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!. 

மிக்ஸ்ட் லேன்டில் புலாவ்
(Mixed Lentil Pulav) :-

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 20 கிராம், 

கருப்பு கொண்டைக்கடலை - 20 கிராம், 

காராமணி - 20 கிராம், 

பாசுமதி அரிசி - 75 கிராம், 

சீரகம் - ¼ டீஸ்பூன், 

சோம்பு - ¼ டீஸ்பூன், 

பெருங்காயம் - 1 சிட்டிகை, 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

வெங்காயம் - 30 கிராம், 

தக்காளி - 1, 

உப்பு - தேவையான அளவு, 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

கொத்துமல்லி தழை - சிறிதளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் காராமணி, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலையை 6-7 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அதை குக்கரில் வேக விடவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும். வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசியை அதில் சேர்த்து உப்பு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வேறையாக வடித்து எடுத்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சில்லி தூள், உப்பு சேர்த்து அதனுடன் இந்த மூன்று பயிர்களை சேர்க்கவும். அத்துடன் ஆற வைத்த அரிசியை சேர்த்துக் கிளறவும். பரிமாறும்போது கொத்துமல்லி தழையை சேர்க்கவும்.

முட்டை பேபி கார்ன் பொரியல்
(Egg Baby corn Porriyal) :

தேவையான பொருட்கள் 

முட்டை - 2,  

பேபி கார்ன் - ½ கப், 

தேங்காய் பால் - 20 மி.லி., 

வெங்காயம் - 1, 

தக்காளி - 1, 

இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

தனியா தூள் - ½ டீஸ்பூன், 

பட்டை - 1, 

கிராம்பு - 1, 

ஏலக்காய் - 2, 

உப்பு, எண்ணெய், கொத்துமல்லி இலை - தேவையான அளவு.

செய்முறை :

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், இத்துடன் பேபி கார்ன் சேர்க்கவும். பின்பு மசாலா சேர்க்கவும். மஞ்சள் தூள், சில்லி தூள், தனியா தூள். இத்துடன் முட்டை விருப்பப்பட்டால் உடைத்து இதனுடன் கலக்கவும். அல்லது முட்டையை தனியாக பொரியியல் செய்து இதனுடன் கலக்கவும். உப்பு மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறவும்.
பலன்கள்

சிக்கன் மசாலா
(Chicken Masala) :-
தேவையான பொருட்கள் 

நாட்டுக்கோழி - 50 கிராம், 

குடை மிளகாய் - 1, 

தக்காளி - 30 கிராம், 

இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 

சீரகத்தூள் - ¼ டீஸ்பூன், 

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

வெங்காயம் - 30 கிராம், 

மிளகுத்தூள் - ½ டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய், கொத்துமல்லி தழை - தேவையான அளவு.

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்க்கவும். பொன்நிறமாக வந்தவுடன் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் குடை மிளகாய், தக்காளி சேர்க்கவும். வதங்கிய பின்னர் அதில் சில்லி தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் சிக்கனை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் வெந்தவுடன் கொத்துமல்லி தழை தூவவும்.

மட்டர் சோயா பனீர் டிரை
(Dry Mattar Soya Paneer) :

தேவையான பொருட்கள்:

சோயா பன்னீர் - 1 கப், 

சீரகம் - ¼ டீஸ்பூன், 

வெங்காயம் - 1, 

பட்டாணி - ½ டீஸ்பூன், 

இஞ்சி - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

தனியா தூள் - ½ டீஸ்பூன், 

தக்காளி - 1, 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும். இஞ்சி, தக்காளி சேர்க்கவும். அதில் சின்னதாக நறுக்கிய பனீர் மற்றும் பட்டாணியை சேர்க்கவும். இதில் மஞ்சள் தூள், சில்லி தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் விட்டு மூடிவிடவும். 6-7 நிமிடம் வரை வேக விடவும். பின்னர் பரிமாறவும்.

சோயா பீன்ஸ் சுண்டல்:

தேவையானவை:

வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 2 சிட்டிகை

கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,

வெங்காயம் - ஒன்று,

பூண்டு - 2 பல்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகு - காரத்துக்கேற்ப,

கொத்தமல்லி தழை - தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய்ப் பால் - ஒரு கப்,

புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

அரைக் கீரை  :

அரைக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். 

பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். அரைக் கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா :-

பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
2 வெங்காயம், தக்காளி, 
2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

அதிகாலை சூரிய உதயம் :-

சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது. 

தண்ணீர் :-

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

வெந்தயம் :-

வெந்தயத்தைப் பயன் படுத்தி ஆரம்ப நிலை சர்க்கரை இருக்கும்போது சர்க்கரை கட்டுக்குள் வரும் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் அவ்வளவாகப் பயனளிப்பதில்லை என பலர் சொல்கிறார்கள்.

ஆனால் அனைவருக்கும் எத்தனை வருடங்கள் சர்க்கரை நோய் இருந்தாலும் இன்சுலின் போடுபவர்களுக்கும் வெந்தயம் மிக சிறந்த மருந்தாகப் பயனளிக்கும் 
அதற்கு வெந்தயத்தைப் பயன்படுத்தும் முறை இங்கே கொடுக்கப் படுகிறது 

வெந்தயப் பால் செய்யும் முறை:

உடல் எடைக்கு பாதியளவு கிராம் அளவுக்கு வெந்தயத்தை  எடுத்து ( எழுபது கிலோ எடை இருப்பவர் முப்பத்தி ஐந்து கிராம் வெந்தயம் பயன்படுத்த வேண்டும்)

ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து 
மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு

துணியில் முடிந்து மூன்று நாட்கள் முளை கட்ட வேண்டும் 

நான்காவது நாள் காலையில் எடுத்து மிக்ஸியில் போட்டு இருநூறு மில்லி கொதிக்கும் நீரை விட்டு அரைத்து துணியில் பிழிந்து கிடைக்கும் பால் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இப்படி பிடிக்காதவர்கள் :-

மூன்று நாட்கள் முளை கட்டிய வெந்தயத்தை அப்டியே மென்று தின்று விழுங்கலாம் 
இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர படிபடியாக சர்க்கரை நோய் குறையும்.

கீரைகள்:-

தினசரி உணவில் குறைந்தது நூறு கிராம் கீரையாவது மதியம் உணவில் சேர்க்க வேண்டும் எந்தக் கீரை என்றாலும் பயன்படுத்தலாம் முருங்கைக் கீரை வெந்தயக் கீரை வல்லாரைக் கீரை அகத்திக் கீரை மணதக்காளிக் கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை என்று எந்தக் கீரை என்றாலும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் 

அருகம்புல் :-

ஒரு கைப்பிடி அருகம்புல் 
ஒரு பத்தை தேங்காய் 
ஒரு தேக்கரண்டி சீரகம்
ஆகிய  மூன்று பொருட்களையும் சேர்த்து இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் அல்லது காலை பதினொரு மணி அளவில் குடிக்க வேண்டும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இவ்வாறு குடித்து வர உடல் எடை குறையும்
 இன்சுலின் போட்டுக் கொண்டு இருப்பவர்களின் தேவையற்ற எடை அதிகரிப்பு கட்டுக்குள் வரும்
 உடல் சுறுசுறுப்பு அடையும் 
உடல் சோர்வு குறையும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையும் 

குறிப்பு :

காலை வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுபவர்கள் காலை பதினொரு மணி அளவில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்1.

புதினா :-

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயே வராது 
எனவே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் புதினாக் கீரையை சேர்த்து வர வேண்டும் 

முருங்கைக்கீரை :-

வாரம் நான்கு நாட்களாவது முருங்கைக் கீரை சூப்பாகவோ உணவாகவோ 
அல்லது நிழலில் காயவைத்து அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வர மிகப் பெரிய அளவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

குறிப்பாக சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் வெளியேறுவது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு கட்டுக்குள் வரும்.

மஞ்சள் பூசணி :-

சர்க்கரை அதிகமான அளவு 400 -- 500 என்று இருக்கும்போது கூட மஞ்சள் பூசணிக்காயை உணவில் தினமும் சேர்த்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்