எச்சரிக்கை மணி
_---------_-----------_-----------
நாமல்லாம் 1% கூட கொரோனாவோட தீவிரத்தை அறியாம காமெடி பண்ணிகிட்டு இருக்கோம்..
லாக்டவுன்கிறது அரசாங்கம் மக்களை வஞ்சிக்கிர மாதிரி உருவகப் படுத்திகிட்டு ஆட்சியாளர்கள திட்டிகிட்டு இருக்கோம். உண்மையில் கொரோனா வைரஸ் இப்பதான் பரவவே ஆரம்பிச்சுருக்கு.
எல்லாரும் ரெடியா இருந்துக்குங்க...ஒரு தீவிரமான லாக்டவுன் நமக்கு காத்திருக்கு.
நம்ம பாதுகாப்பை நாமதான் உறுதி செஞ்சுக்கனும். அரசாங்கம் அதோட கடைசி கோட்டு எல்லை வரை நம்மள காப்பாத்திருச்சு.
இனி கட்டுப்படுத்த முடியாது கூட வாழ பழகிக்கிங்கன்னு சொல்லிருச்சு.
தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி கொடுத்த போதே தெரிஞ்சுக்கனும்.
இனி அரசாங்கமே எல்லாத்தையும் பார்க்கிறது முடியாதுன்னு கைவிரிச்சத... எல்லாத்துக்கும் அரசாங்கமே பொறுப்பு ஏற்க முடியாது.
நாம சுய கட்டுப்பாடுன்னா கிலோ எவ்வளோன்னு கேட்டா - அதுக்கு அரசாங்கமா பொறுப்பு ?
முடிஞ்ச வரை சிக்கனமாகவும் - பொருள்கள சேமிச்சும் வைச்சுக்குங்க. நேத்து வரை 50 கிலோ மீட்டருக்கு அப்பால கேட்ட கொரொனா சத்தம் இப்ப ஒவ்வொருத்தரு தலைக்கு மேலயும் காத்திருக்கு. உடனே செத்துட்டா கூட தெரியாம போயிரும். அந்த கொடுமை, வலி , கஸ்டத்த அனுபவிச்சு சாவரது - ஆயிரம் நரகத்துக்கு சமம்.
உலகம் முழுதும் ருத்ரதாண்டவம் ஆடுன கொரோனா இந்தியால பம்முதுனா - அது நம்மோட உடல் வலிமைக்கும் - சீதோஸ்ன நிலமைக்கும் - மருத்துவ முன்னேற்றத்திற்கும் பயப்டுதுன்னு அர்த்தம்.
எந்த ஒரு வைரஸ்ஸூம் இடத்துக்கு ஏத்தாற் போல தன்னை மற்றிக்கொள்ள கொஞ்ச நாள் எடுத்துக்கும். அதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு . நம்ம நாட்டோட கிளைமேட்டுக்கும் - நம்ம உடல் மரபனு வரிசை அமைப்புக்கும் கொரோனா தன்னை தானே மாற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் இங்குபேட்டர் காலம்னுவேனா இதை எடுத்துக்கலாம்.
ஒரு தடவ பரவ ஆரம்பிச்சா - கட்டுப்படுத்தறதுக்கு வாய்ப்பு 0%. சாவு 100% .. சமூக வலைதளத்துல எழுதி எந்த பிரியோஜனமும் இல்ல. இங்க காமெடி வரைல் நியூஸ் தாண்டி யார் மனசிலயும் நிக்க போறதில்ல.
கடைசியா வாழ்ந்துக்குங்க. மனித இனம்னு ஒன்னு பூமில இருந்துச்சு. ஆயுத குவிப்பு போட்டில யார் பெரியாள்னு நாட்டுக்கு நாடு சகுனி வேலை பாத்து பதட்டுத்துலயே இருந்துச்சு. உலகத்துலயே அசைக்க முடியாத சக்தின்னு இருந்த நாடுகள் கூட , எதுக்கு சாவரம்னே தெரியாம செத்துச்சு .. இதான் அடுத்த 20 வருசத்துல ஏலியன்ஸ் சமிட் பண்ற அறிக்கையா இருக்கும்.
எச்சரிக்கை
கொரோனா வைரஸ் மேல் பயம் இருக்கட்டும். நமக்கு வராது என்று அசட்டு தைரியம் வேண்டாம். பாதுகாப்பாக இருப்போம். ஆரோக்ய வாழ்வுக்கு ஆச்சாரமாக இருப்போம். நன்றி
No comments:
Post a Comment