Thursday, June 4, 2020

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவு முறை:-

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவு முறை:-

இளைத்த உடலை தேற்ற நவதானிய சத்து மாவு:

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த சூரணமாகும்.
     
திரிபலா சூரணம் ஒருகிலோ அளவில் பாத்திரத்தில் எடுத்து, அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்யவும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும் சமயத்தில் கசாயத்தை இறக்கி ஆறவிட வேண்டும்.

இத்துடன்.

சுத்தம் செய்த கொள்ளு – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

பச்சைப்பயறு – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

கொண்டைக் கடலை – 100 கிராம்

எள் – 100 கிராம்

பச்சரிசி – 100 கிராம்

காராமணி – 100 கிராம்

துவரை – 100 கிராம்

இவைகளை ஒன்றுகலந்து ஆறிய திரிபலா கஷாயத்துடன் சேர்த்து, ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெய்யிலில் நன்கு காயவைத்து, அரைத்து, மாவை சலித்துப் பத்திரப்படுத்தவும்.
     
இதில் இரண்டு கிராம் அளவில் தேனுடன் அல்லது 50 கிராம் மாவை தண்ணீர் கரைத்துக் காய்ச்சி கஞ்சியாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிடலாம். இதனால் நீரிவினால் இளைத்த உடல் செழிக்கும்.

ஆவாரம்பூ கஷாயம் :-

தேவையானவை: 

ஆவாரம்பூ - 100 கிராம், 

சுக்கு - ஒரு துண்டு, 

ஏலக்காய் - 20, 

உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், 

சோம்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: 

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

ஆரைக்கீரைசூப்  :-

தேவையான
பொருட்கள்:

ஆரைக் கீரை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 5

பூண்டுப்பல் – 3

மிளகு – 5

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

இஞ்சி – 1 சிறு துண்டு

உப்பு – தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

திரிபாலா மிளகு சூரணம் :-

தேவையானவை

கடுக்காய்             100 கி 
(விதை நீக்கியது)

நெல்லிக்காய்      100 கி 
(விதை நீக்கியது)

தான்றிக்காய்        100 கி 
(விதை நீக்கியது)

மிளகு                     100 கி 

சீரகம்                      100 கி 

அனைத்தைவும் ஒன்றாக சேர்த்து மிசினில் அரைத்து காலை,மாலை உணக்குபின் 1 டீஸ்பூன் சுடான வெண்ணீரில் கலந்து குடித்து வரவும்.

சுகர்(சர்க்கரை வியாதி)
சமநிலைக்கு வரும் வரை. வந்தவுடன் ஆங்கில மருந்தை படிப்படியாக குறைத்து வரவும்.

கோதுமை கஞ்சி :-

தேவையான :
பொருட்கள்:

1 - கோதுமை 100 கிராம்

2 - பார்லி 100 கிராம்

3 -100 கிராம்
 கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்
அதை 10 நிமிடம் கொதிக்க வைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்கவும்.

குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி  பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை :

ஒவ்வொரு நாளும் வெரும்  வயிற்றில் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் சாப்பிடுங்கள் பிரகு அறை மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்
இதை 7நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். 

வெண்டைக்காய் இஞ்சி ஜூஸ்:-

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கப் (நறுக்கியது)

இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்

மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பாதம் எள்ளு பால் :-

தேவையானவைள்

வெள்ளை எள்ளை 100 கிராம் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்

இரவு 5 பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்

ஒரு டம்ளர் நன்றாக காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் எள்ளு பவுடரையும் உரித்து வைத்த பாதாம் பருப்பையும் போட்டு 10 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்...பின்னர் பாதாம் பருப்புடன் சேர்த்து பாலை குடித்து வரவும்...

தினமும் ஒரு வேளை எப்போது வேண்டுமானாலும் குடித்து வரலாம்..

உளுந்து கஞ்சி :-

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

அஸ்வகந்தா பொடி - 1 டீஸ்பூன்

பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) 

வெந்தயம் - 1 டீஸ்பூன் 

தண்ணீர் - 5 கப் 

சுக்கு பொடி - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

பால் - 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது) 

செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!. 

மிக்ஸ்ட் லேன்டில் புலாவ்
(Mixed Lentil Pulav) :-

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 20 கிராம், 

கருப்பு கொண்டைக்கடலை - 20 கிராம், 

காராமணி - 20 கிராம், 

பாசுமதி அரிசி - 75 கிராம், 

சீரகம் - ¼ டீஸ்பூன், 

சோம்பு - ¼ டீஸ்பூன், 

பெருங்காயம் - 1 சிட்டிகை, 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

வெங்காயம் - 30 கிராம், 

தக்காளி - 1, 

உப்பு - தேவையான அளவு, 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

கொத்துமல்லி தழை - சிறிதளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் காராமணி, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலையை 6-7 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அதை குக்கரில் வேக விடவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும். வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசியை அதில் சேர்த்து உப்பு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வேறையாக வடித்து எடுத்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சில்லி தூள், உப்பு சேர்த்து அதனுடன் இந்த மூன்று பயிர்களை சேர்க்கவும். அத்துடன் ஆற வைத்த அரிசியை சேர்த்துக் கிளறவும். பரிமாறும்போது கொத்துமல்லி தழையை சேர்க்கவும்.

முட்டை பேபி கார்ன் பொரியல்
(Egg Baby corn Porriyal) :

தேவையான பொருட்கள் 

முட்டை - 2,  

பேபி கார்ன் - ½ கப், 

தேங்காய் பால் - 20 மி.லி., 

வெங்காயம் - 1, 

தக்காளி - 1, 

இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

தனியா தூள் - ½ டீஸ்பூன், 

பட்டை - 1, 

கிராம்பு - 1, 

ஏலக்காய் - 2, 

உப்பு, எண்ணெய், கொத்துமல்லி இலை - தேவையான அளவு.

செய்முறை :

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், இத்துடன் பேபி கார்ன் சேர்க்கவும். பின்பு மசாலா சேர்க்கவும். மஞ்சள் தூள், சில்லி தூள், தனியா தூள். இத்துடன் முட்டை விருப்பப்பட்டால் உடைத்து இதனுடன் கலக்கவும். அல்லது முட்டையை தனியாக பொரியியல் செய்து இதனுடன் கலக்கவும். உப்பு மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறவும்.
பலன்கள்

சிக்கன் மசாலா
(Chicken Masala) :-
தேவையான பொருட்கள் 

நாட்டுக்கோழி - 50 கிராம், 

குடை மிளகாய் - 1, 

தக்காளி - 30 கிராம், 

இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 

சீரகத்தூள் - ¼ டீஸ்பூன், 

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

வெங்காயம் - 30 கிராம், 

மிளகுத்தூள் - ½ டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய், கொத்துமல்லி தழை - தேவையான அளவு.

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்க்கவும். பொன்நிறமாக வந்தவுடன் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் குடை மிளகாய், தக்காளி சேர்க்கவும். வதங்கிய பின்னர் அதில் சில்லி தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் சிக்கனை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் வெந்தவுடன் கொத்துமல்லி தழை தூவவும்.

மட்டர் சோயா பனீர் டிரை
(Dry Mattar Soya Paneer) :

தேவையான பொருட்கள்:

சோயா பன்னீர் - 1 கப், 

சீரகம் - ¼ டீஸ்பூன், 

வெங்காயம் - 1, 

பட்டாணி - ½ டீஸ்பூன், 

இஞ்சி - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

தனியா தூள் - ½ டீஸ்பூன், 

தக்காளி - 1, 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும். இஞ்சி, தக்காளி சேர்க்கவும். அதில் சின்னதாக நறுக்கிய பனீர் மற்றும் பட்டாணியை சேர்க்கவும். இதில் மஞ்சள் தூள், சில்லி தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் விட்டு மூடிவிடவும். 6-7 நிமிடம் வரை வேக விடவும். பின்னர் பரிமாறவும்.

சோயா பீன்ஸ் சுண்டல்:

தேவையானவை:

வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 2 சிட்டிகை

கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,

வெங்காயம் - ஒன்று,

பூண்டு - 2 பல்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகு - காரத்துக்கேற்ப,

கொத்தமல்லி தழை - தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய்ப் பால் - ஒரு கப்,

புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

அரைக் கீரை  :

அரைக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். 

பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். அரைக் கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா :-

பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
2 வெங்காயம், தக்காளி, 
2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

அதிகாலை சூரிய உதயம் :-

சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது. 

தண்ணீர் :-

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

வெந்தயம் :-

வெந்தயத்தைப் பயன் படுத்தி ஆரம்ப நிலை சர்க்கரை இருக்கும்போது சர்க்கரை கட்டுக்குள் வரும் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் அவ்வளவாகப் பயனளிப்பதில்லை என பலர் சொல்கிறார்கள்.

ஆனால் அனைவருக்கும் எத்தனை வருடங்கள் சர்க்கரை நோய் இருந்தாலும் இன்சுலின் போடுபவர்களுக்கும் வெந்தயம் மிக சிறந்த மருந்தாகப் பயனளிக்கும் 
அதற்கு வெந்தயத்தைப் பயன்படுத்தும் முறை இங்கே கொடுக்கப் படுகிறது 

வெந்தயப் பால் செய்யும் முறை:

உடல் எடைக்கு பாதியளவு கிராம் அளவுக்கு வெந்தயத்தை  எடுத்து ( எழுபது கிலோ எடை இருப்பவர் முப்பத்தி ஐந்து கிராம் வெந்தயம் பயன்படுத்த வேண்டும்)

ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து 
மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு

துணியில் முடிந்து மூன்று நாட்கள் முளை கட்ட வேண்டும் 

நான்காவது நாள் காலையில் எடுத்து மிக்ஸியில் போட்டு இருநூறு மில்லி கொதிக்கும் நீரை விட்டு அரைத்து துணியில் பிழிந்து கிடைக்கும் பால் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இப்படி பிடிக்காதவர்கள் :-

மூன்று நாட்கள் முளை கட்டிய வெந்தயத்தை அப்டியே மென்று தின்று விழுங்கலாம் 
இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர படிபடியாக சர்க்கரை நோய் குறையும்.

கீரைகள்:-

தினசரி உணவில் குறைந்தது நூறு கிராம் கீரையாவது மதியம் உணவில் சேர்க்க வேண்டும் எந்தக் கீரை என்றாலும் பயன்படுத்தலாம் முருங்கைக் கீரை வெந்தயக் கீரை வல்லாரைக் கீரை அகத்திக் கீரை மணதக்காளிக் கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை என்று எந்தக் கீரை என்றாலும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் 

அருகம்புல் :-

ஒரு கைப்பிடி அருகம்புல் 
ஒரு பத்தை தேங்காய் 
ஒரு தேக்கரண்டி சீரகம்
ஆகிய  மூன்று பொருட்களையும் சேர்த்து இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் அல்லது காலை பதினொரு மணி அளவில் குடிக்க வேண்டும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இவ்வாறு குடித்து வர உடல் எடை குறையும்
 இன்சுலின் போட்டுக் கொண்டு இருப்பவர்களின் தேவையற்ற எடை அதிகரிப்பு கட்டுக்குள் வரும்
 உடல் சுறுசுறுப்பு அடையும் 
உடல் சோர்வு குறையும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையும் 

குறிப்பு :

காலை வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுபவர்கள் காலை பதினொரு மணி அளவில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்1.

புதினா :-

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயே வராது 
எனவே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் புதினாக் கீரையை சேர்த்து வர வேண்டும் 

முருங்கைக்கீரை :-

வாரம் நான்கு நாட்களாவது முருங்கைக் கீரை சூப்பாகவோ உணவாகவோ 
அல்லது நிழலில் காயவைத்து அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வர மிகப் பெரிய அளவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

குறிப்பாக சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் வெளியேறுவது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு கட்டுக்குள் வரும்.

மஞ்சள் பூசணி :-

சர்க்கரை அதிகமான அளவு 400 -- 500 என்று இருக்கும்போது கூட மஞ்சள் பூசணிக்காயை உணவில் தினமும் சேர்த்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

No comments:

Post a Comment