Monday, December 16, 2019

ஒரு இனிப்பான செய்தி கேக்கிரிங்களா

ஒரு இனிப்பான செய்தி கேக்கிரிங்களா???


உங்கள் சட்எந்தடைக் காலரில் உள்ள அழுக்கு  சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; எனவே சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் *பாஸ்போரிக் ஆசிட்* லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து *சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்  சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைs சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

(முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள்..

Friday, November 22, 2019

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்


ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.



நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.



நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.



நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.


பகிர்வு...

Thursday, November 21, 2019

New Syllabus | பொது அறிவு | தமிழகத்தின் சமூக நலத்திட்டங்கள் பற்றிய வினா விடைகள்

New Syllabus | பொது அறிவு | தமிழகத்தின் சமூக நலத்திட்டங்கள் பற்றிய வினா விடைகள்


தமிழகத்தின் சமூக நலத்திட்டங்கள்

✍ தமிழ் மொழியிலான சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் விதமாகச் சிறந்த தமிழ் நு}ல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1947

✍ தமிழக நகரங்களின் பழமையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு எத்தனை நகரங்களைத் தமிழ்நாட்டின் பிராதான நகரங்கள் என்று அறிவித்துள்ளது? - 54

✍ தமிழ்நாடு அரசு அறிவித்த பிராதான நகரங்களின் முதல் பட்டியலில் எத்தனை நகரங்கள் இடம் பெற்றிருந்தன? - 39

✍ ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் எது? - தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்

✍ தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கான நிதியுதவி, 2009 - 2010 முதல் இந்திய அரசு வழங்குவதால், இத்திட்டத்திற்கு ------------ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - தேசிய சமூக உதவித் திட்டம் (National Social Assistance Scheme)
✍ ஆதரவற்ற முதியோர்களுக்கு எந்த திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 10 கிலோ அரிசி இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது? - அன்ன பூர்ணா திட்டம்

✍ வறுமையில் வாழும் ஏழைக் குடும்பத்தில் உழைத்து பொருளீட்டும் நபர் இறந்து போய்விட்டால் அந்தக் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் பெயர்? - தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்

✍ தமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம் தமிழக அரசால் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? - 1989

✍ திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டத்தை எம்.ஜி.ஆர் அவர்களால் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? - 1983

✍ தமிழகத்திலுள்ள சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்குவதற்காக, தென்னிந்தியாவில் செயல்படுத்தப்பட்ட நதிநீர் வழங்கல் திட்டத்தின் பெயர்? - தெலுங்கு கங்கைத் திட்டம்

✍ தொட்டில் குழந்தை திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மாநிலம் எது? - தமிழ்நாடு

✍ தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு? - 1992

✍ தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் முதன்முறையாக எந்த மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது? - சேலம்

✍ பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் எந்த ஆண்டு துவக்கப்பட்டது? - 1958

✍ அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டத்தின் பெயர்? - பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம்

பொது அறிவு வினா விடைகள் - அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காகத் துவங்கப்பட்ட இயக்கம்??? பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள் - அகிம்சா வழியில்மரங்களையும்  காடுகளையும் பாதுகாப்பதற்காகத் துவங்கப்பட்ட இயக்கம்???


பொது அறிவு வினா விடைகள் 



💠இணைப்பு மற்றும் தசைத்திசுக்களில் உருவாகும் புற்றுநோய் எந்த வகையைச் சார்ந்தது? - சார்கோமா

💠புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் ------------ என்று பொருள். - நண்டு

💠புற்றுநோய் பற்றிய அறிவியல் படிப்புக்கு -------------- என்று பெயர். - ஆன்காலஜி

💠புற்றுநோய் செல்கள் மனித உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கு இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு ---------- என்று அழைக்கப்படுகிறது. - மெட்டாஸ்டாசிஸ்

💠உலக புற்றுநோய் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? - பிப்ரவரி 4

💠தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? - நவம்பர் 7

💠புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - கார்சினோஜென்கள் அல்லது புற்றுநோய் காரணிகள்

💠புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள் ------------ வைரஸ்கள் என அழைக்கப்படுகின்றன. - ஆன்கோஜெனிக்

💠இந்தியாவின், HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி என அழைக்கப்படுபவர் யார்? - டாக்டர் சுனிதி சால்மோன்

💠1980-ம் ஆண்டு சென்னையில், எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தியவர்? - டாக்டர் சுனிதி சால்மோன்

💠உலக எய்ட்ஸ் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? - டிசம்பர் 1

💠மனித உடலில் HIV வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் சோதனையின் பெயர் என்ன? - எலைசா மற்றும் வெஸ்டர்ன் பிளாட் சோதனை

💠அகிம்சா வழியில் மரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காகத் துவங்கப்பட்ட இயக்கம்? - சிப்கோ இயக்கம்

💠சிப்கோ இயக்கம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது? - 1973

💠சிப்கோ இயக்கம் முதன் முதலில் எங்கு துவங்கப்பட்டது? - சாமோலி(உத்தரகாண்ட்)

Powerful Study Technique to Score Good Marks

Powerful Study Technique to Score Good Marks




Govt Examல் வெற்றி பெற சில குறிப்புகள்

Govt Examல் வெற்றி பெற சில குறிப்புகள்



FINAL CUT-OFF TNUSRB


FINAL CUT-OFF TNUSRB


Wednesday, November 13, 2019

கிருட்டினகிரி ஊரக வளர்ச்சி துறை பணி வாய்ப்பு

கிருட்டினகிரி ஊரக வளர்ச்சி துறை பணி வாய்ப்பு



https://krishnagiri.nic.in/notice_category/recruitment/

ஈரோடு ஊரக வளர்ச்சித்துறை வேளைவாய்ப்பு


ஈரோடு ஊரக வளர்ச்சித்துறை வேளைவாய்ப்பு


Click here go to official site and download application.









Recruitment
TitleDescriptionStart DateEnd DateFile
Recruitment for the post of Panchayat Secretary in Nambiyur Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Nambiyur Block of Rural Development and Panchayat Raj Department, Erode district
09/11/201925/11/2019View (723 KB) 
Recruitment for the post of Panchayat Secretary in Gobichettipalayam Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Gobichettipalayam Block of Rural Development and Panchayat Raj Department, Erode district
09/11/201925/11/2019View (708 KB) 
Recruitment for the post of Panchayat Secretary in Anthiyur Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Anthiyur Block of Rural Development and Panchayat Raj Department, Erode district
09/11/201925/11/2019View (696 KB) 
Recruitment for the post of Panchayat Secretary in Ammapettai Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Ammapettai Block of Rural Development and Panchayat Raj Department, Erode district
09/11/201925/11/2019View (728 KB) 
Recruitment for the post of Panchayat Secretary in Bhavani Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Bhavani Block of Rural Development and Panchayat Raj Department, Erode district
09/11/201925/11/2019View (708 KB) 
Recruitment for the post of Panchayat Secretary in Chennimalai Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Chennimalai Block of Rural Development and Panchayat Raj Department, Erode district
09/11/201925/11/2019View (723 KB) 
Recruitment for the post of Panchayat Secretary in Modakkuruchi Block of Rural Development and Panchayat Raj Department Erode district
Applications are invited for the post of Panchayat Secretary in Modakkuruchi Block of Rural Development and Panchayat Raj Department, Erode district

09/11/201925/11/2019View (736 KB) 
Recruitment for the post of Night Watchman in Rural Development and Panchayat Raj Department Erode
Applications are invited for the post of Night Watchman in Rural Development and Panchayat Raj Department, Erode district

09/11/201925/11/2019View (474 KB) 
Recruitment for the post of Office Assistant in Rural Development and Panchayat Raj Department Erode
Applications are invited for the post of Office Assistant in Rural Development and Panchayat Raj Department, Erode district

09/11/201925/11/2019View (502 KB) 
Recruitment for the post of Record Clerk in Rural Development and Panchayat Raj Department Erode
Applications are invited for the post of Record Clerk in Rural Development and Panchayat Raj Department, Erode district

09/11/201925/11/2019View (463 KB)