Pages

Wednesday, September 4, 2019

உயிர்காக்கும் மருந்து

உயிர்காக்கும் மருந்து


மனிதன் உயிர் வாழ்வதற்காக தன் வாழ்க்கையில் இரண்டுவிதமான போராட்டங்களை சந்திக்கின்றான். ஒன்று தொழில், வருமானம் போன்ற உணவின் தேடலுக்கான போராட்டம். 

இரண்டாவது தன் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் நோய்கள்,  விபத்துகள் போன்ற அசம்பாவிதங்களை எதிர்கொள்வதற்கான போராட்டம்.

இரண்டாவதாக ஏற்படும் போராட்டமான அவசரநிலைகளில்  தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் தவறாக முதல் உதவி வழங்கப்படுவதாலும் பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அல்லது இறக்க நேரிடுகின்றன.

வாகன விபத்துகள், சண்டைகள், தவறி விழுதல், இருதய உபாதைகள், இரசாயன கலவைகளின் உபயோகம், மின்சாரம், நெருப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களால் எதிர்பாராத விதமாக திடீரென ஒருவரோ அல்லது பலரோ ஆபத்தான நிலைக்கு ஆளாகின்றார்கள்.

அவர்கள் நமது உறவினர்களாகவோ, நண்பர்களாவோ அல்லது அறியாத ஒருவராகவோ இருக்கலாம். அவர்களுக்கு தகுந்த முதலுதவி அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். 

பொதுவாக முதலுதவி பயிற்சிகள் Red Cross, St.John Ambulance, போன்ற பல நிறுவகனங்களாள் எல்லா நாடுகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் எல்லோராலும் இதுபோன்ற முதலுதவியை கற்றுக்கொள்வது சாத்திமில்லை. 

ஆனால் இப்போது நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் முதலுதவிக்கு எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை. தனித்திறமையும் தேவையில்லை.
மூன்று வயது சிறுவர் முதல், முதியவர்கள் வரை எவரும் இலகுவாக சிகிச்சை அளிக்கலாம். அது எப்படி என கட்டுரையின் முடிவில் பார்க்கலாம்.

நமது கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களும், நிலம், நீர், நெருப்பு, மரம், வெளி மண்டலம் ஆகிய ஐந்து இயற்கை மூலப்பொருள்களுடன் தொடர்புகொண்டுள்ளது.

கண்களால் காணக்கூடிய அதிர்ச்சிகள், காதால் கேட்கக்கூடிய அதிர்ச்சிகள், தோல், மூக்கு, நாக்கு, ஆகியவற்றால் உணரக்கூடிய அதிர்ச்சிகள் யாவும் மனிதனை எந்த சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இழக்கச் செய்கின்றன.

பஞ்சபூத தன்மைகளில் ஒன்றாகிய மரம் என்பதை நமது உடல் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் தொடர்பு படுத்தி  ஒரு உவமையாகக் சீன மருத்துவம்  குறிப்பிடுகிறது. 

காரணம் மரத்தின் உறுதித் தன்மையைப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஒரு மரம் உறுதியாக இருக்க வேண்டுமென்றால் அதன் வேர்ப்பகுதி பூமியில் ஊடுருவி  நன்றாகப் பதிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் புயல், மழை, சூறாவளிக் காற்றுப் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்க்கொண்டு மண்ணில் சரியாமல் உறுதியுடன் நிற்கும்.

அதுபோல யாருக்கெல்லாம் கல்லீரலும், பித்தப்பையும் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றதோ அவர்களை எந்த இக்கட்டான சூழ்நிலையும் பாதிக்காது. 

ஒரு அதிர்ச்சியோ, பயமோ, கவலையோ அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.  
மன உறுதியுடன் இருப்பார்கள்.

உதாரணமாக ஒரு 
வாகன விபத்து, தீக்காயம் திகில்  போன்ற நிலைகளில் மனம் பதட்டமடைதல் இயற்கையே. அந்தமாதிரி சூழ்நிலைகளில் என்ன செய்வதென்று தெரியாமல் நமது மனம் குழப்பமடைந்து இருக்கும். 

அப்போது மன உறுதி உடையவர்கள் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பி, சூழ்நிலைக்கு தக்கவாறு என்ன செய்யவேண்டும் என முடிவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மன பலவீனம் உடையவர்களால் அவ்வாறு சிந்திக்க முடியாது. அதனால் தான் சீன அக்குபங்சர் மருத்துவம் மரத்துக்கும் மனதுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது.

மரத்துக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை பார்த்தோம். மேலும் இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதையும் பார்த்தோம். 

அவ்வாறு இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும்  இழப்புகளையும், ஆபத்தான  நிலைகளையும் கையாண்டு சரிசெய்ய பஞ்சபூதங்களில் ஒன்றான மரமே அந்தற்குண்டான மருந்தை வழங்குகிறது.

இயற்கையின் மரம் என்கிற மூலப்பொருள் மூலம் பெறப்படும் மருந்துகள்தான் நமக்கு நிவாரணத்தை அளிக்கிறது.

இம்மருந்துகள் பலதரப்பட்ட நிலைகளில் பக்கவிளைவுகள் இன்றி மென்மையாக, ஆனால் உறுதியாக நிவாரணமளிக்கின்றது.

இம்மருந்தை உபயோகிப்பதும் பாதுகாப்பதும் நம்முடன் எடுத்துச் செல்வதும் மிகவும் எளிமையானது, 

எல்லாவித மருத்துவ முறைகளுடனும் இதை உபயோகப்படுத்தலாம்.

இம் மருந்தை பயன்படுத்துபவர்களுக்கு  எலும்பு முறிவு, பலத்த வெளிக்காயம், நீண்ட தையல் போடும் தேவை, ICU வில் தான் சேர்க்க வேண்டும் என்கிற நிலைமை போன்ற தருணங்களைத்  தவிர மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. 

இனிமேல் உங்கள் முதலுதவி சிகிச்சைக்கான பெட்டியில் ஸ்பிரிட், தையல் ஊசி, ஆயிண்ட்மென்டுகள், மருந்து பவுடர்கள், காடாதுணி போன்ற எதையும் வைத்திருக்கம் தேவைகள் ஏற்படாது.  இந்த மருந்து ஒன்று இருந்தாலே  போதுமானது.

உங்கள் பாக்கெட்டில் பணமில்லா விட்டாலும் பரவாயில்லை.  அவசியம் இந்த மருந்து இருக்கவேண்டும். எல்லாவித ஆபத்தான நேரங்களிலும் பயன்படும் முக்கிய மருந்தாகும்.

அந்த உயிர்காக்கும் மருந்து எது? அதை எவ்வாறு உபயோகப்படுத்துவது. எந்தெந்த தருணங்களில் அந்த மருந்து வேலைச் செய்யும், மருத்துவம் தெரியாதவர்களும் அதை எவ்வாறு உபயோகிப்பது   போன்ற அனைத்து விளக்க முறைகளையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம். நன்றி. 

No comments:

Post a Comment