பொதுத்தமிழ் - வழுவுச் சொற்களை நீக்குதல்
வட்டார வழக்குச் சொற்களும் சமுதாய கிளைமொழிகளும் இலக்கண நு}ல் ஆசிரியர்களால் வழுவுச் சொற்களாக கருதப்படுகின்றன.
💢 அண்ணாக்கயிறு - அரைஞாண்கயிறு
💢 அடிச்சுட்டாள் - அடித்துவிட்டாள்
💢 அருவாமனை - அரிவாள்மனை
💢 என்ன ஆச்சு - என்ன ஆயிற்று?
💢 ஆவராம் - ஆவிரம்பு
💢 ஈர்கலி - ஈர்கொல்லி
💢 உடமை - உடைமை
💢 உடம்படிக்கை - உடன்படிக்கை
💢 ஊரணி - ஊருணி
💢 எடஞ்சல் - இடைஞ்சல்
💢 எண்ணை - எண்ணெய்
💢 எழவு - இழவு
💢 எடறு - இடறு
💢 ஏழரை நாட்டுச்சனி - ஏழரையாட்டைச்சனி
💢 ஒட்டரை - ஒட்டடை
💢 உசிர் - உயிர்
💢 சிய்க்காய் - சீகைக்காய்
💢 சுவற்றில் - சுவரில்
💢 ஒத்தடம் - ஒற்றடம்
💢 சிகப்பு - சிவப்பு
💢 வலது பக்கம் - வலப்பக்கம்
💢 தலகாணி - தலையணை
💢 முயற்சித்தார் - முயன்றார்
💢 ஆம்பளை - ஆண்பிள்ளை
💢 புஞ்சை - புன்செய்
💢 அருகாமை - அருகில்
💢 பாவக்காய் - பாகற்காய்
💢 அடமழை - அடைமழை
💢 புண்ணாக்கு - பிண்ணாக்கு
💢 பண்டகசாலை - பண்டசாலை
💢 நோம்பு - நோன்பு
💢 நாகரீகம் - நாகரிகம்
💢 தோப்பனார் - தகப்பனார்
💢 நோவற்ற - நோயற்ற
💢 தாப்பாள் - தாழ்ப்பாள்
💢 ஒருக்கால் - ஒருகால்
💢 கத்திரிக்காய் - கத்தரிக்காய்
💢 சித்த நாழி - சிறிது நாழிகை
பிறமொழிச் சொற்களை நீக்குதல் பற்றி நாளை தெரிந்துகொள்வோம்..!!
No comments:
Post a Comment