Pages

Friday, February 15, 2019

###CURRENT_AFFAIRS | முதல்வர் அதிரடி : விவசாயிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை !! இன்றைய முக்கிய செய்திகள் பிப்ரவரி 14

முதல்வர் அதிரடி : விவசாயிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை !!

இன்றைய முக்கிய செய்திகள்
பிப்ரவரி 14



உலகச் செய்திகள்

புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி உலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளான். 

மாநிலச் செய்திகள்

தமிழ்நாட்டில் விவசாய நிலங்களில் எத்தனை மதுக்கடைகள் உள்ளன என்பது பற்றி அறிக்கைத் தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தலா ரூ.6000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

விதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

மாவட்டச் செய்திகள்

சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களின் மீது தேவையற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாது எனவும், இதனால் காவல்துறைக்கு பொதுமக்கள் தயக்கமின்றி தகவல்களைத் தரலாம் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேலு}ர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சாதியில்லா-மதமில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்ற வழக்கறிஞர் இந்த சான்றிதழை திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தியிடம் இருந்து பெற்றுள்ளார். 

விளையாட்டுச் செய்திகள் 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 என்ற கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்ததால், இங்கிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் 5வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 12வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்-ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதின. இதில் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்ட கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-14, 11-15, 15-11, 15-9, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணியை வீழ்த்தியது.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

No comments:

Post a Comment