Pages

Wednesday, February 27, 2019

###சிறுதானிய பிஸ்கட்

சிறுதானிய பிஸ்கட் ..!!


பிஸ்கட் எவ்வாறு வந்தது? 1500ஆம் நு}ற்றாண்டுகளில் கடல்வழி வணிகம் தான் அதிகம். அவ்வாறு செல்லும்போது தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க உணவுப்பொருட்களோடு, சமையல்காரர்களையும் அழைத்து செல்லவேண்டி இருந்தது. அவ்வாறு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் இருந்தமையால் சுலபமாக சமைக்கும் மற்றும் நீண்ட நாள் வைத்து உண்ணும் அளவிற்கு ஒரு உணவை கண்டுபிடிக்க முற்பட்டனர் கடல்வழி வணிக மாலுமிகள்.

பதப்படுத்தப்பட்ட தானியங்களின் அறிமுகம் ஒரு நம்பகமான உணவை வழங்கியது. எகிப்திய மாலுமிகள் 'தாவோர் கேக்" என்று அழைக்கப்படும் கம்பு கொண்டு செய்யப்பட்ட தடிமனான ரொட்டியை தயாரித்தனர். இதனை ரோமர்கள் 'பிஸ்கெலூம்" என அழைக்கப்படும் 'பிஸ்கட்" என்று அழைத்தனர். இது கடல்வழி பயணங்களின்போது பசியை போக்கியது.

இவ்வாறு தோன்றிய பிஸ்கட் உலகெங்கிலும் பரவி இன்று தினசரி பயன்படும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பிஸ்கட் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ கம்பு போன்ற சிறுதானியங்களை கொண்டுதான்.

ஆனால், பிஸ்கட் உற்பத்தியை தொழிலாக கொண்ட பல நிறுவனங்கள் இதனை மேம்படுத்துவதற்காக உற்பத்தியில் பல வேதிப்பொருட்களை சேர்த்தனர். இதில் உள்ள வியாபார நோக்கம் என்னவென்றால் குழந்தைகளை கவரும் வகையில் இந்த பாக்கெட்டுகளின் கவர்களுடைய வண்ணம் அமைக்கப்படுகிறது. இப்படி கலப்படமான பிஸ்கட் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமை என்னவென்றால்,

செரிமானக் கோளாறு

நீரிழிவு நோய்

மலச்சிக்கல்

புற்றுநோய்

வளர்சிதை மாற்றம் என பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

இன்றுள்ள சூழ்நிலையில் பிஸ்கட் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இப்படி இருக்கையில் நாம் இதை உடனே பயன்பாட்டிலிருந்து தவிர்க்க முடியாது.

நமது பாரம்பரிய முறையில் நமது பாரம்பரிய பொருட்களான கம்பு, ராகி, வரகு, சாமை என சிறுதானியங்களை கொண்டு எந்த வேதிப்பொருட்களும் சேர்க்காமல் செய்யப்படும் பிஸ்கட்டை உண்ணும்போது வேதிப்பொருட்களின் பக்கவிளைவும் நம்மை பாதிக்காது.

கம்பு பிஸ்கட்டின் நன்மை :

உடல் சு+டு தணியும்.

அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

உடல் புத்துணர்வு பெறும்.

உடல் பலம் பெறும்.

ராகி பிஸ்கட்டின் நன்மை :

எலும்புகள் வலுப்படும்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கும்.

உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

குடலுக்கு வலிமை அளிக்கும்.

தினை பிஸ்கட்டின் நன்மை :

உடலுக்கு தேவையான புரதச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்துள்ளன.

இரும்புச்சத்தின் அளவும், கால்சியமும் தானியங்களை விட தினையில் இருமடங்கு உள்ளது.

உடலை வலுவாக்கும்.

சிறுநீரை பெருக்கும்.

இதயத்தை பலப்படுத்தும்.

No comments:

Post a Comment