Pages

Wednesday, January 9, 2019

###CURRENT AFFAIRS - 2018 | தனி நபர் சாதனைகள் ஒரு பார்வை

CURRENT AFFAIRS - 2018
தனி நபர் சாதனைகள் ஒரு பார்வை..!!
தனி நபர் சாதனை - 2018 - பகுதி - 2!!


2018-ல் தனி நபர் சாதனைகளை பலர் நிகழ்த்தி உள்ளனர். அவற்றைப் பற்றி காண்போம்.


மே :

✒ மே 29ஆம் தேதி, உலகிலேயே மூன்றாவது உயர மலையான கஞ்சன்சங்கா மீது ஏறி சாதனை புரிந்துள்ளார் நொய்டாவை சேர்ந்த மலையேற்ற வீரர் அர்ஜுன் வாஜ்பாய். உலகெங்கிலும் உள்ள 8,000 மீட்டருக்கு உயரமான 14 மலைகளை கடந்து சாதனை புரிவதே அர்ஜுனின் இலக்கு. இதுவரை இவ்வாறு 6 மலைகளை கடந்துள்ளார். 

✒ 53 வயதான, முன்னாள் அழகி மற்றும் தொழிற்முனைவோரான, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா பாகல் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய வயதான இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

ஜூன் :

✒ பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான சிறிய மேசையுடன் கூடிய, ஸ்கூல் பேக்-கை, கான்பு+ர், ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

✒ மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோர் நகரைச் சேர்ந்தவர் சதேந்திர சிங் (29) கால்கள் செயலிழந்த நிலையிலும் தனது விடாமுயற்சியால் ஆங்கிலக் கால்வாயை நீச்சல் அடித்து கடந்து சாதனைப் படைத்துள்ளார். 

✒ திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர;ந்த கார;த்திகேயன் - தேவிபிரியா தம்பதியரின் மகள் பிரிஷா. இவர; சர;வதேச யோகா தினத்தையொட்டி தண்ணீருக்குள் 8 விதமான யோகாசனம் செய்து உலக சாதனைகளை நிகழ்த்தினார;.

ஜூலை :

✒ உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆகஸ்ட்

✒ இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட துபாயில் வாழும் முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான் உடன் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த போட்டியில் 22 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியின்போது இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை 11 மணி நேரம் 33 நிமிடங்களில் சுற்றி பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும், மகனும். இதற்கு முன்னதாக கின்னஸ் சாதனையில் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட இந்த சாதனை தற்போது 12 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு தந்தையும் மகனும் கின்னஸில் இடம் பிடித்துள்ளனர்.

செப்டம்பர்

✒ உலகில் வயதான தம்பதி என்ற உலக சாதனையை ஜப்பான் ஜோடி பெற்றுள்ளது.

✒ டகாமாட்சு+ என்ற இடத்தை சேர்ந்த மியாவோ 1937-ம் ஆண்டு மசாவோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மசாவோ ராணுவ வீரர் என்பதால் இரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளில் பணியாற்றிவர். அவருக்கு 108 வயதாகிறது. இந்நிலையில் உலகில் நீண்ட காலம் சேர்ந்து வாழும் தம்பதி என்ற உலக சாதனையை மசாவோ-மியாவோ ஜோடி பெற்றுள்ளனர். இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜப்பானியர்கள் நீண்டகாலம் வாழ்வதற்கான காரணம் அவர்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

அக்டோபர் :

✒ கேரளாவில் முதியோர் கல்விக்கான எழுத்து தேர்வில் 96 வயது பாட்டி, 100-க்கு 98 மார்க் வாங்கி அசத்தி உள்ளார். அந்த மாநிலத்தில் முதியோர் கல்வி கற்க அக்சரலட்சம் என்ற திட்டத்தை கல்வித்துறை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுதியவர்களில் மிகவும் முதியவரான 96 வயது பாட்டி கார்த்தியானி 100-க்கு 98 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். 



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..


No comments:

Post a Comment