Pages

Saturday, December 29, 2018

###TNPSC CURRENT AFFAIRS -2018 இன்றைய முக்கியச் ?செய்திகள் - டிசம்பர் 27

ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்யக்கூடாது : அரசு உத்தரவு..!


###TNPSC CURRENT AFFAIRS -2018
இன்றைய முக்கியச் ?செய்திகள் - டிசம்பர் 27


உலகச் செய்திகள்

இந்தியாவில் உள்ள நேபாள மக்கள், இந்தியில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய தடை விதித்து நேபாள அரசு நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேபாள நாட்டின் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதால், அதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
ஸ்ரீ
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபு+ஜை நிறைவடைவதையொட்டி, இன்று இரவு நடை மூடப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவில் 17 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டும், பரப்புரை உத்திகளை செயல்படுத்துவதற்கும் இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக, தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முத்தலாக் எனப்படும் உடனடி விவாகரத்து மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது நாடாளுமன்றம் வரவேண்டும் என அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

உடல் பருமன் குறித்து பள்ளிகளில் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.

புயல், வெள்ளம், நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பாக சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் முதல் தாள் மார்ச் 14-ம் தேதி பிற்பகலிலும், தமிழ் இரண்டாம் தாள் 18-ம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் முதல் தாள் 20-ம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் இரண்டாம் தாள் 22-ம் தேதி பிற்பகலில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிற பாடங்களான, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் முறையே 23,25,27,29 ஆகிய நாட்களில் முற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்.
..
சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி வழிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17வது சதம் இதுவாகும்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடக்கி வைத்தார்.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் அணி.


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

No comments:

Post a Comment