Pages

Friday, December 21, 2018

#TNPSC-ஃபேஸ்புக்கில் திடீர் மாற்றம்..!! இன்றைய முக்கியச் செய்திகள் - டிசம்பர் 20


#TNPSC-ஃபேஸ்புக்கில் திடீர் மாற்றம்..!!
இன்றைய முக்கியச் செய்திகள் - டிசம்பர் 20


உலகச் செய்திகள்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனத்தில், இந்திய வம்சாவளி அதிகாரி கரன்தீப் ஆனந்த் தலைமை பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். கரன்தீப், இதுநாள் வரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் சீனியர் எக்ஸிகியு+ட்டிவாக பணியாற்றி வந்தார். கரன்தீப், இனிமேல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜூலியன் கடோரினியுடன் இணைந்து பணியாற்றுவார்.

யு+கோ வங்கியின் மூலம், ஈரான் நாட்டின் 5 வங்கிகளில் ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெயை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா விமான படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு பெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் (யுசை ஊhநைக ஆயசளாயட டீசைநனெநச ளுiபொ) கலந்து கொண்டு, இருநாடுகளின் விமானப்படை வீரர்களை சந்தித்து உரையாடி, பாராட்டுத் தெரிவித்தார்.

கர்நாடகா அரசு, அரசு மருத்துவக்கல்லு}ரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட்டணத்தை 200 சதவிகிதமும், மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணத்தை 500 சதவிகிதமும் உயர்த்தியுள்ளது.

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா நிறைவேறியது. இதன்படி, குழந்தை பெற்றுத்தர பணம் கொடுத்து ஒருவரை வாடகைத்தாயாக அமர்த்த முடியாது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 6 மாதகால கவர்னர் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வருகிறது என்று அதிகாரப்பு+ர்வ உத்தரவு அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு இன்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி உள்ளது. இதுபோல், ஓடும் ரயில்களிலும் இலவச வைபை வசதியை ஏற்படுத்த மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ராஜ்தானி, ஆகஸ்ட் கிராந்தி, சதாப்தி எஸ்பிரஸ் போன்ற ரயில்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மாவட்டச் செய்திகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பில் 20 ஆயிரத்து 654 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 10 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பிளஸ்-2 அரையாண்டு, உயிரியல் தேர்வுக்கான வினாத்தாள், 'ஷேர் சேட்" என்ற செல்போன் செயலியில் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள் 
பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடக்கிறது.

புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்கள+ரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின், இறுதிக்கட்டத்தில் பாட்னா அணியினர் துடிப்பாக விளையாடி 40-40 என சமநிலைக்கு கொண்டு வந்தனர்.


No comments:

Post a Comment