Pages

Tuesday, July 24, 2018

சத்துமாவு__தயாரிக்கும்__முறை

சத்துமாவு தயாரிக்கும் முறை !!!


ஹீலர், எம், உமர் பாருக், எம்டி, அக்கு

இதுதான் உண்மையான சத்துமாவு  இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது

#தேவையான_பொருட்கள்:


  1. ராகி 2 கிலோ 
  2. சோளம் 2 கிலோ
  3. கம்பு 2 கிலோ 
  4. பாசிப்பயறு அரை கிலோ 
  5. கொள்ளு அரை கிலோ 
  6. மக்காசோளம் 2 கிலோ
  7. பொட்டுக்கடலை ஒரு கிலோ 
  8. சோயா ஒரு கிலோ 
  9. தினை அரை கிலோ 
  10. கருப்பு உளுந்து அரை கிலோ 
  11. சம்பா கோதுமை அரை கிலோ
  12. பார்லி அரை கிலோ 
  13. நிலக்கடலை அரை கிலோ 
  14. அவல் அரை கிலோ 
  15. ஜவ்வரிசி அரை கிலோ 
  16. வெள்ளை எள் 100 கிராம் 
  17. கசகசா 50 கிராம் 
  18. ஏலம் 50 கிராம் 
  19. முந்திரி 50 கிராம் 
  20. சாரப்பருப்பு 50 கிராம்
  21. பாதாம் 50 கிராம் 
  22. ஓமம் 50 கிராம் 
  23. சுக்கு 50 கிராம் 
  24. பிஸ்தா 50 கிராம் 
  25. ஜாதிக்காய் 2 
  26. மாசிக்காய் 2

#செய்முறை :


ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

#பயன்கள்


1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். 

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். 

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. 
6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. 

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். 

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

#குறிப்பு:
#6_மாதம்_கெடாது


1.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. 

2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை. 

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.🎯

நன்றி:

அல் சுமையா அக்குபஞ்சர் கிளினிக்
ISO 9001-2015 தரச்சான்றிதல் பெற்றது
ஹீலர், எம், உமர் பாருக், எம்டி, அக்கு
மொபைல் :8508466924, 7010113713
திருச்சி. 620001


வயிற்றின் செயல்பாடுகள் குறித்து அறிய  என்னும் பதிவைக்காண



Emergency Acu Point-அவசரநிலை அக்குபுள்ளி என்னும் பதிவைக்காண 


தைராய்டு பாட்டி வைத்தியம் என்னும் பதிவைக்காண 



இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிட--மிருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

No comments:

Post a Comment